என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மன்மோகன் சிங் அற்புதமான மனிதர்- ரஜினிகாந்த்
- சிறந்த பொருளாதார சீர்திருத்தவாதி, அரசியல் பண்பாளர்.
- மன்மோகன் சிங் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் 7 நாட்களுக்கு துக்கம் கடைப்பிடிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இதனிடையே, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார்.
இந்த நிலையில், மன்மோகன் சிங் அற்புதமான மனிதர் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், மன்மோகன் சிங் அற்புதமான மனிதர், சிறந்த பொருளாதார சீர்திருத்தவாதி, அரசியல் பண்பாளர். அவரின் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் என்று கூறினார்.






