என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
    X

    கோப்பு படம்.

    கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

    • வில்லியனூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    • இதை தொடர்ந்து அவர்களிடமிருந்து 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

    வில்லியனூர் அருகே அரசூர் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வில்லியனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர்.

    அப்போது சந்தேகப்படும் படி நின்றிருந்த 2 வாலிபர்களை பிடித்து அவர்களது சட்டை பையில் சோதனை நடத்திய போது சிறு சிறு பொட்ட லங்களாக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரி யவந்தது. இதை தொடர்ந்து அவர்களிடமிருந்து 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் வில்லியனூர் ஜி.என்.பாளையம் நடராஜன் நகரை சேர்ந்த ராஜேஷ் (வயது 22) மற்றும் மணிகண்டன் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×