என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
சபாநாயகர் நடுநிலை தவறி செயல்படுகிறார்- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
- கள்ளச்சாராய விவகாரத்தை விட சட்டசபையில் பேச வேறு என்ன முக்கிய பிரச்சனை உள்ளது?
- கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளால் தமிழ்நாடே கொதித்துப்போயுள்ளது.
சென்னை:
சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து அனுமதிக்கப்பட்ட 146 பேரில் 50 பேர் பலியானதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
* கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், ஜிப்மரில் 96 பேர் சிகிச்சை பெற்றுவருதாக செய்திகள் வந்துள்ளன. ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 19 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது.
* சிகிச்சை பெறும் பலருக்கு கண்பார்வை தெரியவில்லை என செய்திகள் வந்துள்ளன.
* நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் சம்பவம் குறித்து பேச வாய்ப்பளிக்கவில்லை.
* கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளால் தமிழ்நாடே கொதித்துப்போயுள்ளது.
* கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிகள் குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுப்பு.
* மக்களின் பிரச்சனை சட்டமன்றத்தில் தான் பேச முடியும். இங்கு நடப்பது ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சி போல் உள்ளது.
* கள்ளச்சாராய விவகாரத்தை விட சட்டசபையில் பேச வேறு என்ன முக்கிய பிரச்சனை உள்ளது?
* சட்டசபை சபாநாயகர் நடுநிலை தவறி செயல்பட்டுள்ளார்.
* கள்ளச்சாராயம் குறித்து விவாதிக்க வலியுறுத்திய எதிர்க்கட்சிகள் மீது அடக்குமுறை நடந்துள்ளது.
* எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமாரை அலேக்காக தூக்கி கைது செய்ய முயன்றனர்.
* நிர்வாகத்திறனற்ற அரசு, பொம்மை முதலமைச்சர் என்பதால் கள்ளச்சாராய மரணம் நிகழ்ந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்