search icon
என் மலர்tooltip icon

    உக்ரைன்

    • உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு கிராமங்களை ரஷிய ராணுவம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • கடந்த மே மாதம் முதல் உக்ரைன் தலைநகர் கார்கிவ் மீது ரஷியா தாக்குதல்களை வலுப்படுத்தியுள்ளது.

    ரஷியா உக்ரைன் இடையிலான போர் கடந்த 3 வருடங்களாக நடந்து வரும் நிலையில் இந்த போரில் ஏராளமான உயிரிழப்புகளும் உக்ரைன் பகுதிகளில் பலத்த சேதங்களும் ஏற்பட்டுள்ளது. மேற்கு நாடுகளின் உதவியுடன் இந்த போரில் உக்ரைன் ஈடுபட்டுள்ளது. ரஷியாவுக்கு வட கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவளித்து வருகின்றன.

     

    உக்ரைனை கைப்பற்றுவது தங்களின் நோக்கம் இல்லை என்று கூறும் புதின் மேற்கு நாடுகளால் உக்ரைன் வழியாக தங்களுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்பதை உறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில் உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு கிராமங்களை ரஷிய ராணுவம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

     

    தலைநகர் கார்கிவ் பகுதியில் உள்ள ஸ்டெபோவா நோவோசெலிவ்கா [Stepova Novoselivka] iமற்றும் டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள நோவோபோக்ரோவ்ஸ்கே [Novopokrovske] ஆகிய இரண்டு கிராமங்களை கைப்பற்றி தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

     

    ஆனால் உக்ரைன் ராணுவம் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேற்கூறப்பட்ட பகுதிகளில் ரஷிய ராணுவத்தின் தாக்குதல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் முதல் உக்ரைன் தலைநகர் கார்கிவ் மீது ரஷியா தாக்குதல்களை வலுப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு படையெடுத்தபோது உக்ரைன் விண்ணப்பம் செய்தது.
    • பேச்சுவார்த்தை தொடங்கிய போதும், முடிவடைய ஆண்டுகள் பல எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

    ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனின் பெரும் பகுதியை பிடித்துக் கொள்ள நினைக்கிறது. கடந்த சில வருடங்களுக்கு முன் கிரிமியாவை தன்னுடன் இணைத்துக் கொண்டது. தற்போது உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

    ரஷியாவின் படையெடுப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள உக்ரைன், தங்களை ஐரோப்பிய யூனியனுடன் சேர்த்துக் கொள்ள கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கை கிடப்பில் போடப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் தற்போது உக்ரைனை ஐரோப்பிய யூனியனில் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. அனால இந்த பேச்சுவார்த்தை முழுமையாக முடிவடைய ஒரு வருடத்திற்கு மேல் எடுத்துக் கொள்ளம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இது தொடர்பாக உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மையால் "இது வரலாற்று தினம். ஐரோப்பிய யூனியனில் எங்கள் நாட்டின் கூட்டணி "புதிய அத்தியாயம்" எனத் தெரிவித்துள்ளார்.

    பெல்ஜியம் (சுழற்சி முறையில் ஐரோப்பிய யூனியனின் தலைவர் பதவியை ஒரு நாடு ஏற்கும்) வெளியுறவுத்துறை மந்திரி ஹட்ஜா லஹ்பிப் "இது எங்கள் அனைவருக்கும் ஒரு வரலாற்று தருணம். மேலும் எங்கள் உறவில் ஒரு மைல்கல்" எனத் தெரிவித்துள்ளார்.

    உக்ரைனை தவிர்த்து மால்டோ நாடும் ஐரோப்பிய யூனியனில் இணைய விண்ணப்பித்துள்ளது. துருக்கி இணைவதற்கான பேச்சு வார்த்தை இரண்டு தசாப்தத்திற்கு மேலாக முடிவில்லாம் நீண்டது.

    ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு இடையில் சரக்கு போக்குவரத்து தங்கு தடையின்றி நடைபெறும். வரிவிதிப்பு, எனர்ஜி, சுற்றுச்சூழல், நீதித்துறை உரிமை, பாதுகாப்பு போன்றவற்றில் ஐரோப்பிய யூனியனின் 35 கொள்கைகளுக்கு ஏற்ப அதில் உள்ள நாடுகள் தங்களுடைய சட்டங்களை கொண்டு வர வேண்டும்.

    • மின்சார உற்பத்தி கட்டமைப்புகளை குறிவைத்து ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது.
    • இன்று 8 ஏவுகணை மற்றும் 13 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

    உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் இன்னும் நீடித்து வருகிறது. உக்ரைனின் மின்சார கட்டமைப்புகள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி சேதப்படுத்தி வருகிறது. தற்போது உக்ரைன் நாட்டின் 2-வது மிகப்பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷியா பார்வை உள்ளது.

    அந்த நகர் மீது தொடர்ந்து தாக்குதலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இன்று சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர். 19 பேர் காயம் அடைந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். மக்கள் வசிக்கும் கட்டடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    இடைவிடாமல் எரிசக்தி மற்றும் மின்சாரம் உற்பத்தி கட்டமைப்புகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் மின்சார உற்பத்தி திறனை இழந்துள்ளது. 16 ஏவுகணைகள் மற்றும் 13 டிரோன்கள் மூலம் எரிசக்தி மீது 8 தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    • சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷியாவுக்கு எந்த ஆயுதங்களையும் விற்பனை செய்யமாட்டோம் என தெரிவித்தார்.
    • அவர் மரியாதைக்குரிய நபரா? இல்லையா? என்று பார்ப்போம்- ஜெலன்ஸ்கி.

    உக்ரைன் மீது ரஷியா கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் போர் தொடுத்தது. இன்னும் தாக்குதல் நடைபெற்றுதான் வருகிறது. ரஷியாவுக்கு பதிலடி கொடுக்க உக்ரைன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளை பெரிதும் நம்பியுள்ளது.

    அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் வழங்கி வருகிறது. இதனால் உக்ரைன் தொடர்ந்து ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

    அதேவேளையில் வடகொரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ரஷியாவுக்கு மறைமுகமாக உதவி வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. ரஷியாவுக்கு உதவி செய்து வரும் நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதார தடைவிதித்து வருகிறது.

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து உக்ரைன் நாட்டில் அமைதி நிலவ முயற்சி மேற்கொண்டு வருகிறார். மேலும், அமைதிக்கான மாநாடு ஒன்றை நடத்த இருக்கிறது. இதில் பெரும்பாலான நாடுகள் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் டெலிபோன் மூலம் பேசியதாகவும், அப்போது "சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷியாவுக்கு எந்த ஆயுதங்களையும் விற்பனை செய்யமாட்டோம் என தெரிவித்தார்" என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    மேலும், "அவர் மரியாதைக்குரிய நபரா? இல்லையா? என்று பார்ப்போம். ஏனென்றால், அவர் எனக்கு வார்த்தை கொடுத்துள்ளார்" என்றார்.

    இது தொடர்பாக ஜோ பைடன் கூறுகையில் "ரஷியாவிற்கு சீனா ஆயுதங்கள் விற்பனை செய்யவில்லை என்கிறது. ஆனால், ஆயுதங்கள் தயாரிப்பதற்கான திறன் மற்றும் டெக்னாலஜி உள்ளிட்டவைகளை வழங்குகிறது. இவைகள் ரஷியாவிற்கு உதவுகின்றன.

