search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதில் தி.மு.க. அரசு தோல்வி அடைந்து விட்டது- டி.டி.வி.தினகரன்
    X

    சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதில் தி.மு.க. அரசு தோல்வி அடைந்து விட்டது- டி.டி.வி.தினகரன்

    • ஆரஞ்சு பால் பாக்கெட் மற்றும் பால் பொருட்களின் விலை ஒரே வருடத்தில் 3 முறை உயர்த்தப்பட்டது.
    • மக்களை தொடர்ந்து வஞ்சித்து வரும் தி.மு.க.வுக்கு வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    சென்னை :

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் நல்லாட்சி தருவதாக கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த 2 ஆண்டுகளும், மக்கள் துயரத்தின் தொடர் ஆண்டுகளாகத்தான் இருந்து வருகிறது. நீட் தேர்வை ஒரே கையெழுத்தில் ரத்து செய்வோம் என்று சொன்னார்கள். அதற்கான முன்னெடுப்பு கூட முழுமை பெறாத நிலை உள்ளது. சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதில் தி.மு.க. அரசு தோல்வி அடைந்து விட்டது. ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்கள், அதிகரித்து வரும் போதைப் பொருட்களின் புழக்கம் 2 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே சொத்து வரி உயர்த்தப்பட்டது. மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆரஞ்சு பால் பாக்கெட் மற்றும் பால் பொருட்களின் விலை ஒரே வருடத்தில் 3 முறை உயர்த்தப்பட்டது.

    மக்களை தொடர்ந்து வஞ்சித்து வரும் தி.மு.க.வுக்கு வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×