என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

புதிதாக வீடு கட்டுவோர் கவனத்திற்கு... எம்.சாண்ட், பி.சாண்ட் விலை இன்று முதல் உயர்வு
- அரசு தரப்பில், வரி விதிப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
- குவாரி உரிமையாளர்கள், தங்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.
கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சமீபத்தில் விதிக்கப்பட்ட சிறு கனிம நிலவரி மற்றும் ராயல்டி உயர்வு உள்ளிட்ட 24 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் இந்த சங்கத்தினருடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
தலைமைச் செயலகத்தில் அமைச்சர் துரைமுருகன், இயற்கை வளங்கள் துறை செயலர் பணீந்திர ரெட்டி, புவியியல் மற்றும் சுரங்கத்துறை கமிஷனர் சரவணவேல்ராஜ் ஆகியோர் முன்னிலையில், நேற்று குவாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது.
அப்போது அரசு தரப்பில், வரி விதிப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அதை ஏற்று குவாரி உரிமையாளர்கள், தங்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு கல் குவாரி, கிரஷர், லாரி உரிமையாளர்கள் கோரிக்கைகள் ஏற்கப்பட்ட நிலையில் இன்று முதல் விலை உயர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணிகளுக்கான எம்.சாண்ட் மற்றும் ஜல்லி போன்றவற்றின் விலை இன்று முதல் உயர்கிறது.
ஒரு யூனிட் ஜல்லி 4000-ல் இருந்து 5000-க்கும், எம்.சாண்ட் 5000-ல் இருந்து 6000-க்கும், பி.சாண்ட் 6000-ல் இருந்து 7000-க்கும் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.






