search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இதை நிறைவேற்றினால் அதிபர் பதவியில் இருந்து விலக தயார்: ஜெலன்ஸ்கி திடீர் அறிவிப்பு
    X

    இதை நிறைவேற்றினால் அதிபர் பதவியில் இருந்து விலக தயார்: ஜெலன்ஸ்கி திடீர் அறிவிப்பு

    • உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 3 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.
    • போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் உக்ரைனுக்கு அழைப்பு இல்லை என்றார் அதிபர் டிரம்ப்.

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 3 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நிதியுதவி அளித்து வருகின்றன. இரு நாடுகள் இடையிலான போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன.

    இதற்கிடையே, அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு போர்நிறுத்தம் குறித்த பேச்சுகள் தீவிரமடைந்துள்ளன. ஆனாலும் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் உக்ரைனுக்கு அழைப்பு இல்லை என டிரம்ப் தெரிவித்தது சர்ச்சையானது.

    இந்நிலையில், உக்ரைன் அதிபர் பதவியில் இருந்து விலகத் தயாராக இருக்கிறேன் என அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, தலைநகர் கீவில் அதிபர் ஜெலன்ஸ்கி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    உக்ரைனில் அமைதி திரும்ப நான் எனது பதவியை விட்டுத் தரவேண்டும் என்றால் அதற்கு தயாராகவே இருக்கிறேன். உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினர் பதவி கொடுத்தால் அதிபர் பதவியை விட்டு விலகத் தயாராக உள்ளேன்.

    உக்ரைனின் நிலைப்பாட்டை டிரம்ப் புரிந்துகொள்ள வேண்டும். ரஷியாவின் தாக்குதலால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, டிரம்ப் ரஷியாவிடம் இருந்து எங்களுக்குப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.

    இந்தப் பிராந்தியத்தில் அமைதி திரும்ப உக்ரைனின் கூட்டாளியாக டிரம்ப் இருக்க வேண்டும். இதை டிரம்ப் புரிந்து கொள்வோர் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

    Next Story
    ×