search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தொடர் கனமழை எதிரொலி: புதுச்சேரியில் பள்ளி- கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
    X

    தொடர் கனமழை எதிரொலி: புதுச்சேரியில் பள்ளி- கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

    • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் விடுமுறை அறிவிப்பு.

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

    இதன் காரணமாக வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

    நாளையும் கனமழை நீடிக்கும் என்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் விடுமுறை அறிவித்துள்ளார்.

    Next Story
    ×