என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    எத்தனை தேர்தல் வந்தாலும் மத்தியில் பா.ஜ.க.வே ஆட்சியில் அமரும்- ஓ.பன்னீர்செல்வம்
    X

    எத்தனை தேர்தல் வந்தாலும் மத்தியில் பா.ஜ.க.வே ஆட்சியில் அமரும்- ஓ.பன்னீர்செல்வம்

    • எப்போதுமே உண்மையாக இருந்தால் நிச்சயம் இறையருள் கிடைக்கும்.
    • தமிழகத்தில் ஜல்லிக்கட்டு பிரச்சனை யாராலும் தீர்க்க முடியாத பிரச்சனையாக இருந்தது.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. கட்சி சார்பில் சென்னையில் நேற்று மாலை இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில தலைவர் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் அதில் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

    எப்போதுமே உண்மையாக இருந்தால் நிச்சயம் இறையருள் கிடைக்கும். அதற்கு பல உதாரணங்களை கூறலாம். நபிகள் நாயகத்தின் வாழ்க்கை பல விஷயங்களை நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது.

    இந்தியாவில் இனி எத்தனை தேர்தல்கள் வந்தாலும் மத்தியில் பா.ஜ.க. கட்சிதான் ஆட்சியில் அமரும்.

    தமிழகத்தில் ஜல்லிக்கட்டு பிரச்சனை யாராலும் தீர்க்க முடியாத பிரச்சனையாக இருந்தது. அதனை ஒரே நாளில் தீர்த்து வைத்தவர் பிரதமர் மோடி. அதனால் தான் இன்று ஜல்லிக்கட்டு காளைகள் துள்ளி குதித்து ஓடுகின்றன. அதற்கு காரணமான பிரதமர் மோடி ஜல்லிக்கட்டு நாயகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

    இவ்வாறு ஓ.பி.எஸ். பேசினார்.

    Next Story
    ×