என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம் (World)
8 பெண்களில் ஒருவருக்கு 18 வயதுக்குள் பாலியல் துன்புறுத்தல் - ஐ.நா. வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை
- மன அழுத்தம், மனச் சோர்வு, பாலியல் ரீதியாகப் பரவும் தொற்றுநோய்கள் இவர்களை பாதித்துள்ளது
- சிறுமிகள் மட்டுமல்லாது ஆண்கள் மற்றும் சிறுவர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்
உலகம் முழுவதும் உள்ள 8 பெண்களில் ஒருவர் 18 வயதை அடைவதற்கு முன் பாலியல் வன்கொடுமைக்கு துன்புறுத்தலுக்கும் ஆளாவதை ஐ.நாவின் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பான UNICEF தெரிவித்துள்ளது. சர்வதேச பெண் குழந்தைகள் தினம் இன்று [அக்டோபர் 11] அனுசரிக்கப்படுவதை ஒட்டி ஐ.நா. இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, உலகில் தற்போதுள்ள பெண்களில் 37 கோடி பேர் [8 இல் ஒருவர்] பாலியல் பலாத்காரம் அல்லது துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர் என்ற அதிர்ச்சி புள்ளிவிவரத்தை ஐ.நா. வெளியிட்டுள்ளது. உடல் ரீதியாக அல்லாது, இணையவழியில் 65 கோடி பெண்கள் [5 இல் ஒருவர்] துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.
சகாரா ஆப்பிரிக்காவில் 7.9 கோடி பெண்களும், கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் 7.5 கோடி பெண்களும், மத்திய மற்றும் தெற்கு ஆசிய பகுதிகளைச் சேர்ந்த 7.3 கோடி பெண்களும், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் 6.8 கோடி பெண்களும் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபிய பகுதிகளில் 4.5 கோடி பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உள்நாட்டுக் கலவரங்கள் மற்றும் அரசியல் நிலைத்தன்மை அற்ற சூழலால் படைக்கப்பட்டுள்ள நாடுகளில் அதிக அளவிலான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐநா அமைப்பின் அகதி முகாம் பகுதிகளில் தங்கியுள்ள 4 பெண்களில் ஒருவர் அங்கு வருவதற்கு முன் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகியிருக்கின்றனர்.
பாதிக்கப்படும் பெண்களில் 14 முதல் 17 வயதுடைய சிறுமிகளே அதிகம். ஒருமுறை துன்புறுத்தலுக்கு ஆளான சிறுமிகளே மீண்டும் மீண்டும் துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடுவதால் அதன் மனரீதியான மற்றும் உடல் ரீதியான தாக்கம் அவர்களை விட்டு நீங்குவதே இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மன அழுத்தம், மனச் சோர்வு, பாலியல் ரீதியாகப் பரவும் தொற்றுநோய்கள் உள்ளிட்டவற்றால் அவதியுறும் இவர்கள், போதைப்பொருள் துஷ்பிரயோகத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுமிகள் மட்டுமல்லாது ஆண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 24 முதல் 31 கோடி பேர் 18 வயதுக்கு முன்னர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்