    உக்ரைனுக்கும் சீனாவுக்கும் இடையில் அமைதி தொடர்பான ஒரே பார்வை இருந்தால், இரு நாட்டிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடக்கும். சீனாவுக்கு வேறு பார்வை இருந்தால், அமைதிக்கான மாற்று தயார் செய்யும் என ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

    • உக்ரைன் அரசின் பாதுகாப்பு மற்றும் உளவுப்பிரிவில் பணியாற்றி வந்த தளபதிகள் இரண்டு பேரும் ரஷியாவின் உளவுத்துறையினருக்கு துப்பு சொல்லி வந்துள்ளனர்.
    • ஒரு கட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொன்றுவிடுமாறு ரஷியா சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    கீவ்:

    அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள சக்தி வாய்ந்த ராணுவ அமைப்பான நேட்டோவில் இணைவதாக உக்ரைன் அறிவித்ததையடுத்து அதன் மீது அண்டை நாடான ரஷியா போரை தொடங்கியது.

    சுமார் 3 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவி வருவதால் ராணுவ பலம் மிகுந்த ரஷியாவின் நடவடிக்கையை சமாளித்து வருகிறது. இருப்பினும் உக்ரைன் மீது கூலிப்படை தாக்குதல், ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள் ஆகியவற்றுடன் கூடிய தாக்குதலை ரஷியா மேற்கொண்டு உக்ரைன் நாட்டை ஒடுக்க முயற்சித்து வருகிறது.

    இந்தநிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொல்ல சதி திட்டம் தீட்டியதற்காக உளவுப்பிரிவில் கர்னல் பதவி வகித்து வந்த 2 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அவர்களிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல உண்மைகளை அவர்கள் கக்கியுள்ளனர். அவற்றின் விவரம் வருமாறு:-

    உக்ரைன் அரசின் பாதுகாப்பு மற்றும் உளவுப்பிரிவில் பணியாற்றி வந்த தளபதிகள் இரண்டு பேரும் ரஷியாவின் உளவுத்துறையினருக்கு துப்பு சொல்லி வந்துள்ளனர்.

    இதற்காக பல கோடி ரூபாய் லஞ்சமாக பெற்றுள்ளனர். இதன்மூலம் நாட்டின் ரகசிய நடவடிக்கைகள், ராணுவ தாக்குதல்கள் குறித்தான தகவல்கள் ஆகியவற்றை கசிய விட்டுள்ளனர்.

    ஒரு கட்டத்தில் அவர்களுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொன்றுவிடுமாறு ரஷியா சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக பல கோடி பணம், ரஷியா நாட்டு குடியுரிமை, பெண்கள் ஆகியவை பேரமாக பேசப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புக்கொண்ட பின்னர் ரஷியாவில் இருந்து உயர்தர தொழில்நுட்பத்துடன் கூடிய 2 ஆளில்லா விமானங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டு அதிபரை படுகொலை செய்வதற்காக திட்டமும் வகுத்து தரப்பட்டுள்ளது.

    இதுகுறித்தான தகவல்களை உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளநிலையில் இருவர் மீதும் தேசத்துரோக வழக்கு பதியப்பட்டு மேல் விசாரணை நடத்தப்பட உள்ளதாக கூறியுள்ளனர்.

    • ஆஸ்திரேலிய பாதுகாப்புத்துறை மந்திரி ரிச்சர்டு மார்லெஸ் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • உக்ரைனுடன் ஆஸ்திரேலியா உறுதியாக துணைநிற்கும் என தெரிவித்தார்.

    கீவ்:

    ரஷியா-உக்ரைன் இடையிலான போர் 2 ஆண்டுகளை கடந்த பிறகும் தொடர்ந்து நடந்து வருகிறது. நேட்டோ உறுப்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்குத் தேவையான ராணுவ மற்றும் நிதியுதவிகளை வாரி வழங்கி வருகின்றன.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய பாதுகாப்புத்துறை மந்திரி ரிச்சர்டு மார்லெஸ் உக்ரைன் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். உக்ரைனின் லிவிவ் நகருக்குச் சென்ற அவர், உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷமிஹாலை சந்தித்துப் பேசினார்.

    அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ரிச்சர்டு மார்லெஸ், ஆஸ்திரேலிய அரசு சார்பில் உக்ரைனுக்கு குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பு, டிரோன், வெடிமருந்து உள்பட மொத்தம் 100 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவித் தொகுப்பு வழங்கப்படும். உக்ரைனுடன் ஆஸ்திரேலியா உறுதியாக துணைநிற்கும் என தெரிவித்தார்.

    • கடந்த வாரம் மின்சார உற்பத்தி நிலையம் மீது தாக்குதால் நடத்தியது.
    • உக்ரைனிடம் தற்போது வான்பாதுகாப்பு உபகரணங்கள் போதுமானதாக இல்லாததால் இழப்புகளை சந்தித்து வருகிறது.

    உக்ரைனின் தலைநகர் கீவ் நகரில் இருந்து சுமார் 150 கி.மீட்டர் தொலைவில் உள்ள செர்னிஹிவ் நகர் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 22 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    இன்று காலை ரஷியா 8 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டடம் மீது நடத்திய தாக்குதலில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதாக உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. செர்னிஹிவ் ரஷியா மற்றும் பெலாரஸ் எல்லையில் உள்ளது. இங்கு சுமார் 2.5 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள்.

    உக்ரைன் மீது ரஷியாவின் தாக்குதல் 3-வது ஆண்டாக நீடித்து வருகிறது. தற்போது அமெரிக்காவின் உதவி கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதால் உக்ரைனால் ரஷியாவின் வான்வழி தாக்குதலை எதிர்கொள்வதற்கு தடுமாறி வருகிறது. இதனால் உக்ரைன் இழப்புகளை சந்தித்து வருகிறது.

    கடந்த வாரம் முக்கியமான மின்சார உற்பத்தி நிலையம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 11 ஏவுகணைகளில் ஏழு ஏவுகணைகளை தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்தது. மேலும், தாக்குதல் நடத்த ஏவுகணை இல்லாததால் தாக்குதலை எதிர்கொள்ள நேரிட்டது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.

    குளிர்காலத்தில் ரஷியா உக்ரைனை நோக்கி முன்னேறாமல் இருந்தது. ஆனால் ஆயுத உதவி கிடைக்காமல் உக்ரைன் திணறி வரும் நிலையில், இதை சாதமாக பயன்படுத்திக் கொண்டு படிப்படியாக முன்னேறி வருவதாக ராணுவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    60 பில்லியன் அமெரிக்க டாலர் அளிவிலான ஆயுத உதவிகளுக்கு அமெரிக்காவின் நாடாளுமன்றம் இன்னும் ஒப்புதல் வழங்காமல் உள்ளது. இதனால் உக்ரைனுக்கு ஆயுத உதவி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

    வான்பாதுகாப்பு ஆயுதங்களை வழங்கும்படி மேற்கத்திய நாடுகளிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உதவி கேட்டு வருகிறார். உக்ரைன் போதுமான பாதுகாப்பு ஆயுதங்களை பெற்றிருந்தால் செர்னிஹிவ் தாக்குதல் நடைபெற்றிருக்கிறாது எனவும் தனது கவலையை தெரிவித்துள்ளார்.

    • ரஷியா 11 ஏவுகணைகளை மூலம் தாக்குதல் நடத்தியது.
    • ஏழு ஏவுகணைகளை வெற்றிகரமாக தாக்கி அழிக்கப்பட்டது.

