search icon
என் மலர்tooltip icon

    உக்ரைன்

    • ரஷியாவின் 28 கப்பல்கள் மற்றும் படகுகள், ஒரு நீர்மூழ்கி கபப்ல், 16 ஆயிரத்து 186 டிரோன்கள் அழிக்கப்பட்டுள்ளது.
    • 651,810 வீரர்களை 2022 பிப்ரவரிக்குப் பிறகு ரஷியா இழந்துள்ளது.

    ரஷியா அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி படையெடுத்தது. அதில் இருந்து தற்போது வரை சண்டை நீடித்து வருகிறது. முதலில் உக்ரைன் எல்லைப் பகுதிகளில் பெரும்பகுதியை இழந்த நிலையில் அமெரி்க்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆதரவுடன் உக்ரைன் தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது.

    இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வரும் இந்த சண்டையில் ரஷியாவுக்கு ஏராளமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது. ஏறக்கறைய இந்த இரண்டு ஆண்களில் ரஷியா சுமார் 6 லட்சத்து 51 ஆயிரத்து 810 ராணுவ வீரர்களை இழந்துள்ளது என உக்ரைன் தெரிவித்துள்ளது.

    ரஷிய ராணுவத்தின் 8869 டாங்கிகள் (Tanks), 17,476 ஆயுத சண்டை வாகனம், 25,495 வாகனங்கள் மற்றும் எரிபொருள் டேங்குகளை அழித்துள்ளதாகவும் உக்ரைன தெரிவித்துள்ளது. ஒரே நாளில் 1,170 ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டனர் எனவும் உக்ரைன் ஆயுத படை ஜெனரல் ஸ்டாஃப் தெரிவித்துள்ளார்.

    28 கப்பல்கள் மற்றும் படகுகள், ஒரு நீர்மூழ்கி கபப்ல், 16 ஆயிரத்து 186 டிரோன்கள், 328 ஹெலிகாப்டர்கள், 369 விமானங்கள், 962 வான்பாதுகாப்பு சிஸ்டங்கள், 1204 பல ராக்கெட்டுகளை ஏவும் சிஸ்டம், 18 ஆயிரத்து 795 பீரங்கி சிஸ்டங்கள் ஆகியவற்றை அழித்ததாகவும் தெரிவித்துள்ளது.

    • போரில் குழந்தைகள் பெண்கள் உள்பட 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
    • கட்டிடத்தில் பலர் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    கார்கிவ்:

    உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த தொடங்கி 2½ ஆண்டுகளை கடந்து விட்டது. இந்த போரில் குழந்தைகள் பெண்கள் உள்பட 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்கி வருவதால் போர் தொடர்ந்து நீண்டு கொண்டே வருகிறது.

    இந்த நிலையில் வடகிழக்கு உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷியா வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் அங்குள்ள பல மாடி குடியிருப்பு கட்டிடத்தில் வெடிகுண்டுகளை வீசியது. இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் குழந்தைகள் உட்பட 40 பேர் படுகாயமடைந்தனர்.

    அந்த கட்டிடத்தின் 9 மற்றும் 12 வது தளங்களுக்கு இடையில் தீ கொழுந்து விட்டு எரிகிறது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். கட்டிடத்தில் பலர் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதையடுத்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷியாவின் ராணுவ விமான தாக்குதல்களில் இருந்து உக்ரைனைப் பாதுகாக்க உலக நாடுகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    • உக்ரைனின் சில பகுதிகளை ரஷிய படைகள் கைப்பற்றியது.
    • ரஷியா-உக்ரைன் தலா 103 கைதிகளை பரிமாற்றம் செய்து கொண்டனர்.

    ரஷியா-உக்ரைன் இடையே 2 ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இதில் உக்ரைனின் சில பகுதிகளை ரஷிய படைகள் கைப்பற்றியது.

    இதற்கிடையே ரஷியா-உக்ரைன் இடையே கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த நிலையில் ரஷியா-உக்ரைன் தலா 103 கைதிகளை பரிமாற்றம் செய்து கொண்டனர். 2022-ம் ஆண்டு கிழக்கு உக்ரைனில் உள்ள அசோவ்ஸ்டல் எக்கு ஆலையைக் கைப்பற்றியபோது பிடிபட்ட உக்ரைன் வீரர்கள் மற்றும் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் ராணுவத்தினர் ஊடுருவிய போது பிடிபட்ட வீரர்களை ரஷியா விடுவித்தது. அதேபோல் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைனில் சிக்கிய ரஷிய வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    • அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் உக்ரைன் சென்றார்.
    • உக்ரைனுக்கு 700 மில்லியன் டாலரை அமெரிக்கா நிதியாக வழங்குகிறது என்றார்.

