search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    போலியோ தடுப்பூசி பிரச்சாரத்திற்கு தடை விதித்த தலிபான்- ஐ.நா
    X

    போலியோ தடுப்பூசி பிரச்சாரத்திற்கு தடை விதித்த தலிபான்- ஐ.நா

    • தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள அரசாங்கத்திலிருந்து யாரும் கருத்து தெரிவிக்கவில்லை.
    • பிரச்சாரம் தடைக்கான காரணம் குறித்து தலிபான் தகரப்பில் இருந்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

    ஆப்கானிஸ்தானில் போலியோ தடுப்பூசி பிரச்சாரத்தை தலிபான்கள் நிறுத்தி வைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

    ஆபத்தான மற்றும் முடக்குவாத நோயான போலியோ பரவுதலை தடுக்க முடியாத இரண்டு நாடுகளில் ஒன்று ஆப்கானிஸ்தான் மற்றொன்று பாகிஸ்தான் ஆகும்.

    செப்டம்பர் மாதத்திற்கான நோய்த்தடுப்பு பிரச்சாரம் தொடங்குவதற்கு முன்பே தடைப் பற்றிய செய்தி ஐ.நா. அமைப்புகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தடைக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும், மேலும் தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள அரசாங்கத்திலிருந்து யாரும் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    அண்டை நாடான பாகிஸ்தானில் போலியோ எதிர்ப்பு பிரச்சாரங்கள் தொடர்ந்து வன்முறைகளால் அழிக்கப்படுகின்றன.

    பயங்கரவாதிகள் தடுப்பூசி குழுக்கள் மற்றும் அவர்களைப் பாதுகாக்க நியமிக்கப்பட்ட காவல்துறையினரை குறிவைத்து தாக்கப்படுகின்றனர்.

    ஆனால், அதுப்போன்ற பிரச்சாரங்கள் குழந்தைகளை கருத்தடை செய்வதற்கான மேற்கத்திய சதி என்று பொய்யாகக் கூறப்படுகிறது.

    Next Story
    ×