என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அமித் ஷாவை இதுவரை விஜய் கண்டிக்கவில்லை- வன்னி அரசு
    X

    அமித் ஷாவை இதுவரை விஜய் கண்டிக்கவில்லை- வன்னி அரசு

    • இதிலிருந்து பாஜக எப்படி அம்பேத்கரை மதிக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
    • எல்லோரும் அமித் ஷாவை கண்டித்து மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும்.

    சென்னை :

    விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    புரட்சியாளர் அம்பேத்கர் யாத்து தந்த இந்திய அரசியலமைப்புச்சட்டம் தான் பாராளுமன்றத்தை வழிநடத்துகிறது. அந்த பாராளுமன்றத்துக்குள்ளேயே புரட்சியாளர் அம்பேத்கரை அவமதித்து பேசியுள்ளார் இந்திய ஒன்றிய அமைச்சரும் சனாதனவாதியுமான அமித் ஷா.

    அரசியலமைப்பின் 75 ஆம் ஆண்டை பெருமையோடு கொண்டாடுவதாக சொல்லி பெருமைப்படும் பிரதமர் மோடியோ இது குறித்து இதுவரை கண்டிக்கவே இல்லை. குறைந்த பட்சம் வருத்தம் தெரிவிக்கவாவது சொல்லியிருக்க வேண்டும்.

    இதிலிருந்து பாஜக எப்படி அம்பேத்கரை மதிக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். பாராளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமித் ஷாவுக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர்.

    அதனால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

    இந்த போராட்டத்தில் அதிமுகவோ, பாமக தலைவர் அன்புமணியோ பங்கேற்கவில்லை. அம்பேத்கரை அவமதித்த அமித் ஷாவை கண்டிக்ககூடவில்லை.

    அது கூட போகட்டும், கடந்த 6-ந்தேதி அன்று அம்பேத்கர் நூலை வெளியிட்ட தமிழக வெற்றிகழகத்தின் தலைவர் விஜய் இதுவரை அமித் ஷாவை கண்டிக்கவில்லை.

    எல்லோரும் அமித் ஷாவை கண்டித்து மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும்.

    அதுவே புரட்சியாளர் அம்பேத்கரை மதிப்பதாக பொருள். இல்லையேல், அடையாள அரசியலை செய்வதாகத்தான் மக்கள் புறக்கணிப்பார்கள் என்று கூறியுள்ளார்.



    Next Story
    ×