search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    பிரிக்ஸ் மாநாட்டின்போது வெளியுறவுத்துறை அமைச்சகத்தை குறிவைத்து மிகப்பெரிய சைபர் தாக்குதல்- ரஷியா
    X

    பிரிக்ஸ் மாநாட்டின்போது வெளியுறவுத்துறை அமைச்சகத்தை குறிவைத்து மிகப்பெரிய சைபர் தாக்குதல்- ரஷியா

    • வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடர்ந்து இதுபோன்ற தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது.
    • தற்போதைய தாக்குதல் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவிலான தாக்குதல்.

    இந்தியா, ரஷியா, பிரேசில், சீனா, தென் ஆப்பிரிக்கா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு ரஷியாவின் கசானில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. இதில் கலந்து கொள்வதற்காக வந்த தலைவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில், பிரிக்ஸ் உச்சி மாநாட்டை ஒட்டி, ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடுமையான சைபர் தாக்கதலுக்கு ஆளாகி உள்ளதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    ரஷிய வெளியுறவு அமைச்சகத்தின் போர்ட்டலான அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் உள்கட்டமைப்பு மீது வெளிநாட்டில் இருந்து ஒரு பெரிய சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடர்ந்து இதுபோன்ற தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது. ஆனால், தற்போதைய தாக்குதல் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவிலான தாக்குதல் என ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் மரியா சகரோவா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×