search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முகலிவாக்கத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முகாம்- மழைநீரை வடிய வைக்க தீவிர ஏற்பாடு
    X

    முகலிவாக்கத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முகாம்- மழைநீரை வடிய வைக்க தீவிர ஏற்பாடு

    • சென்னையில் நேற்றிரவு பெய்த பலத்த மழையால் மாங்காடு பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது.
    • முகலிவாக்கத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முகாமிட்டு மழை நீரை வடிய வைக்க ஏற்பாடு செய்து வருகிறார்.

    சென்னை:

    சென்னையில் நேற்றிரவு பெய்த பலத்த மழையால் மாங்காடு பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. அங்குள்ள வெள்ள நீர் கரைபுரண்டு முகலிவாக்கம், கொளப்பாக்கம் பகுதிக்கு வந்ததால் ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    முட்டளவுக்கு தண்ணீர் கிடப்பதால் அங்குள்ள மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். தகவல் அறிந்ததும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று காலையில் அந்த பகுதிக்கு நேரில் சென்றார். சேரும், சகதியுமாக மாறிய சாலைகளில் நடந்து சென்று மழைநீர் தேங்கிய பகுதிகளில் தண்ணீரை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    தொடர்ந்து முகலிவாக்கத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முகாமிட்டு மழை நீரை வடிய வைக்க ஏற்பாடு செய்து வருகிறார்.

    Next Story
    ×