என் மலர்
நீங்கள் தேடியது "ரங்கசாமி"
- புதுச்சேரி பிராந்தியத்தில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 386 ரேஷன்கார்டுகள் உள்ளது.
- காரைக்காலில் 60 ஆயிரத்து 225, மாகியில் 7 ஆயிரத்து 981, ஏனாமில் 15 ஆயிரத்து 498 என மொத்தம் 3 லட்சத்து 47 90 ரேஷன்கார்டுகள் உள்ளன.
புதுச்சேரி:
புதுச்சேரி ரேஷன் கடைகளில் சிவப்பு ரேஷன்கார்டுகளுக்கு 20 இலவச அரிசியும், மஞ்சள் கார்டுகளுக்கு 10 கிலோ இலவச அரிசியும் வழங்கப்படுகிறது.
இதற்கிடையே புதுச்சேரி சட்டசபையில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2 கிலோ இலவச கோதுமை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். இந்த திட்டத்தை திலாசுப்பேட்டை ரேஷன் கடையில் 2 கிலோ இலவச கோதுமையை பொதுமக்களுக்கு வழங்கி முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
அக்டோபர், நவம்பர் மாதத்துக்கான தலா 2 கிலோ வீதம் 4 கிலோ இலவச கோதுமை வழங்கப்பட்டது. இதன்பின்னர் முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
இலவச அரிசி மற்றும் கோதுமை தொடர்ச்சியாக வழங்கப்படும். சட்டமன்றத்தில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் அரசு செயல்படுத்தி வருகிறது. ஜனவரி 3-ந்தேதி முதல் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு ரேஷன்கடைகள் மூலம் வழங்கப்படும்.
பிரதமர், முதல்-அமைச்சர் படம் மட்டும் அரிசி மற்றும் கோதுமை வழங்கும் பையில் இருந்தால் போதும் என கவர்னர் அறிவுறுத்தியதால், அவரின் படம் அச்சிடவில்லை என்றார்.
அப்போது த.வெ.க. தலைவர் விஜய், ரேஷன் கடைகள் செயல்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளாரே என நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, பொதுமக்களை விசாரித்தால் ரேஷன்கடைகள் மூலம் அரிசி, கோதுமை வழங்கப்படுவதை அறிந்து கொள்ளலாம். குறைகள் இருந்தால் சொல்லாம் என பதிலளித்தார்.
புதுச்சேரி பிராந்தியத்தில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 386 ரேஷன்கார்டுகள் உள்ளது. காரைக்காலில் 60 ஆயிரத்து 225, மாகியில் 7 ஆயிரத்து 981, ஏனாமில் 15 ஆயிரத்து 498 என மொத்தம் 3 லட்சத்து 47 90 ரேஷன்கார்டுகள் உள்ளன.
இந்த ரேஷன் கார்டுகளுக்கு இலவச கோதுமை விநியோகம் செய்ய மாதந்தோறும் புதுச்சேரி பிராந்தியத்துக்கு 521, காரைக்காலுக்கு 120, மாகிக்கு 16, ஏனாமுக்கு 31 என 688 மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட உள்ளது. இலவச கோதுமை திட்டத்தின் மூலம் புதுச்சேரி அரசுக்கு கூடுதலாக மாதம் ரூ.3.25 கோடி செலவாகும் என்றார்.
- விஜய் பேசிய அனைத்து கருத்துகளும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
- புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமியை விமர்சனம் செய்வதற்கு பதிலாக மத்திய அரசை விஜய் விமர்சனம் செய்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
த.வெ.க. தலைவர் விஜய்க்கு இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது. ஆனால் புதுச்சேரியில் 12 நிமிடம் உரையாற்றிய அவருடைய பேச்சில் தெளிவுகள் இல்லை. புதுச்சேரி பற்றி புரிதல் விஜய்க்கு இல்லை.
மத்திய அரசு நிதி உதவி, சுற்றுலா பயணிகளுக்கு கழிவறை வசதி, ரேஷன் கடை உள்ளிட்டு அனைத்துமே புதுச்சேரியில் உள்ளது. இதனாலேயே விஜய் பேசிய அனைத்து கருத்துகளும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமியை விமர்சனம் செய்வதற்கு பதிலாக மத்திய அரசை விஜய் விமர்சனம் செய்துள்ளார்.
