search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மீன்பிடி தடைகால நிவாரணம்
    X

    கோப்பு படம்.

    மீன்பிடி தடைகால நிவாரணம்

    • ரூ.15 ஆயிரமாக வழங்க வேண்டும்
    • மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வலியுறுத்தல்

    புதுச்சேரி:

    மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை பிரதேச செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி புதுவை யில் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டு உள்ளது.

    இடைக்கால நிவாரண மாக மீனவ குடும்பங்களுக்கு புதுவை அரசு வழங்கும் ரூ.6 ஆயிரத்து 500 ஆயிரம் போதுமானது அல்ல. ஏற்கனவே 45 நாட்கள் அறிவிக்கப்பட்ட தடை காலம் 2017ம் ஆண்டு முதல் 61 நாட்களாக அமல்படு த்தப்படுகிறது.

    புதுவையில் 18 மீனவ கிராமங்களில் 360 விசைபடகுகளும், ஆழ்கடலுக்கு செல்லும் 50 பெரும் விசைப்படகுகளும், மீன் பிடிதொழிலுக்கு பயன்படுத்தப் பட்டு வருகிறது.

    இந்த தொழிலை நம்பி சுமார் 19 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை பாது காப்பாக நிறுத்துவதோடு படகுகள் மற்றும் எஞ்ஜின், வலைகளை ரிப்பேர் செய்வ தற்கான ெசலவுகளும் அதிகரித்து உள்ளன.

    வருமானம் இல்லாத நிலையில் மீனவ குடு ம்பங்கள் பசி பட்டினியால் வாழக்கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே நிவாரண தொகையை ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×