search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாதம் ரூ.1000 வழங்கும் உரிமைத் தொகை திட்டம்: மேலும் 2.30 லட்சம் பெண்கள் இணைப்பு
    X

    மாதம் ரூ.1000 வழங்கும் உரிமைத் தொகை திட்டம்: மேலும் 2.30 லட்சம் பெண்கள் இணைப்பு

    • புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள், புதிதாக திருமணம் ஆன பெண்களுக்கு பணம் வழங்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    • கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விரைவில் மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

    சென்னை:

    மகளிர் உரிமை தொகையில் புதிய பயனாளிகள் சேர்க்கும் திட்டம் ஜூலை மாதம் நடைபெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    மகளிர் உரிமை தொகையில் புதிய விண்ணப்பதாரர்களை பெறுவதற்கான விண்ணப்பங்களை அச்சடிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு பெண்களிடம் வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விரைவில் மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த முறை இதில் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளதாகவும், குறிப்பாக, தமிழ்நாட்டில் கூடுதலாக 2.30 லட்சம் பேர் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    அதன் படி, இந்த முறை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கு, முன்னாள் மாநகராட்சி ஊழியர்களின் மனைவிகளுக்கு, புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள், புதிதாக திருமணம் ஆன பெண்களுக்கு பணம் வழங்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×