என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
புதுவை துணைநிலை ஆளுநராக பதவியேற்று 2 ஆண்டு நிறைவு- தமிழிசைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி நேரில் வாழ்த்து
BySuresh K Jangir18 Feb 2023 3:53 AM GMT
- பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் குறித்தும், நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் ஆலோசித்தனர்.
- முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பது சம்பந்தமாக முதல்-அமைச்சர் ரங்கசாமி கவர்னர் தமிழிசையிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை கவர்னராக தமிழிசை பதவியேற்று 2 ஆண்டினை நேற்றுடன் நிறைவு செய்தார்.
அதனையொட்டி முதல்-அமைச்சர் ரங்கசாமி ராஜ் நிவாசில் கவர்னர் தமிழிசையை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
பதிலுக்கு கவர்னர் தமிழிசை தனது 2 ஆண்டு சாதனைகள் அடங்கிய யுனைடடு பார் புராகிரஸ் என்ற ஆங்கில நூலை பரிசாக முதல்-அமைச்சருக்கு வழங்கினார்.
பின்னர் இருவரும் நிர்வாகம் தொடர்பாக ஆலோசனை நடத்தினர். பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் குறித்தும், நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் ஆலோசித்தனர். மேலும் முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பது சம்பந்தமாக முதல்-அமைச்சர் ரங்கசாமி கவர்னர் தமிழிசையிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
முன்னதாக புதுவை கவர்னராக பதவியேற்று 2 ஆண்டை நிறைவு செய்ததையொட்டி கவர்னர் தமிழிசை மணக்குள விநாயாகர் கோவிலில் வழிபட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X