search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    மீண்டும் பிரதமர் ஆகும் மோடி.. போன் போட்டு வாழ்த்திய பைடன், புதின்
    X

    மீண்டும் பிரதமர் ஆகும் மோடி.. போன் போட்டு வாழ்த்திய பைடன், புதின்

    • மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான பணிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி ஈடுபட்டு வருகிறது.
    • மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்தியாவில் 18 ஆவது பாராளுமன்றத்தை தேர்வு செய்வதற்கான தேர்தல் நிறைவடைந்து, சமீபத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த தேர்தலிலும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான பணிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி ஈடுபட்டு வருகிறது.

    அந்த வகையில் வருகிற 8 ஆம் தேதி இரவு 8 மணிக்கு இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    மேலும், உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகத்தில் தேர்தலை நடத்தி முடித்த இந்தியாவுக்கும், தேர்தலில் வாக்களித்த 65 கோடி மக்களுக்கும் அதிபர் பைடன் வாழ்த்து தெரிவித்தார். இந்த உரையாடலின் போது, இரு தலைவர்களும் அமெரிக்கா- இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவது மற்றும் சர்வதேச கூட்டமைப்பு மூலம் சுதந்திரமான இந்தோ பசிபிக் பிராந்தியத்தை உறுதிப்படுத்த இணைந்து பணியாற்றுவதாக வலியுறுத்தினர்.

    இதே போன்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும், நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து ரஷிய அதிபர் மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில், "பாராளுமன்ற தேர்தல் வெற்றி பெற்ற நரேந்திர மோடிக்கு ரஷிய அதிபர் வாழ்த்து தெரிவித்தார்."

    Next Story
    ×