search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த குழு அமைத்ததில் திருப்தி இல்லை- சவுந்தர்ராஜன்
    X

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த குழு அமைத்ததில் திருப்தி இல்லை- சவுந்தர்ராஜன்

    • போக்குவரத்து துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்.
    • பிரிமியம் பஸ்கள், மினி பஸ்கள் போன்றவற்றை தமிழ்நாடு அரசே இயக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ராணி தோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே சி.ஐ.டி.யூ. போக்கு வரத்து தொழிலாளர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.

    சி.ஐ.டி.யூ. தொழிலாளர் சம்மேளன தலைவர் சவுந்தர்ராஜன் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    போக்குவரத்து துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். பிரிமியம் பஸ்கள், மினி பஸ்கள் போன்றவற்றை தமிழ்நாடு அரசே இயக்க வேண்டும். தமிழ்நாட்டில் 300 பணிமனைகள் உள்ளன. தேவையான கட்டமைப்பு அரசு போக்குவரத்து கழகத்திடம் உள்ளது. எனவே எந்த விதமான பஸ்களாக இருந்தாலும் தனியாரிடம் ஒப்படைக்காமல் அரசு போக்குவரத்து கழகமே அதை இயக்க வேண்டும்.

    போக்குவரத்து கழக தொழிலாளர்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட பிற அரசு துறைகள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது போல் உடனடியாக அமல் படுத்த வேண்டும். தற்போது இதற்காக குழு அமைக்கப்பட்டு 9 மாத காலம் அவகாசம் என கூறப்பட்டுள்ளது. இதில் எங்களுக்கு திருப்தி இல்லை.

    எனவே முதலமைச்சர் உடனடியாக ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். முறைசாரா தொழிலாளர்கள் பதிவு மற்றும் அவர்களுக்கு கேட்பு மனுக்கள் விநியோகம் உள்ளிட்டவற்றில் குளறுபடி உள்ளது. 75 லட்சம் தொழிலாளர்களின் பதிவு, சர்வரில் அழிந்துவிட்டதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். மற்ற துறைகளில் எல்லாம் சர்வர்கள் முறையாக இயங்கும்போது முறைசாரா தொழிலாளர்கள் பதிவில் மட்டும் சர்வர் எப்படி அழிந்தது என்பது தெரிய வில்லை. எனவே உடனடியாக இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×