search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சாதியை ஒழிக்க ஒரே வழி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்- சீமான்
    X

    சாதியை ஒழிக்க ஒரே வழி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்- சீமான்

    • 38 லட்சம் தாலி அறுந்த இளம் விதவைகள் தமிழ்நாட்டில் உள்ளனர்.
    • நம்முடைய ஒட்டுமொத்த எதிரி தி.மு.க.வை வீழ்த்த நீங்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து விக்கிரவாண்டி தாலுக்கா அலுவலகம் முன் வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி பேசியதாவது:-

    நாம் தமிழர் கட்சிக்கும் தி.மு.க.வுக்கும் தான் இங்கு போட்டி , தீய திராவிடத்திற்கு தூய தமிழ் தேசியத்திற்கும் தான் இங்கு போட்டி . நாங்கள் தேர்தலுக்கு வந்து 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. எவருக்கும் சமரசம் செய்ததில்லை நோட்டுக்கும் சீட்டுக்கும் பேரம் நடந்தது போனதில்லை. ஆனால் நாங்கள் 2000 முறை சிந்தித்து செயலாற்றி கொண்டு வருகிறோம். இடைத்தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் மீண்டும் 2026 தேர்தலில் அபிநயா தான் விக்கிரவாண்டியில் போட்டியிடுவார்.

    ஊழல் கூட்டத்தில் ஒருத்தரை அனுப்புவதை விட ஊழலை அழிக்க போராடும் ஒருவரை சட்டமன்றத்திற்கு அனுப்பி வையுங்கள் என வேண்டுகோள் விடுக்கிறேன். சாராயம் குடித்தவனுக்கு நிவாரணம் வழங்குவது சரியானஅரசா? குடும்ப தலைவிக்கு ஆயிரம் ஆனால் குடித்து இறந்தால் 10 லட்சம் வழங்கிகிறது. 38 லட்சம் தாலி அறுந்த இளம் விதவைகள் தமிழ்நாட்டில் உள்ளனர். எதிர்கட்சியாக இருக்கும் போது கனிமொழி விதவைகள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது என தெரிவித்தார்.

    சாதியை ஒழிக்க ஒரே வழி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் அப்போது தான் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் . கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பிற்கு மோடி, ராகுலின் பதில் என்ன? சாதி பார்த்து யாரும் எங்களுக்கு வாக்களிக்க வேண்டாம். நம்முடைய ஒட்டுமொத்த எதிரி தி.மு.க.வை வீழ்த்த நீங்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×