    கீவ்:

    உக்ரைன்-ரஷியா இடையிலான போர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. போரை நிறுத்த அமெரிக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

    ஆனாலும் ரஷியாவுக்கு எதிராகப் போராடி வரும் உக்ரைன் அரசுக்கு அவ்வப்போது அமெரிக்கா நிதியுதவி செய்துவருகிறது.

    இதற்கிடையே, இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாக செயல்பட முடியும் என அதிபர் புதின் தெரிவித்தார். இதே கருத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் கூறியுள்ளார்.

    இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் உக்ரைன் சென்றுள்ளார். அவர் கீவ் நகரில் அமைச்சர்கள், அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார்.

    அப்போது, மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனின் மின்சாரம், கல்வி, சுகாதாரம் ஆகிய அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு அமெரிக்கா 700 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • அடுத்த மாதம் 7ம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.

    பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க 17 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியில் ரெஹான் அகமது, கஸ் அட்கின்சன், ஷோயப் பஷீர், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜோர்டான் காக்ஸ், ஜாக் க்ராலி, பென் டக்கெட், ஜோஷ் ஹல், ஜாக் லீச், ஒல்லி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஒல்லி ஸ்டோன்ஸ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    அடுத்த மாதம் 7ம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.

    • உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன.
    • போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன.

    கீவ்:

    உக்ரைன் - ரஷியா இடையேயான போர் 925 நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்துவருகின்றன.

    போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ஆனால், பேச்சுவார்த்தை தொடர்பாக உக்ரைன் இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியிட வில்லை. அதேவேளை, இருநாடுகளுக்கும் இடையே போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இந்நிலையில், உக்ரைனின் பொல்டோவா மாகாணத்தில் உள்ள ராணுவ பயிற்சி மையம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர். மேலும் 300 பேர் படுகாயமடைந்தனர்.

    • அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த வாரம் தெரிவித்தார்.
    • நீதித்துறை உள்பட 4 முக்கிய மந்திரிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

    கீவ்:

    ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கி வருவதால் ரஷியாவின் தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது.

    ரஷியாவில் உள்ள குர்ஸ்க் மாகாணத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பிடித்துவைத்து, ரஷியாவின் திட்டத்தை முறியடிக்க உக்ரைன் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    இதற்கிடையே, அதிபர் ஜெலன்ஸ்கி தலைமையிலான அமைச்சரவையில் இருந்து 4 முக்கிய மந்திரிகள் ராஜினாமா செய்துள்ளனர்.

    ஐரோப்பிய விவகாரங்களுக்கான துணை பிரதமர் ஒல்கா ஸ்டெபானிஷினா, தொழில்துறை மூலோபாய மந்திரி ஒலெக்சாண்ட்ர் கமிஷின், நீதித்துறை மந்திரி டெனிஸ் மலியுஸ்கா, சுற்றுச்சூழல் துறை மந்திரி ருஸ்லான் ஸ்ரிலெட்ஸ் ஆகிய 4 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

    அமைச்சரவை மாற்றம் இருக்கும் என கடந்த வாரம் குறிப்பிட்டிருந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பாராளுமன்றத்திற்கான அந்தக் கட்சியின் தலைவர், தற்போது இருக்கும் மந்திரிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் மாற்றப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.

    மேலும், உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார்.

    இந்நிலையில், உக்ரைனுக்கான புதிய வெளியுறவு மந்திரியாக ஆண்ட்ரி சைபிஹாவை நியமனம் செய்து அதிபர் ஜெலன்ஸ்கி உத்தரவிட்டார்.

    ரஷியாவுக்கு எதிராக போர் நடந்து வரும் நிலையில், வெளியுறவு மந்திரி உள்ளிட்ட மந்திரிகள் ராஜினாமா செய்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த வாரம் தெரிவித்தார்.
    • நீதித்துறை உள்பட 4 முக்கிய மந்திரிகள் நேற்று தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

    கீவ்:

    ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கி வருவதால் ரஷியாவின் தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது.

