search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நீட் வேண்டாம் - மாநில கல்விக் கொள்கைக் குழு பரிந்துரை
    X

    'நீட்' வேண்டாம் - மாநில கல்விக் கொள்கைக் குழு பரிந்துரை

    • தமிழ் மற்றும் ஆங்கிலம் என இருமொழிக் கொள்கையை பள்ளிகளில் தொடர வேண்டும்.
    • பிளஸ்1 பொதுத்தேர்வு தமிழக பள்ளிகளில் தொடர வேண்டும்.

    சென்னை:

    புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றான, மாநில கல்விக் கொள்கையை உருவாக்க 2022-ம் ஆண்டு தமிழ்நாடு அரசால் குழு அமைக்கப்பட்டது.

    தேர்வு முறைகளில் சீர்திருத்தம் உள்ளிட்ட 10 வழிகாட்டுதல்களை அடிப்படையாக கொண்டு அறிக்கை தயாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

    இந்நிலையில், தமிழ்நாட்டிற்கான கல்விக் கொள்கை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு இன்று வழங்கி உள்ளது.

    சுமார் 600 பக்கங்கள் கொண்ட பரிந்துரைகளை மாநில கல்விக்கொள்கை உருவாக்க குழு சமர்பித்துள்ளது. அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டவைகளில் சில...

    * 3,5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தக்கூடாது.

    * தமிழ் மற்றும் ஆங்கிலம் என இருமொழிக் கொள்கையை பள்ளிகளில் தொடர வேண்டும்.

    * பிளஸ்1 பொதுத்தேர்வு தமிழக பள்ளிகளில் தொடர வேண்டும்.

    * பிளஸ் 1 மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை இருக்க வேண்டும்.

    * நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை கூடாது.

    Next Story
    ×