search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    உருக்குலைந்த உடல்களில் உறைய வைக்கும் உண்மைகள்: தடயவியல் தகவல்கள்
    X

    உருக்குலைந்த உடல்களில் உறைய வைக்கும் உண்மைகள்: தடயவியல் தகவல்கள்

    • இஸ்ரேலின் தேசிய தடயவியல் துறையில் பெரும்பாலான உடல்கள் வைக்கப்பட்டுள்ளன
    • உயிரிழந்தவர்களின் உடல்களை யூதர்கள் முழுமையாக எரியூட்ட வேண்டும்

    கடந்த அக்டோபர் 7 சனிக்கிழமை காலை, இஸ்ரேல் நாட்டிற்குள் திடீரென நுழைந்த பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர், அங்குள்ள பொதுமக்கள் மீது பெரும்தாக்குதலை நடத்தி 1400க்கும் மேற்பட்ட பொதுமக்களை பயங்கரமான முறையில் கொன்றனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்க போவதாக கூறி பாலஸ்தீன காசா பகுதி மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    இந்நிலையில், ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களின் உடல்கள் பட்டியலிடப்பட்டு ஏராளமான ஸ்ட்ரெட்சர்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. அவற்றை அந்நாட்டின் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இஸ்ரேலின் தேசிய தடயவியல் துறையில் (National Center of Forensic Medicine) பெரும்பாலான உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இஸ்ரேலில் இது போல் உள்ள மேலும் 4 மையங்களிலும் இந்த ஆய்வு பணிகள் நடைபெறுகின்றன.

    உருக்குலைந்த உடல்களை அவர்கள் ஆய்வு செய்த பின் தாங்கள் கண்டறிந்ததாக கூறும் தகவல்கள் மூலமாக ஹமாஸ் அமைப்பினரிடம் சிக்கி உயிரிழந்தவர்களின் பரிதாப நிலை குறித்து அறிய முடிகிறது.





    அந்த உண்மைகள் நெஞ்சை உறைய வைப்பதாக உள்ளது.

    இது குறித்து அந்த தடயவியல் அதிகாரிகள் தெரிவித்ததாவது:

    பல டிரக்குகளில் இன்னமும் உடல்கள் கொண்டு வரப்படுகின்றன. அவற்றில் இருந்து வரும் துர்நாற்றம் மிகவும் அதிகமாக உள்ளது. பல உடல் பாகங்களை ஒன்று சேர்க்கும் மிக சோகமான மற்றும் கடினமான செயலில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்.

    கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டு, ஒருவருடன் ஒருவராக கட்டப்பட்டு, கொல்லப்பட்டு, பின்னர் எரியூட்டப்பட்ட உடல்களை அடையாளம் காண்பது மிகவும் கடினமான செயல். அனைத்து உடல்களும் அடையாளம் தெரியாத அளவு எரித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. யூத நம்பிக்கையின்படி உயிரிழந்தவர்களின் உடல்கள் முழுமையாக எரியூட்டப்பட வேண்டும். ஆனால் அதை செயல்படுத்த முடியாத அளவு அவர்கள் உடல்களை எரியூட்டி கொலை செய்துள்ளனர். குழந்தைகளை தாக்குதலில் இருந்து காக்க இறுகி அணைத்தபடி பலர் உயிர் விட்டுள்ளனர்.



    பெண்கள் கடுமையான பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு பிறகு கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பல குழந்தைகளின் உடல்கள் உள்ளன. அவர்கள் மிருகத்தனமாக கொல்லப்பட்டுள்ளனர். பல உடல்களில் பத்திற்கும் மேற்பட்ட துப்பாக்கி குண்டுகள் ஒரே நேரத்தில் துளைத்திருக்கின்றன. மரபணு மாதிரிகளையும், கைரேகை அடையாளங்களையும், பல்வரிசை குறிப்புகளையும் கொண்டு ஆய்வு செய்து உயிரிழந்தவர்களை அடையாளம் காண முயல்கின்றோம்.

    உயிரிழக்கும் போது அந்த மக்கள் எத்தகைய துயரங்களை அனுபவித்திருப்பார்கள் என்பதை நாங்கள் உலகினருக்கு காட்ட விரும்புகிறோம். நாங்கள் நடக்காதவற்றை கூறுவதாக உலகின் சில நாடுகள் கூறின. ஒரு சிலர் நாங்கள் நாய்களின் எலும்புகளை காட்டுவதாக குற்றம் சாட்டினார்கள். எனவே உண்மை நிலையை வெளிச்சம் போட்டு காட்டுகிறோம். இதுவரை இப்படியொரு கொடுமையை எங்கள் பணியில் நாங்கள் கண்டதில்லை.

    இவ்வாறு தடயவியல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×