search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அன்புமணி ராமதாஸ் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா
    X

    அன்புமணி ராமதாஸ் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா

    • தென் சென்னை மேற்கு மாவட்ட பா. ம. க. செயலாளர் அ. முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது.
    • அன்புமணி ராமதாஸ், அவரது மனைவி சவுமியா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொங்கல் விழாவை தொடங்கி வைத்தனர்.

    சென்னை

    தமிழ்நாடு மலர் காய்கனி வியாபாரிகள் நல சங்கம், கீரை மொத்த வியாபாரிகள் சங்கம் மற்றும் தென் சென்னை மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி இணைந்து நடத்தும் 5-ம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா கோயம்பேடு கீரை மார்க்கெட் வணிக வளாகத்தில் தென் சென்னை மேற்கு மாவட்ட பா. ம. க. செயலாளர் அ. முத்துக்குமார் தலைமை யில் நடைபெற்றது. பா. ம. க. தலைவர் அன்புமணி ராமதாஸ், அவரது மனைவி சவுமியா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொங்கல் விழாவை தொடங்கி வைத்தனர்.

    பா. ம. க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி எம்.எல்.ஏ., வடக்கு மண்டல இணை பொது செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே. மூர்த்தி, மாநில தேர்தல் பணி குழு செயலாளர் மு. ஜெயராமன், ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட அமைப்பு செயலாளர் ஈகை தயாளன், மாவட்ட தலைவர் கே. எம். ஏழுமலை, மாநில செயற்குழு உறுப்பினர் மு. தாமோதரன், நெடி பு. நல்லதம்பி, ஓம்சக்தி ஜெயமூர்த்தி, மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் கீரை வை. கோவிந்தராஜ் மற்றும் ஏராளமான பெண்கள் விழாவில் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை

    தமிழ்நாடு மலர் காய்கனி வியாபாரிகள் நல சங்கம், கீரை மொத்த வியாபாரிகள் சங்கம் மற்றும் தென் சென்னை மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

    Next Story
    ×