search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நிலச்சரிவு எதிரொலி- தமிழக மலை மாவட்டங்களை கண்காணிக்க உத்தரவு
    X

    நிலச்சரிவு எதிரொலி- தமிழக மலை மாவட்டங்களை கண்காணிக்க உத்தரவு

    • மழை நாட்களில் கண்காணிப்பு செய்யவும், மாவட்ட நிர்வாகத்திற்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கவும் உத்தரவு.
    • மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களை கண்காணிக்க நடவடிக்கை.

    கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின் எதிரொலியால், தமிழகத்தில் மலைப்பகுதிகளில் இருக்கும மாவட்டங்களை கண்காணிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    அதன்படி, மழை நாட்களில் கண்காணிப்பு செய்யவும், மாவட்ட நிர்வாகத்திற்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கவும் பேரிடர் மேலாண்மை துறை, வருவாய் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    மேலும், மழை நேரத்தில் வருவாய் துறை, பேரிடர் மேலாண்மை துறை தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திண்டுக்கல், நீலகிரி, கோவை, குமரி, நெல்லை, விருதுநகர், தேனி, திருப்பூர் என மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே இதற்கான ஆலோசனை கூட்டம் நடத்தி இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அரசுத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×