search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மினிவேனில் இயங்கிய போலி மதுபான தொழிற்சாலை
    X

     கைதான 2 பேரை படத்தில் காணலாம்.

    மினிவேனில் இயங்கிய போலி மதுபான தொழிற்சாலை

    • 3 பேர் கைது
    • மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    புதுச்சேரி;

    புதுவை வில்லியனூர்- திருக்காஞ்சி ரோட்டில் நேற்று ஒரு மினி வேன் சந்தேகப்படும்படி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    நீண்ட நேரமாக ஒரே இடத்தில் அந்த மினி வேன் நிற்பது குறித்து சிறப்பு அதிரடிப் படை போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதைய டுத்து, போலீசார் அங்கு விரைந்து வந்து, அந்த மினி வேனை சோதனையிட்டனர்.

    இதில் போலி மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப் படும். எரிசாராயம், கள்ளச் சாராயம், காலி மதுபாட்டில் கள், ஹாலோகிராம் ஸ்டிக்கர்கள், தமிழக போலி மதுபான லேபிள்கள் மற்றும் மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுபற்றி உடனடியாக புதுச்சேரி கலால்துறையின ருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கலால்துறை அதிகாரிகள் விரைந்து சென்று, போலி மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப் பட்ட மூலப்பொருட்களு டன் மினிலாரியை கைப் பற்றினர்.

    அப்போது சந்தேகப்படும் படி நின்றுக் கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் செந்தில்குமார், சீனு என்பதும். இவர்கள் மினிவேனில் போலி மதுபானம் தயாரித்து அதனை தமிழக பகுதியில் விற்பனை செய்ய தயாராகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் விசாரணை நடத்தியதில் இந்த போலி மதுபானம் தயாரிப்பில் காலாப்பட்டை அடுத்த தமிழக பகுதியான அனு மந்தை அருகே செட்டி யான்குப்பம் பகுதியை சேர்ந்த ராஜசேகர் முக்கிய குற்றவாளியாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ராஜசேகரையும் கலால் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×