search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வடசென்னையை வளர்ச்சி அடைந்த சென்னையாக மாற்றுவதில் பெரியார் மருத்துவமனை ஒரு மைல்கல்- மு.க.ஸ்டாலின்
    X

    வடசென்னையை வளர்ச்சி அடைந்த சென்னையாக மாற்றுவதில் பெரியார் மருத்துவமனை ஒரு மைல்கல்- மு.க.ஸ்டாலின்

    • வடசென்னை மக்களின் உயிர்களை காலங்காலமாய் காக்க பெரியார் அரசு மருத்துவமனை பயன்படும்.
    • மாற்றுத்திறனாளிகளின் குரல் அதிகாரம் பொருந்திய அவைகளில் இடம்பெறும்.

    சென்னை கொளத்தூரில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்ட உயர் சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    பிறகு அவர் உரையாற்றியதாவது:-

    நமது கொளத்தூர் தொகுதியில் மாபெரும் மருத்துவமனையை கட்டி எழுப்பி உள்ளோம். ரூ.210 கோடி மதிப்பீட்டில் 6 தளங்களுடன் பெரியார் உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

    வடசென்னை மக்களின் உயிர்களை காலங்காலமாய் காக்க பெரியார் அரசு மருத்துவமனை பயன்படும்.

    பெரியார் மருத்துவமனையை பொது மக்கள் சுகாதாரத்துடன் பார்த்து கொள்ள வேண்டும். நோயாளிகளை குடும்பத்தில் ஒருவராக நினைத்து சிறப்பாக மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள், செவிலியர்களை கேட்டுக் கொள்கிறேன்.

    மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரத்தில் பங்களிக்கும் வகையில் எல்லா உள்ளாட்சி அமைப்புகளிலும் உரிய பிரதிநித்துவம் தரப்படும்.

    மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் தரப்படும்.

    மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரத்தில் பங்கு அளிக்கும் வகையில் உரிய சட்டத்திருத்தம் செய்யப்படும்.

    நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், ஊராட்கள் சட்டத்தில் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் திருத்தம் செய்யப்படும்.

    மாற்றுத்திறநாளிகள் என பெயர் கொடுத்து சுயமரியாதையை காத்தவர் நமது கலைஞர் கருணாநிதி. கலைஞர் வழியில் மாற்றுத்திறனாளிகளின் சுயமரியாதையை காக்கும் வகையில் அதிகாரத்தில் பங்கு.

    மாற்றுத்திறனாளிகளின் குரல் அதிகாரம் பொருந்திய அவைகளில் இடம்பெறும். இதுவே உண்மையான சமூக நீதி பெரியார் அரசு. வடசென்னையை வளர்ச்சி அடைந்த சென்னையாக மாற்றுவதில் பெரியார் மருத்துவமனை ஒரு மைல்கல்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×