search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சாதிய மோதலில் பள்ளி மாணவன் தாக்கப்பட்டதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
    X

    சாதிய மோதலில் பள்ளி மாணவன் தாக்கப்பட்டதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

    • நாங்குநேரி பள்ளி மாணவர் சின்னத்துரை, அவரது சகோதரி தாக்கப்பட்டு உள்ளனர்.
    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவருக்கும் தேவையான உயரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2006-2011 தி.மு.க. ஆட்சியைப் போல, கடந்த 27 மாத கால தி.மு.க. ஆட்சியிலும் சாதிய மோதல்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சாதி பாகுபாட்டினால் ஏற்பட்ட பிரச்சினையால் நெல்லை மாவட்டம், நாங்குநேரி பள்ளி மாணவர் சின்னத்துரை, அவரது சகோதரி தாக்கப்பட்டு உள்ளனர்.

    இந்தத் தாக்குதல் சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. மாணவர்களின் எதிர்காலத்திற்கு அச்சாரமாக விளங்கக்கூடிய பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது மிகவும் கவலை அளிக்கிறது.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவருக்கும் தேவையான உயரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அவர்களுக்குத் தேவையான நிதி உதவியை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்.

    சட்டம்-ஒழுங்கை தன் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, மாணவனை தாக்கியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×