search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
    X

    குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

    • சுற்றுவட்டார பகுதியில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது.
    • வெயிலின் தாக்கமானது முற்றிலும் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை மாவட்டம் முழுவதும் நிலவி வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று மாலை முதல் பெய்த கனமழையின் காரணமாக குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர். இரவு முழுவதும் மிதமான மழை பெய்து வந்த நிலையில் காலையில் மழைப்பொழிவு குறைந்ததால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்தும் சீரானது.

    இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் இன்று காலை முதல் குளிக்க அனுமதிக்கப் பட்டனர்.

    தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. வெயிலின் தாக்கமானது முற்றிலும் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை மாவட்டம் முழுவதும் நிலவி வருகிறது.

    Next Story
    ×