    ரஷியா உக்ரைனின் கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த 11-ந்தேதி டிரிபில்லியா மின்சார உற்பத்தி நிலையத்தை ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் உற்பத்தி நிலையம் முழுமையாக சேதம் அடைந்து 100 சதவீதம் மின்சாரம் தயாரிக்கும் திறனை இழந்ததாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஜெலன்ஸ்கி கூறுகையில் "ரஷியா 11 ஏவுகணைகளை மின்சார உற்பத்தி நிலையம் நோக்கி வீசியது. அதில் உக்ரைன் ராணுவம் ஏழு ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியது. 4 ஏவுகணைகள் டிரிபில்லியா மின்சார நிலையத்தை தாக்கிவிட்டது. ஏனென்றால் எங்களிடம் ஏவுகணைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் இல்லை. மின்சார நிலையத்தை பாதுகாப்பதற்கான ஏவுகணை அனைத்தும் தீர்ந்துவிட்டன" என்றார்.

    இந்த மின்சார உற்பத்தி நிலையம் கீவ் நகரின் தெற்குப்பகுதியில் 30 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. கீவ், ஜிடோமிர், செர்காசி ஆகிய நகரங்களுக்கு மின்சாரம் வழங்கி வருகிறது.

    ரஷியாவின் தாக்குதலில் சிறந்த முறையில் எதிர்கொள்ளும் இடமாக உக்ரைன் தலைநகர் விளங்குகிறது. ஆனால், உக்ரைனுக்கு நிதியுதவி வழங்கும் விவகாரம் அமெரிக்காவின் பாராளுமன்றத்தில் தொடர்ந்து நிலுவையில் உள்ளதால் வான்பாதுகாப்பில் சற்று குறைபாடு ஏற்பட்டுள்ளது.

    • சுமார் 3 மில்லியன் நுகர்வோருக்கு மின்சாரம் வழங்கி வந்தது.
    • பெரிய அளிவலான தாக்குதல் எங்களுடைய எரிசக்தி துறையை மோசமாக பாதித்துள்ளதாக உக்ரைன் எரிசக்தி துறை மந்திரி தெரிவி்துள்ளார்.

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படவில்லை. சில நாடுகள் அமைதி பேச்சுவார்த்தைக்கு முன்வந்தன. இருந்த போதிலும் அவை அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது. தற்போது சுவிட்சர்லாந்து அமைதி பேச்சுவார்த்தை முயற்சியை கையில் எடுத்துள்ளது.

    தற்போது இரு நாடுகளும் மாறிமாறி கட்டமைப்புகளை குறிவைத்து டிரோன் தாக்குதல், ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றன. அந்த வகையில் உக்ரைனின் தலைநகர் கீவ், செர்காசி, ஜைடோமிர் மாகாணங்களுக்கு மின்சாரம் வழங்கி வந்த டிரைபில்ஸ்கா என்ற மிகப்பெரிய மின்சார உற்பத்தி நிலையத்தை ரஷியா தாக்குதல் நடத்தி அழித்துள்ளது.

    மின்சார உற்பத்தி நிலையம் எரிந்து ஒரு குறிப்பிட்ட தூரம் வரை புகை மூட்டமாக காட்சி அளித்ததாகவும், அது பயங்கரமானது எனவும் ஆலையை நிர்வகிக்கும் வாரியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

    ரஷியாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு பதிலடியாக உக்ரைன் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மாஸ்கோ தெரிவித்துள்ளது.

    டிரைபில்ஸ்கா உற்பத்தி நிலையம் சுமார் 3 மில்லியன் நுகர்வோருக்கு மின்சாரம் வழங்கி வந்தது. இந்த வருடத்தில் இருந்து இதன் தேவை சற்று குறைவாக என்பதால் மிகப்பெரிய பாதிப்பு இருக்காது எனத் தெரிவிக்கப்படுகிறது.

    ஆனால் வரவிருக்கும் கோடைக்காலத்தின்போது ஏசி பயன்படுத்தப்படும் என்பதால் அதிக மின்சார தேவை ஏற்படும். அப்போது பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    கார்கிவில் உள்ள எரிபொருள் கட்டமைப்பு மீது 10-க்கும் மேற்பட்ட தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த மாகாணத்தில் 2 லட்சம் மக்களுக்கு மேல் வசித்து வருவதாகவும், தொடர்ந்து அவர்கள் மின்சாரம் இல்லாமல் அவதிப்படுவதாகவும் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.

