search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    நம்பிக்கை வாக்கெடுப்பில் நேபாள பிரதமர் வெற்றி
    X

    நம்பிக்கை வாக்கெடுப்பில் நேபாள பிரதமர் வெற்றி

    • ஆளுங்கட்சி உடைந்து பிரசந்தா தலைமையிலான ஆட்சி கவிழும் வாய்ப்பு நிலவியது.
    • ஒரு வாக்கு வித்தியாசத்தில் நேபாள பிரதமர் பிரசந்தா வெற்றி பெற்றார்.

    காத்மாண்டு:

    நேபாளத்தில் பிரதமர் புஷ்பா கமல் தஹல் பிரசந்தா தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. கூட்டணி கட்சிகள் இடையே பிளவு ஏற்பட்டதன் காரணமாக துணை பிரதமராக பதவி வகித்து வந்த கூட்டணி கட்சி தலைவர் உபேந்திரா யாதவ் திடீரென ராஜினாமா செய்தார். மேலும் தனது ஆதரவாளர்களுடன் புதிய கட்சியையும் தொடங்கினார்.

    இதனால் ஆளுங்கட்சி உடைந்து பிரசந்தா தலைமையிலான ஆட்சி கவிழும் வாய்ப்பு நிலவியது. எனவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வெற்றி பேற வேண்டிய கட்டாயத்தில் பிரசந்தாவின் ஆட்சி அமைந்தது. இந்தநிலையில் நேற்று நேபாள நாடாளுமன்றத்தில் பிரசந்தா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது ஒரு வாக்கு வித்தியாசத்தில் நேபாள பிரதமர் பிரசந்தா வெற்றி பெற்றார்.

    Next Story
    ×