விஜய்யை கட்சி தொடங்க சொன்னதே புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி தான். அப்படி இருக்கும் போது புதுச்சேரியில் விஜய் பொது கூட்டத்திற்கு ரங்கசாமி அனுமதி கொடுத்தது பெரிய விஷயம் அல்ல என்றார்.
- அரசு ஊழியர்கள், கவுரவ ரேஷன் கார்டுதாரர்கள் தவிர அனைத்து ரேஷன் கார்டுதார்களுக்கும் இந்த பரிசு தொகுப்பு வழங்கப்படும்.
- நெய் அரசின் கூட்டுறவு நிறுவனமான பாண்லேவில் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பில் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த தீபாவளி பண்டிகைக்கும் மளிகை, எண்ணெய், சர்க்கரை அடங்கிய பரிசு தொகுப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேஷன்கார்டு தாரர்களுக்கும் இந்த பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்.
இந்த தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய், பாசிப்பருப்பு என ரூ.750 மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்படும். இந்த பரிசு தொகுப்பு வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
இந்த பரிசு தொகுப்பில் 4 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ நாட்டு சர்க்கரை, ஒரு கிலோ பாசிப்பருப்பு, 300 கிராம் பாண்லே நெய், ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் அடங்கிய பை வழங்கப்பட உள்ளது.
புதுச்சேரியில் உள்ள அரசு ஊழியர்கள், கவுரவ ரேஷன் கார்டுதாரர்கள் தவிர அனைத்து ரேஷன் கார்டுதார்களுக்கும் இந்த பரிசு தொகுப்பு வழங்கப்படும்.
இந்த பரிசு தொகுப்பு புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. கான்பெட் நிறுவனம் பரிசு தொகுப்பு கொள்முதல் பணியில் ஈடுபட்டுள்ளது.
இதில் நெய் அரசின் கூட்டுறவு நிறுவனமான பாண்லேவில் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
- முதலமைச்சர் ரங்கசாமிக்கும், கவர்னர் கைலாஷ்நாதனுக்கும் இடையே உள்ள மோதல் போக்கு நீடித்து வருகிறது.
- முதலமைச்சர் டெல்லிக்கு சென்று முக்கிய தலைவர்களை சந்தித்தால் மட்டுமே புதுச்சேரிக்கு புதிய திட்டங்களை கொண்டு வந்து வாக்காளர்களை கவர முடியும்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு அரசு துறைகளில் நடவடிக்கை எடுக்க அதிகாரங்கள் இருந்தாலும், உச்சபட்ச அதிகாரம் கவர்னருக்கே உள்ளது.
அதனால்தான் புதுச்சேரியில் ஒவ்வொரு முறையும் ஆட்சியில் இருக்கும் முதலமைச்சர்கள் மாநில அந்தஸ்து வேண்டும் என கோரிக்கை விடுப்பதும் அதனை மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதும் தொடர்கதையாக உள்ளது.
தற்போது என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சர் ரங்கசாமிக்கும், கவர்னர் கைலாஷ்நாதனுக்கும் இடையே நிர்வாக ரீதியாக உரசல்கள் நீடித்து வருகிறது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு பட்டாசு மற்றும் இனிப்புகள் வழங்கும் கோப்புக்கு கவர்னர் அனுமதி அளிக்கவில்லை. அதேபோல் மத்திய அரசும் தீபாவளி இனிப்பு மற்றும் பட்டாசுகளை எம்.எல்.ஏ.க்கள் தங்களது சொந்த செலவிலேயே வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது.
இதற்கிடையே கட்டிட தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் கோப்புக்கும் கவர்னர் கைலாஷ்நாதன் இதுவரை அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் முதலமைச்சர் ரங்கசாமிக்கும், கவர்னர் கைலாஷ்நாதனுக்கும் இடையே உள்ள மோதல் போக்கு நீடித்து வருகிறது.