    பெரிய அளிவலான தாக்குதல் எங்களுடைய எரிசக்தி துறையை மோசமாக பாதித்துள்ளதாக உக்ரைன் எரிசக்தி துறை மந்திரி தெரிவி்துள்ளார்.

    2022-ம் ஆண்டு போர் தொடுத்ததில் இருந்து ரஷியா இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த மாதம் உக்ரைனின் எரிசக்தி தொடர்பான கட்டமைப்புகள் மீது அதிக அளவில் தாக்குதல் நடத்தியது. இதனால் நாட்டின் பாதி அளவிலான பகுதிகள் இருளில் மூழ்கியது.

    இந்த தாக்குதல் பாதுகாப்பதற்காகவும், எனர்ஜி சொத்துகளை பாதுகாப்பதற்கும் உக்ரைன் நாட்டிற்கான எச்சரிக்கை எனக் கருதப்படுகிறது. மேலும், உடனடியாக அவற்றை சரி செய்வதற்கான பரிசோனை எனவும் கூறப்படுகிறது.

    இதுபோன்ற வான் தாக்குதலை சமாளிக்க அதிகப்படியான வான் பாதுகாப்பு சிஸ்டம் தேவை என அதிகாரிகள் கேட்டு வரும் நிலையில், மெதுவாகத்தான் உக்ரைனுக்கு சப்ளை செய்யப்படுவதாக கூறப்படுவதாக தெரிகிறது.

    • உக்ரைனுக்கு வந்து, எங்கள் நகரங்களை எரித்தனர், பின்னர் உக்ரைனைக் குறை கூற முயன்றனர்.
    • தங்கள் சொந்த நாட்டிற்குள் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை.

    மாஸ்கோவில் நடந்த தாக்குதலில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    மாஸ்கோவில் என்ன நடந்தது என்பது வெளிப்படையானது. இந்த தாக்குதலுக்கு புதினும், மற்றவர்களும் எங்கள் மீது குற்றம்சாட்ட முயற்சிக்கிறார்கள். அவர்களின் முறைகள் எப்போதும் ஒரே மாதிரியானவை. அதையெல்லாம் முன்பே பார்த்திருக்கிறோம். எப்போதும் மற்றவர்களை குறை கூறுவார்கள். அவர்கள் உக்ரைனுக்கு வந்து, எங்கள் நகரங்களை எரித்தனர், பின்னர் உக்ரைனைக் குறை கூற முயன்றனர். அவர்கள் மக்களை சித்ரவதை செய்து கற்பழிக்கிறார்கள்-பின்னர் அவர்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள். எங்களுக்கு எதிராக போரை நடத்துகிறார்கள், ஆனால் அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்குள் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை.

    ரஷிய குடிமக்களை பற்றி பேசுவதற்குப் பதிலாக, இத்தாக்குதலை உக்ரைனுடன் எவ்வாறு இணைப்பது என்று யோசித்து புதின் ஒரு நாள் அமைதியாக இருந்தார். உக்ரேனிய மண்ணில் தற்போது கொல்லப்படும் நூறாயிரக்கணக்கான ரஷ்யர்கள், அவர்கள் நாட்டில் இருந்திருந்தால் நிச்சயமாக பயங்கரவாதிகளை தடுத்திருக்க முடியும். புதின் தனிப்பட்ட அதிகாரத்திற்காக இந்த சூழ்நிலைகளில் அதிகமானவற்றைப் பயன்படுத்த முயற்சிப்பார். தீவிரவாதிகள் எப்போதும் தோற்க வேண்டும் என்றார்.

    • குஜராத்தை சேர்ந்த ஹெமில் என்ற வாலிபர், ரஷிய ராணுவத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.
    • ரஷியாவில் பணிபுரியும் மற்றொரு இந்தியரான இம்ரான் என்பவர் தெரிவித்தார்.

