search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    செப்டம்பர் மாதம் இலங்கையில் அதிபர் தேர்தல்- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
    X

    செப்டம்பர் மாதம் இலங்கையில் அதிபர் தேர்தல்- தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    • ஒரு கட்டத்தில் மக்கள் அதிபர் மாளிகை, பிரதமர் இல்லம் உள்ளிட்டவற்றை ஆக்கிரமித்ததை தொடர்ந்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறினார்.
    • ரணில் விக்ரமசிங்கே மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கொழும்பு:

    நமது அண்டை நாடான இலங்கை கடந்த 2022-ம் ஆண்டு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு ஆளானது. அனைத்து விதமான அத்தியாவசிய பொருட்களின் விலையும் விண்ணை தொட்டன.

    இதனால் வெகுண்டெழுந்த மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். பல மாதங்களுக்கு நீடித்த இந்த போராட்டம் அரசுக்கு பெரும் தலைவலியாக அமைந்தது.

    ஒரு கட்டத்தில் மக்கள் அதிபர் மாளிகை, பிரதமர் இல்லம் உள்ளிட்டவற்றை ஆக்கிரமித்ததை தொடர்ந்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.

    அதை தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்கே அதிபராக பொறுப்பேற்றார். அவருடைய பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிவடைகிறது.

    இந்த நிலையில் இலங்கையின் அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலை அந்த நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    அதன்படி இலங்கை அதிபர் தேர்தல் வரும் செப்டம்பர் மாதம் 17-ந்தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 16-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுவார் என்றும், அவரை எதிர்த்து தற்போது அவரது மந்திரி சபையில் நீதி மந்திரியாக இருக்கும் விஜேயதாச ராஜபக்சே போட்டியிடுவார் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Next Story
    ×