search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொம்மிடியில் குடிபோதை தகராறில் கத்தியால் குத்தி வியாபாரி கொலை- உறவினர் கைது
    X

    பொம்மிடியில் குடிபோதை தகராறில் கத்தியால் குத்தி வியாபாரி கொலை- உறவினர் கைது

    • தருமபுரி மாவட்டம், பொம்மிடி விடிவெள்ளி நகர் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன்.
    • வியாபாரி கொலை செய்த சம்பவம் பொம்மிடி பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பொம்மிடி விடிவெள்ளி நகர் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (வயது35). இவர் பேன்சி பொருட்கள் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு முனியப்பனின் உறவினரான ஈஸ்வரன் என்பவர் தான் காரணம் என்று முனியப்பன் அடிக்கடி கூறி வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று முனியப்பனும், ஈஸ்வரனும் குடிபோதையில் சந்தித்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரமடைந்த ஈஸ்வரன் அருகில் இருந்த பன்றி வெட்டும் கத்தியை எடுத்து முனியப்பனை சரமாரியாக குத்தி கொலை செய்தார்.

    இதில் சம்பவ இடத்திலேயே முனியப்பன் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து உயிரிழந்தார்.

    இது குறித்து பொம்மிடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த முனியப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் ஈஸ்வரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    வியாபாரி கொலை செய்த சம்பவம் பொம்மிடி பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×