search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தி.மு.க.-வினர் துணையோடுதான் கள்ளச்சாராயம் விற்பனை - இ.பி.எஸ். குற்றச்சாட்டு
    X

    தி.மு.க.-வினர் துணையோடுதான் கள்ளச்சாராயம் விற்பனை - இ.பி.எஸ். குற்றச்சாட்டு

    • கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்.
    • கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் எத்தனை பேர்? சிகிச்சையில் உள்ளவர்கள் எத்தனை பேர்?

    சென்னை:

    சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    * மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கள்ளக்குறிச்சி நகரின் மையப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை நடந்துள்ளது.

    * காவல் நிலையத்தில் இருந்து வெறும் 200 மீட்டர் தொலைவில் கள்ளச்சாராயம் விற்பனை செய்கிறார்கள்.

    * இந்த ஆட்சி நிர்வாகம் எப்படி இருக்கிறது? உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது.

    * சட்டசபையில் தி.மு.க. அரசு ஜனநாயக படுகொலையை அரங்கேற்றியுள்ளது.

    * பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக எதிர்க்கட்சி தலைவராக சட்டசபையில் குரல் கொடுக்க முடியவில்லை.

    * காவல் அதிகாரிகளுடன் பல ஆய்வு கூட்டங்கள் நடத்தியும் சாராய விற்பனையை தடுக்க முடியவில்லையா?

    * கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்.

    * கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் எத்தனை பேர்? சிகிச்சையில் உள்ளவர்கள் எத்தனை பேர்?

    * கள்ளச்சாராயம் குடித்தவர்களை காப்பாற்றும் குறிப்பிட்ட மருந்து அரசு மருத்துவமனையில் இல்லை. போதிய மருந்து இருப்பதாக அமைச்சர் எ.வ.வேலு பச்சை பொய் கூறுகிறார். குறிப்பிட்ட மருந்து இல்லாததால் பல மரணம் நிகழ்ந்துள்ளது.

    * கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் நடப்பது என்ன? உண்மை மறைக்கப்படுகிறது.

    * கள்ளச்சாராயம் உயிரிழப்புகளை மறைக்க ஆட்சியராக இருந்த ஷ்வரன் குமார் முயன்றார். தி.மு.க. அரசின் நிர்பந்தத்தால் ஷ்வரன்குமார் கள்ளச்சாராய பலி இல்லை என பொய் கூறினார். 3 பேர் உயிரிழந்த போதே கள்ளச்சாராயம் தான் காரணம் என கூறியிருந்தால் பலி அதிகரித்திருக்காது. பலி எண்ணிக்கை 50ஐ தாண்டியதற்கு கள்ளச்சாராயம் காரணம் இல்லை என கலெக்டர் கூறியது தான்.

    * எஸ்.பி.யை சஸ்பெண்ட் செய்த முதலமைச்சர் ஆட்சியரை மட்டும் பணியிட மாற்றம் செய்தது ஏன்?

    * திமுகவினர் துணையோடு தான் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்றுள்ளது.

    * கள்ளச்சாராய வியாபாரி கண்ணுக்குட்டி வீட்டில் திமுக தலைவர்கள் புகைப்படம் உள்ளன.

    * கள்ளச்சாராயத்தால் 50 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் மவுனம் காப்பது ஏன்? கண்டனம் தெரிவிக்காதது ஏன்?

    * கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெறுபவர்கள் குறித்த அறிக்கையை ஏன் வெளியிடவில்லை?

    * எத்தனை பேர் சிகிச்சை, எத்தனை பேர் கவலைக்கிடம் என ஜிப்மர் மருத்துவமனை அறிக்கை வெளியிடுகிறது. ஜிப்மர் போல் கள்ளக்குறிச்சி, சேலம் மருத்துவமனைகள் அறிக்கை வெளியிடாதது ஏன்?

    இவ்வாறு அவர் அடுக்கடுக்கான பல கேள்விகளை எழுப்பினார்.

    Next Story
    ×