search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தமிழக மக்களின் சிந்தனைகளுக்கு எதிராக கவர்னர் கருத்து தெரிவிக்கிறார்- ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
    X

    தமிழக மக்களின் சிந்தனைகளுக்கு எதிராக கவர்னர் கருத்து தெரிவிக்கிறார்- ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    • தமிழ்நாட்டில் பல ஆண்டு காலமாக இரு மொழி திட்டத்தை எந்த அரசு வந்தாலும் கடைப்பிடித்து வருகிறது.
    • தமிழகத்தில் தனியார் மற்றும் சி.பி.எஸ்.சி. பள்ளிகளிலும் இந்தி கற்றுக் கொடுக்கிறார்கள்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பத்திரிகையாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:-

    தமிழகத்தில் இரு மொழி திட்டம் தான் என்பதை கவர்னர் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாடு மக்கள் என்ன சிந்திக்கிறார்களோ, அதற்கு நேர் மாறாக கவர்னர் கருத்து தெரிவிக்கிறார்.

    மற்ற மாநிலங்களிலே 3 மொழி கொள்கை இருக்கிறது என்பது தவறு. பல இந்தி பேசும் மாநிலங்களில் மாணவர்கள், இளைஞர்களுக்கு ஒரு மொழி மட்டுமே தெரியும். அங்கு ஆங்கிலம் கற்றுத் தருவது இல்லை. ஆங்கில ஆசிரியர்களும் கிடையாது.

    தமிழ்நாட்டில் பல ஆண்டு காலமாக இரு மொழி திட்டத்தை எந்த அரசு வந்தாலும் கடைப்பிடித்து வருகிறது. அதற்காக விரும்பியவர்கள் இந்தி படிக்கக்கூடாது என கூறவில்லை.

    தமிழகத்தில் தனியார் மற்றும் சி.பி.எஸ்.சி. பள்ளிகளிலும் இந்தி கற்றுக் கொடுக்கிறார்கள். கேந்திர வித்யாலயாவிலும் இந்தியை கற்றுத்தருகிறார்கள். விரும்பி படிக்கக்கூடிய மாணவர்களுக்கு எந்த தடையும் கிடையாது. தமிழகத்தில் அரசினுடைய கொள்கை மக்களுடைய எண்ணத்தை பிரதிபலிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×