என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னை ரெயில் நிலையங்களில் இன்று முதல் நடைமேடைக் கட்டணம் உயர்வு
    X

    சென்னை ரெயில் நிலையங்களில் இன்று முதல் நடைமேடைக் கட்டணம் உயர்வு

    • நடைமேடை டிக்கெட் கட்டணம் இன்று முதல் அடுத்தாண்டு ஜனவரி 31 வரை அமலில் இருக்கும்.
    • பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை குறைக்கவே ரெயில் நிலைய நடைமேடை கட்டணம் உயர்வு.

    பண்டிகை காலத்தையொட்டி சென்னை கோட்டத்தில் உள்ள 8 முக்கிய ரெயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் இன்று முதல் உயர்ந்துள்ளது.

    அதன்படி, ரூ.10ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்ட நடைமேடை டிக்கெட் கட்டணம் இன்று முதல் அடுத்தாண்டு ஜனவரி 31 வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய ரெயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    மேலும், பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை குறைக்கவே ரெயில் நிலைய நடைமேடை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே பொது மேலாளர் மல்லையா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×