என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாளை சென்னை வருகிறார் மாயாவதி
- பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக 17ஆண்டுகளாக இருந்து வந்தார்.
- ஏராளமான இளம் வழக்கறிஞர்களை உருவாக்கி உள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் உள்ள வீட்டின் முன் வைத்து நேற்று வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்த பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாளை சென்னை வருகிறார்.
மாயாவதியின் நம்பிக்கையாக திகழ்ந்த ஆம்ஸ்ட்ராங், பள்ளிக் காலம் முதலே அரசியலில் ஆர்வமுடையவராக இருந்தார். சட்டம் படித்த இவர், கடந்த 2000-ம் ஆண்டு முதல் அரசியலில் ஈடுபட்டு வந்தார்.
அம்பேத்கர் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங், 2006-ல் டாக்டர் பீமாராவ் தலித் அசோசியேஷன் என்ற அமைப்பை உருவாக்கினார். 2006-ம் ஆண்டு சென்னை மாநகராட்சியின் 99-வது வார்டில் போட்டியிட்டு மாமன்ற உறுப்பினராக தேர்வானார்.
2007-ம் ஆண்டு மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். 2011-ம் ஆண்டில் அம்பத்தூர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக 17ஆண்டுகளாக இருந்து வந்தார். ஏராளமான இளம் வழக்கறிஞர்களை உருவாக்கி உள்ளார்.
தலித் மக்களுக்கு ஆதரவான போராட்டங்களை ஆம்ஸ்ட்ராங் தீர்க்கமாக முன்னெடுத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்