search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முதலமைச்சர் நேற்று தொடங்கி வைத்த ரோப்கார் சேவை- அந்தரத்தில் சிக்கிய பக்தர்களால் பரபரப்பு
    X

    முதலமைச்சர் நேற்று தொடங்கி வைத்த ரோப்கார் சேவை- அந்தரத்தில் சிக்கிய பக்தர்களால் பரபரப்பு

    • திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறால் ரோப் கார் பாதி வழியிலேயே நின்றுளளனர்.
    • ரோப் கார் இருபுறங்களிலும் செல்ல முடியாமல் நடுவழியில் நின்றதால் பக்தர்கள் கூச்சலிட்டனர்.

    குளித்தலை அருகே அய்யர்மலையில் திடீரென ரோப் கார் பழுதடைந்து நின்றதால், பாதி வழியிலேயே பக்கதர்கள் அந்தரத்தில் சிக்கித் தவித்தனர்.

    திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறால் ரோப் கார் பாதி வழியிலேயே நின்றுளளனர்.

    ரோப் கார் இயங்கும் இயந்திரத்தில் உள்ள சக்கரத்தில் இருந்து கயிறு நழுவியதால் ரோப் கார் பாதியில் நின்றுள்ளது.

    ரோப் கார் இருபுறங்களிலும் செல்ல முடியாமல் நடுவழியில் நின்றதால் பக்தர்கள் கூச்சலிட்டனர்.

    அய்யர்மலைக்கான ரோப் கார் சேவையை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொங்கி வைத்தார்.

    இந்நிலையில், இன்று ரோப் கார் சேவை பழுதாக நின்றுள்ளது. இதைதொடர்ந்து, கீழே இருந்து மேலே செல்லும் பெட்டியில் அமர்ந்திருந்த பக்தர்கள் ஏணி மூலம் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர்.

    பாதியில் நின்ற ரோப் காரில், 3 பெண் பக்தர்கள் வெகு நேரமாக தவித்து வருகின்றனர்.

    தொடர்ந்து, ரோப் கார் இயக்கத்தை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×