search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பாகிஸ்தானில் தடம்புரண்ட ரெயில் பெட்டிகள்
    X

    பாகிஸ்தானில் தடம்புரண்ட ரெயில் பெட்டிகள்

    • சதாரா என்ற இடத்துக்கு அருகே சென்றபோது ரெயில் திடீரென தடம் புரண்டது.
    • வழித்தடத்தில் பல மணி நேரம் ரெயில் சேவைகள் துண்டிக்கப்பட்டன.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் லாகூரில் இருந்து சிந்து மாகாணம் கராச்சி நோக்கி ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. அங்குள்ள சதாரா என்ற இடத்துக்கு அருகே சென்றபோது அந்த ரெயில் திடீரென தடம் புரண்டது.

    இதில் ரெயிலின் 3 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகின. தகவலின்பேரில் அங்கு விரைந்த மீட்பு படையினர் ரெயில் பெட்டிகளை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    இதன் காரணமாக அந்த வழித்தடத்தில் பல மணி நேரம் ரெயில் சேவைகள் துண்டிக்கப்பட்டன. இதனால் பயணிகள் குறித்த நேரத்துக்குச் செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.

    Next Story
    ×