என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சூதாட்ட கும்பல் 6 பேர் கைது
    X

    கோப்பு படம்.

    சூதாட்ட கும்பல் 6 பேர் கைது

    • புதுவை உருளையன்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாஹிர் உசேன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    புதுச்சேரி:

    புதுவை உருளையன்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாஹிர் உசேன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாணர பேட்டை கொளத்தூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ஜாகிர் உசேன் மற்றும் போலீசார் குறிப்பிட்ட வீட்டிற்கு சென்று பார்த்தனர்.

    அப்போது அங்கு 6 பேர் கொண்ட கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். போலீசார் அவர்களை விரட்டி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பெரியார் நகரை சேர்ந்த சாலமன் கொளத்தூர் பேட் சேர்ந்த முனியப்பனின் மகன் ராஜா என்கிற பொக்கை ராஜா , எல்லையம்மன் தோப்பு பகுதியில் சேர்ந்த சந்திரனின் மகன் சுதாகர் , நகராட்சி குடியிருப்பில் சேர்ந்த கணேஷ் , எல்லையம்மன் கோவில் வீதியை சேர்ந்த கண்ணனின் மகன் ஸ்ரீதர் , எல்லையம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஜோசப்பின் மகன் சூசை என்கிற சூசைராஜ் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து சூதாட பயன்படுத்திய சீட்டுகள் ரூ.5 ஆயிரத்து 690 ரொக்க பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×