search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    வேலூரில் புளூ காய்ச்சல் பாதிப்பு இல்லை
    X

    வேலூரில் புளூ காய்ச்சல் பாதிப்பு இல்லை

    • நேற்று மட்டும் மாவட்டம் முழுவதும் 32 பேருக்கு காய்ச்சல் பதிவாகியுள்ளது.
    • காய்ச்சல் இருந்தால் மக்களே தானாக மருந்து மாத்திரைகளை எடுக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

    வேலூர்:

    வேலூரில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் இதுவரை இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் பதிவாகவில்லை.

    வேலூர் மாநகர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 197 பேருக்கும், பிப்ரவரி மாதம் 142 பேருக்கும், மார்ச் மாதம் தற்போது வரை 17 பேருக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

    நேற்று மட்டும் மாவட்டம் முழுவதும் 32 பேருக்கு காய்ச்சல் பதிவாகியுள்ளது. இதில் 10 பேர் மட்டுமே வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மற்ற 22 பேரும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

    மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உட்பட 4 மருத்துவமனைகள், 46 ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான மருந்து மாத்திரைகள், படுக்கை வசதிகள் போதுமானதாக உள்ளது.

    காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்படுவோருக்கு இன்புளூயன்சா உள்ளதா என தொடர் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறோம். நேற்று மட்டும் மாநகர பகுதிகளில் 81 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டுள்ளோம்.

    காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் வசிப்பிடத்தில் தூய்மை பணி, கண்காணிப்பு செய்து சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. காய்ச்சலால் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்படுவோரின் விவரங்களை தனியார் மருத்துவமனைகள் அரசுக்கு வழங்க வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.

    காய்ச்சல் இருந்தால் மக்களே தானாக மருந்து மாத்திரைகளை எடுக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

    சளி, தொண்டை வலி, மூக்கில் நீர் வழிதல், உடல் வலி உள்ளிட்டவை இன்புளூயன்சாவுக்கான அறிகுறியாக பார்க்கப்பட்டாலும், இவை சாதாரண காய்ச்சலுக்கும் பொருந்தும் என்பதால் பரிசோதனை மூலமே தெரியவரும். கைகளை கழுவுதல், முகக்கவசம் அணிதல், சூடான தண்ணீரை குடித்தல், சூடான உணவை உண்ணுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தால் போன்றவை மூலம் காய்ச்சல் பரவலை தடுக்க முடிக்க முடியும்.

    குழந்தைகளுக்கு காய்ச்சல் இருக்கும் பட்சத்தில் பெற்றோர்கள் அஞ்ச வேண்டாம் அவை சாதாரண காய்ச்சலாக இருக்கலாம் அதிகமாக காய்ச்சல் இருக்கும் சமயத்தில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். என்று சுகாதார குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×