search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முன்பு போலீஸ் குவிப்பு
    X

    கோப்புப்படம்

    ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முன்பு போலீஸ் குவிப்பு

    • மருத்துவமனை முன்பு ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் குவிந்து வருவதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • ராஜீவ் காந்தி மருத்துவமனை வழியாக பயணிக்கும் பொதுமக்கள் மாற்றுப்பாதையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் உள்ள வீட்டின் முன் வைத்து நேற்று வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    மருத்துவமனை முன்பு ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் குவிந்து வருவதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனிடையே, ராஜீவ் காந்தி மருத்துவமனை வழியாக பயணிக்கும் பொதுமக்கள் மாற்றுப்பாதையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

    Next Story
    ×