search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான 'ஆரஞ்சு அலர்ட்'

    • சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இரவு நேரங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளது.
    • வருகிற ஞாயிற்றுக்கிழமை திருப்பூா், திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் 'மஞ்சள்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் வருகிற 25-ந்தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இரவு நேரங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை மறுநாள் (சனிக்கிழமை) திருப்பூா், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களிலும், வருகிற 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருப்பூா், திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் 'மஞ்சள்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    22, 23-ந்தேதிகளில் நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    Next Story
    ×