என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன்...!- துரை வைகோ பேட்டி
- என்னால் கட்சிக்கோ, தலைமைக்கோ எந்த களங்கமும் ஏற்படக் கூடாது என நினைக்கிறேன்.
- தொண்டர்கள், நிர்வாகிகள் விருப்பத்தின்பேரிலேயே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டேன்.
என்னால் கட்சிக்கோ, தலைமைக்கோ எந்த களங்கமும் ஏற்படக் கூடாது என நினைக்கிறேன் என்றும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன் என்றும் மதிமுக எம்பி துரை வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு துரை வைகோ கூறியதாவது:-
இது உட்கட்சி விவகாரம். நம் இயக்க தலைமை அவர்கள் எடுக்க வேண்டிய முடிவு இது. என்னால் கட்சிக்கோ, தலைமைக்கோ எந்த களங்கமும் ஏற்படக் கூடாது என நினைக்கிறேன். மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன்.
கட்சியில் தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன். நிர்பந்தத்தாலேயே அரசியலுக்கு வந்தேன். தொண்டர்கள், நிர்வாகிகள் விருப்பத்தின்பேரிலேயே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டேன்.
பதவியில் இருப்பதால்தான் பிரச்சினை வருகிறது. தொண்டனாக தொடர்வேன். இது உள்கட்சி விவகாரம், வெளியில் விவாதிக்க முடியாது. தேர்தல் அரசியல் எனக்கு வேண்டாம், விருப்பம் இல்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