    ரஷியாவில் அதிக சம்பளத்துடன் வேலை இருப்பதாக அழைத்து செல்லப்பட்டு இந்திய வாலிபர்கள் சிலரை அந்நாட்டு ராணுவத்தில் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. உதவியாளர்களாக பணியில் சேர்க்கப்பட்ட அவர்கள் உக்ரைனுக்கு எதிராக போரில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதையத்து இந்தியர்கள் சிலர் தங்களை மீட்கும்படி வீடியோ ஒன்றை வெளியிட்டனர். இதற்கிடையே சமீபத்தில் ரஷிய ராணுவத்தில் பணிபுரிந்த ஐதராபாத்தை சேர்ந்த முகமது அஸ்பான் (30) போரில் பலியானார்.


    இந்த நிலையில் ரஷிய ராணுவத்தில் பணிபுரிந்த மேலும் ஒரு இந்திய வாலிபர் உயிரிழந்துள்ளார். குஜராத்தை சேர்ந்த ஹெமில் என்ற வாலிபர், ரஷிய ராணுவத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். அவர் ரஷிய படைகள் கைப்பற்றிய கிழக்கு உக்ரைன் பிராந்தியமான டொனெட்ஸ்கில் உள்ள ராணுவ முகாமில் தங்கியிருந்தார்.

    இந்த நிலையில் போரில் ஏவுகணை தாக்குதலில் ஹெமில் பலியாகி விட்டதாக அவரது குடும்பத்தினருக்கு போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை ரஷியாவில் பணிபுரியும் மற்றொரு இந்தியரான இம்ரான் என்பவர் தெரிவித்தார். போரில் இறந்த ஹெமில் உடலை மீட்டு கொண்டு வர வேண்டும் என்று அவரது தந்தை அஸ்வின் இந்திய தூதரகத்துக்கு பல முறை இ.மெயில் அனுப்பியதாக தெரிவித்தார்.

    • இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சண்டை நீடித்து வருகிறது.
    • உக்ரைனின் பதிலடி தாக்குதலில் ரஷியாவிற்கு அதிக அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    ரஷியா- உக்ரைன் இடையிலான போர் இரண்டு வருடங்களை கடந்து இன்னும் நடைபெற்று கொண்டிருக்கிறது. ரஷியாவை எதிர்க்க உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நிதியுதவி அளித்து வருவதுடன் ஆயுதங்களும் கொடுத்து உதவி வருகிறது.

    இந்த நிலையில் இங்கிலாந்து பாதுகாப்பு செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ், உக்ரைன் தலைநகர் கீவ் நகர் சென்றிருந்தார். அப்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது, ரஷியாவிற்கு எதிராக தொடர்ந்து சண்டையிட 10 ஆயிரம் டிரோன்கள் வழங்கப்படும் என கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே டிரோன்களுக்காக 200 மில்லியன் பவுண்டு ஒதுக்கப்படும் என இங்கிலாந்து தெரிவித்திருந்த நிலையில் தற்போது, 125 மில்லியன் பவுண்டு கூடுதலாக ஒதுக்க ஒப்புக் கொண்டுள்ளது.

    10 ஆயிரம் டிரோன்களில் கப்பல்களை குறிவைத்து தாக்கும் ஆயிரம் டிரோன்கள் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உக்ரைன படைகள் கருங்கடலில் ரஷியாவின் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கு இங்கிலாந்தின் ஆயுதங்களை இதுவரை இல்லாத அளவிற்கு தற்போது பயன்படுத்தி வருகின்றன.

    கடந்த செவ்வாய்க்கிழமை உக்ரைன் டிரான் மூலம் ரஷியாவின் போர்க்கப்பலை தாக்கி அழித்தது. இதுவரை மூன்று கப்பல்களை அழித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    ×