search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முட்டை விலை மீண்டும் 5 பைசா உயர்வு: ஒரு முட்டை ரூ.5.30 பைசாவாக நிர்ணயம்
    X

    முட்டை விலை மீண்டும் 5 பைசா உயர்வு: ஒரு முட்டை ரூ.5.30 பைசாவாக நிர்ணயம்

    • தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு முட்டை விலையை அறிவித்து வருகிறது.
    • கடந்த 26-ந்தேதி ரூ. 5.80 ஆக இருந்த முட்டை விலை 20 பைசா குறைக்கப்பட்டு ரூ. 5.60 ஆனது.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில், 1,000-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 6 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

    தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், விற்பனைக்காக தினசரி லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு முட்டை விலையை அறிவித்து வருகிறது. அதை பண்ணையாளர்கள் கடைபிடித்து வருகின்றனர். கடந்த 26-ந்தேதி ரூ. 5.80 ஆக இருந்த முட்டை விலை 20 பைசா குறைக்கப்பட்டு ரூ. 5.60 ஆனது. 27-ந் தேதி மீண்டும் 20 பைசா குறைக்கப்பட்டு ரூ. 5.40 ஆனது. 28-ந் தேதி மேலும் 20 பைசா குறைந்து ரூ. 5.20 ஆனது. 29-ந் தேதி முட்டை விலை சரிவில் இருந்து மீண்டு 5 பைசா உயர்ந்து ரூ. 5.25 ஆனது. நேற்று 30-ந்தேதி நாமக்கல் மண்டல தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற என்இசிசி கூட்டத்தில் முட்டை விலை மேலும் 5 பைசா உயர்த்தப்பட்டு 1 முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 5.30 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) சென்னை-600, பர்வாலா-425, பெங்களூரு-570, டெல்லி-450, ஐதராபாத்-495, மும்பை-570, மைசூர்-570, விஜயவாடா-490, ஹொஸ்பேட்-525, கொல்கத்தா-525.

    கோழிவிலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.140 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 98 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் (சிகா) நிர்ணயித்துள்ளது.

    Next Story
    ×