    ரஷியாவில் உள்ள குர்ஸ்க் மாகாணத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பிடித்துவைத்து, ரஷியாவின் திட்டத்தை முறியடிக்க உக்ரைன் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    இதற்கிடையே, அதிபர் ஜெலன்ஸ்கி தலைமையிலான அமைச்சரவையில் இருந்து 4 முக்கிய மந்திரிகள் ராஜினாமா செய்துள்ளனர்.

    ஐரோப்பிய விவகாரங்களுக்கான துணை பிரதமர் ஒல்கா ஸ்டெபானிஷினா, தொழில்துறை மூலோபாய மந்திரி ஒலெக்சாண்ட்ர் கமிஷின், நீதித்துறை மந்திரி டெனிஸ் மலியுஸ்கா, சுற்றுச்சூழல் துறை மந்திரி ருஸ்லான் ஸ்ரிலெட்ஸ் ஆகிய 4 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

    அமைச்சரவை மாற்றம் இருக்கும் என கடந்த வாரம் குறிப்பிட்டிருந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பாராளுமன்றத்திற்கான அந்தக் கட்சியின் தலைவர், தற்போது இருக்கும் மந்திரிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் மாற்றப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.

    இந்நிலையில், உக்ரைன் வெளியுறவு மந்திரியான டிமிட்ரோ குலேபா தனது பதவியை இன்று திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

    ரஷியாவுக்கு எதிராக போர் நடைபெற்று வரும் நிலையில், முக்கிய மந்திரிகள் ராஜினாமா செய்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என கடந்த வாரம் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.
    • அமைச்சரவையில் இடம் பிடித்துள்ள பாதிக்கும் மேற்பட்ட மந்திரிகள் மாற்றப்படலாம் என கட்சி தலைவர் தகவல்.

    ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுதம் வழங்கி வருவதால் ரஷியாவின் தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது. இதற்கிடையே ரஷியாவில் உள்ள குர்ஸ்க் மாகாணத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தை பிடித்து வைத்து, ரஷியாவின் திட்டத்தை முறியடிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் ஜெலன்ஸ்கி தலைமையிலான அமைச்சரவையில் இருந்து நான்கு முக்கிய மந்திரிகள் ராஜினாமா செய்துள்ளனர். ஐரோப்பிய விவகாரங்களுக்கான துணை பிரதமர் ஒல்கா ஸ்டெபானிஷினா, தொழில்துறை மூலோபாய மந்திரி ஒலெக்சாண்ட்ர் கமிஷின் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். இதில் கமிஷின் ஆயுத உற்பத்தியை அதிகரிப்பதில் முங்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தது.

    நீதித்துறை மந்திரி டெனிஸ் மலியுஸ்கா, சுற்றுச்சூழல் துறை மந்திரி ருஸ்லான் ஸ்ரிலெட்ஸ் ஆகியோரும் ராஜினாமா செய்துள்ளனர்.

    நான்கு மந்திரிகள் ராஜினாமா குறித்து அரசும் எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்த நான்கு பேருக்கு பதிலாக முக்கியமான மந்திரி பதவிக்கு புதிதாக யாரை நியமிக்க இருக்கிறார்கள் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த வாரம், உடனடியாக அமைச்சரவை மாற்றம் இருக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார். பாராளுமன்றத்திற்கான அந்த கட்சியின் தலைவர், தற்போது இருக்கும் மந்திரிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் மாற்றப்படுவார்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    ரஷியாவுக்கு எதிராக சண்டை நடைபெற்று வரும் நிலையில், இந்த ராஜினாமா விவகாரம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

    • உக்ரைன் மீது ரஷியா இன்று திடீர் தாக்குதல் நடத்தியது.
    • இதில் 40 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 200 பேர் காயமடைந்தனர்

    மாஸ்கோ:

    உக்ரைன்-ரஷியா இடையிலான போர் இரண்டு ஆண்டுகளைக் கடந்து நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ரஷியா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது.

    இந்நிலையில், உக்ரைன் நாட்டின் மீது ரஷியா இன்று திடீர் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 200 பேர் காயமடைந்தனர்

    இதுதொடர்பாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், உக்ரைனின் பொல்டாவா பகுதியில் உள்ள கல்வி நிலையம் மற்றும் மருத்துவமனை மீது ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் குறைந்தது 49 பேர் பலியாகினர். 200-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் ரஷியா 2 பாலிஸ்டிக் ஏவுகணையைப் பயன்படுத்தி உள்ளது என தெரிவித்தார்.

    இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம், இது காட்டுமிராண்டித்தனமான செயல் என தெரிவித்துள்ளது.

    • உக்ரைன் பகுதிகள் மீது ரஷியா விடாமல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.
    • ரஷியாவின் ரோன்களின் தாக்குதலை முறியடிக்க 70 உக்ரைன் பெண்கள் பாதுகாப்பு படையில் சேர்ந்துள்ளனர்.

    ரஷியா - உக்ரைன் போர் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அண்மையில் உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷிய ராணுவம் டிரோன் தாக்குதலை ரஷியா நடத்தியது. இந்த டிரோன்களை தங்களின் ராணுவம் தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்திருந்தது.

    இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ரஷியாவின் சராதோவ் [Saratov] பகுதியில் உக்ரைன் டிரோன்களை ஏவி சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் 20 டிரோன்களை தாக்கி அழித்துள்ளதாக ரஷிய ராணுவம் தெரிவித்தது. டிரோன் விழுந்து சராதோவ் பகுதியில் உள்ள 38 மாடி குடியிருப்பு கட்டடம் தீப்பற்றி எரிந்தது.

    உக்ரைன் பகுதிகள் மீது ரஷியா விடாமல் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. ராட்சத மிசைல்கள் மற்றும் டிரோன்களை உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் பகுதிகள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் ரஷியாவின் டிரோன் தாக்குதலை முறியடிக்க உக்ரைன் பெண்கள் போர்க்களத்திற்கு வந்துள்ளனர். இந்த பெண்கள் குழு ரஷியாவின் டிரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

    ரஷியாவின் தாக்குதலை சமாளிக்க ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரம் உக்ரைன் ஆண்கள் ராணுவத்தில் சேர்க்கப்படுகின்றனர். அவர்கள் உக்ரைன் எல்லையை பாதுகாத்து வருகின்றனர். ஆண்களோடு கைகோர்த்து தற்போது பெண்களும் நாட்டை பாதுகாக்க முன்வந்துள்ளனர். ரஷியாவின் டிரோன் தாக்குதலை முறியடிக்க முதற்கட்டமாக 70 பெண்கள் பாதுகாப்புப் படையில் சேர்ந்துள்ளனர்.

    • ரஷியா நேற்று இரவு, பல கட்டங்களாக உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷிய ராணுவம் டிரோன் தாக்குதலை நடத்தி வருகிறது
    • மின்சார ஆற்றல் உள்கட்டமைப்பைக் குறிவைத்து ரஷியா மிசைல்களை ஏவி வருகிறது.

    ரஷியா நேற்று இரவு, பல கட்டங்களாக உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷிய ராணுவம் டிரோன் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த டிரோன்களை தங்களின் ராணுவம் தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்திருந்தது. இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ரஷியாவின் சராதோவ் [Saratov] பகுதியில் உக்ரைன் டிரோன்களை ஏவி சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் 20 டிரோன்களை தாக்கி அழித்துள்ளதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது. டிரோன் விழுந்து சராதோவ் பகுதியில் உள்ள 38 மாடி குடியிருப்பு கட்டடம் தீப்பற்றி எரிந்தது.

    இந்நிலையில் உக்ரைன் பகுதிகள் மீது ரஷியா விடாமல் தாக்குதல் நடத்தி வருகிறது. ராட்சத மிசைல்கள் மற்றும் டிரோன்களை உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் பகுதிகள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    இந்த தாக்குதல்களில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 37 பேர் காயமடைந்தனர். மேற்கு லுட்ஸ்க், கிழக்கு டினிப்ரோ மற்றும் தெற்கு சபோரிஜியா பகுதிகளில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மின்சார ஆற்றல் உள்கட்டமைப்பைக் குறிவைத்து மிசைல்கள் ஏவப்பட்டுள்ளன.

    இதனால் நாட்டின் மிகப்பெரிய ஆற்றல் உற்பத்தி நிறுவனம் DTEK கீவ் உள்ளிட்ட தாக்குதலுக்கு உள்ளான 15 நகரங்களில் குறிப்பாக லெவிவ் [lviv] மின்சாரம் சேவைகளை நிறுத்தியுள்ளது. இதனை அந்த மாகாணத்தின் ஆளுநர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இந்த தாக்குதலால் தண்ணீர் விநோயாகம் முடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×