என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னையில் சோகம்- பந்து எடுக்க முயன்று பள்ளத்தில் விழுந்து சிறுமி உயிரிழப்பு
    X

    சென்னையில் சோகம்- பந்து எடுக்க முயன்று பள்ளத்தில் விழுந்து சிறுமி உயிரிழப்பு

    • நீரில் மூழ்கி வனமாலி என்கிற சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
    • அறநிலையத்துறைக்கு சொந்தமான கட்டடத்தில் லிப்ட் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது தெரியவந்துள்ளது

    சென்னை திருவல்லிக்கேணியில் லிப்ட் அமைக்க தோண்டப்பட்ட 10 அடி ஆழ பள்ளத்தில் தேங்கிய தண்ணீரில் தவறி விழுந்து 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

    பள்ளத்தில் விழுந்த பந்தை எடுக்க முயற்சித்தபோது, நீரில் மூழ்கி வனமாலி என்கிற சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    அருகில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், சிறுமியை பரிசோதித்த மருத்துவர் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், திருவல்லிக்கேணி தேரடி தெருவில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கட்டடத்தில் லிப்ட் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது தெரியவந்துள்ளது

    Next Story
    ×