என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணியின் தலைவராக உள்ள முதலமைச்சர் ரங்கசாமி மத்திய அரசின் நிதி ஆயோக் கூட்டம் உள்ளிட்ட எந்த கூட்டங்களிலும் பங்கேற்காததும், பிரதமர் மற்றும் உள்துறை மந்திரியை சந்திக்காததே கவர்னரின் ஒத்துழையாமைக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
முதலமைச்சர் ரங்கசாமி அவ்வப்போது டெல்லி சென்று பிரதமர் மற்றும் உள்துறை மந்திரியை சந்தித்தாலே கவர்னரின் நிலைப்பாடு தலைகீழாக மாறியிருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு கடும் சவாலை ஏற்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்றால் முதலமைச்சர் டெல்லிக்கு சென்று முக்கிய தலைவர்களை சந்தித்தால் மட்டுமே புதுச்சேரிக்கு புதிய திட்டங்களை கொண்டு வந்து வாக்காளர்களை கவர முடியும் என பா.ஜ.க.வினர் கூறுகின்றனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி தீபாவளி பண்டிகையையொட்டி கவர்னர் கைலாஷ்நாதனை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். இது மரியாதை நிமித்தமானது என்றாலும் இருவருக்கும் உள்ள மோதல் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
- வெளியூர்களில் வேலை செய்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
- தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர். தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட நினைக்கும் வெளியூர்களில் வேலை செய்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
இதனிடையே, பண்டிகையை கொண்டாடிவிட்டு மீண்டும் வேலைக்கு திரும்புவோரின் நலனை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள்(21-ந்தேதி) ஒரு நாள் மட்டும், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் 25-ந்தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை நாளாக அறிவித்து புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்படி புதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் 21-ந்தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் நலிந்து போன கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- சர்க்கரை ஆலை, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை இயக்குவதில் சிரமம் உள்ளது.
புதுச்சேரி:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் புதுச்சேரி அரசு சார்பில் மானிய விலையில் மளிகை பொருட்கள், பட்டாசுகள் போன்றவை விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டு பல்வேறு நிர்வாக கோளாறு காரணமாக மானிய விலையில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் தீபாவளி சிறப்பு அங்காடி அமைக்கவில்லை.
தற்போது கான் பெட் நிறுவனம் சார்பில் பட்டாசு விற்பனை சிறப்பு அங்காடி மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் நடந்தது. இதில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பட் டாசு சிறப்பு அங்காடியை திறந்து வைத்தார்.
மேலும் இதேபோன்று கூட்டுறவு துறையின் மார்க்கெட் சொசைட்டி சார்பில் சூப்பர் மார்க்கெட் மற்றும் பட்டாசு விற்பனை கடையை முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் நலிந்து போன கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு அங்காடிக்கு ரூ.1 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. அங்காடியில் மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது.
சர்க்கரை ஆலை, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை இயக்குவதில் சிரமம் உள்ளது. சர்க்கரை ஆலையை தனியார் பங்களிப்புடன் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பாண்லே நிறுவனத்திற்கு 2024-25 ஆண்டில் 102 கூட்டுறவு சங்கங்களின் மூலம் பால் வழங்கிய 7,500 பயனாளிகளுக்கு ஊக்கத்தொகை தீபாவளி பண்டிகைக்கு முன்பு வழங்கப்படும். அதாவது, மொத்த மதிப்பில் ரூபாய்க்கு 5 பைசா வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதனால் பாண்லே நிறுவனத்திற்கு ரூ.3 கோடி கூடுதலாக செலவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விஜய் கட்சி தொடங்கிய போதும், மாநாடு நடத்திய போதும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
- இப்போதும் அவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒட்டலில் ரகசியமாக சந்தித்து பேசுவதாக கூறப்படுகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி நேற்று தனது 75-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் கவர்னர் கைலாஷ்நாதன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரிகள் என பலரும் போன், எக்ஸ் வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.
அதுபோல் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.
அதற்கு நன்றி தெரிவித்த முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:-
வணக்கம்பா- நன்றி...வாழ்த்துகள்- நல்லாயிருக்கணும்- வளமாக இருக்கணும். நல்லா வரணும். நல்லா பண்ணுங்க வெற்றி பெறணும், நல்லா செய்துட்டு வாங்க என விஜய்க்கு பதில் வாழ்த்துகள் தெரிவித்தார்.
புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கும் த.வெ.க. தலைவர் விஜய்க்கும் இடையே நட்பு உள்ளது. 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்- அமைச்சராக ரங்கசாமி பதவி ஏற்ற பிறகு பனையூரில் உள்ள விஜய் வீட்டில் அவரை நேரடியாக சந்தித்தார்.
அதன் பிறகு விஜய் கட்சி தொடங்கிய போதும், மாநாடு நடத்திய போதும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
இப்போதும் அவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒட்டலில் ரகசியமாக சந்தித்து பேசுவதாக கூறப்படுகிறது.
இதனால் புதுச்சேரி சட்டசபை தேர்தலில் த.வெ.க.வுடன் முதல்- அமைச்சர் ரங்கசாமி கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
- புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
- தாங்கள் எப்போதும் மகிழ்ச்சியோடும் மங்காத உடல்நலத்தோடும் திகழ்ந்திட விழைகிறேன்.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில்,
மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.
தாங்கள் எப்போதும் மகிழ்ச்சியோடும் மங்காத உடல்நலத்தோடும் திகழ்ந்திட விழைகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படும் என சட்டசபை கூட்டத்தொடரின் போது முதல்- அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
- வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மகளிருக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள 21 வயதுக்கு மேல் 55 வயதுக்குள் இருக்கும் மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படும் என சட்டசபை கூட்டத்தொடரின் போது முதல்- அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். அதன்படி, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மகளிருக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ. 1,000 உதவித்தொகை விரைவில் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மகளிர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, இந்தத் திட்டத்தை விரிவுப்படுத்தும் விதமாக புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து மகளிர்களுக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
- கவர்னர் கைலாஷ்நாதன் மீது முதலமைச்சர் ரங்கசாமி கடும் அதிருப்தியடைந்தார்.
- முதலமைச்சர் ரங்கசாமி கவர்னரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபைக்கு செல்ல மறுத்து வருகிறார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமிக்கும் கவர்னர் கைலாஷ் நாதனுக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது.
தற்போது சுகாதாரத் துறையில் இயக்குனர் நியமனத்தில் இது வெட்டவெளிச்சமானது. முதலமைச்சர் ரங்கசாமியின் பரிந்துரையை ஏற்காமல் கவர்னர் கைலாஷ்நாதன் தன்னிச்சையாக முடிவு செய்து சுகாதாரத்துறை இயக்குனராக டாக்டர் செவ்வேலை நியமித்தார். இதனால் கவர்னர் கைலாஷ் நாதன் மீது முதலமைச்சர் ரங்கசாமி கடும் அதிருப்தியடைந்தார்.
முதலமைச்சர் ரங்கசாமி கவர்னரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபைக்கு செல்ல மறுத்து வருகிறார்.
இந்த நிலையில் புதுச்சேரி மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் காச நோயாளிகளுக்கு சத்துணவு பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்று சத்துணவு பைகளை வழங்கினார்.
விழா முடிவில் கவர்னரிடம், முதலமைச்சருக்கும் தங்களுக்கும் கருத்து வேறுபாடு நிலவுகிறதா.? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் எனக்கு அப்படி ஒன்றும் தோன்றவில்லை. அப்படி ஒன்றும் இல்லை என அவர் பதில் அளித்தார்.
- கடந்த சில மாதமாகவே இலைமறை காய்மறையாக இருந்த இந்த மோதல் சுகாதாரத்துறை இயக்குனர் நியமனத்தில் வெடித்தது.
- பா.ஜ.க. தரப்பில் முதலமைச்சரை சமாதானப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் கைலாஷ் நாதனுக்கும், முதலமைச்சர் ரங்கசாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதமாகவே இலைமறை காய்மறையாக இருந்த இந்த மோதல் சுகாதாரத்துறை இயக்குனர் நியமனத்தில் வெடித்தது. தனது அதிகாரத்துக்கு உட்பட்ட துறையில் இயக்குனரை கூட நியமிக்க முடியாமல் முதலமைச்சராக பதவியில் தொடர்வது தேவையா? என ரங்கசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யக் கூடும் என்ற தகவல்கள் பரவி வருகிறது. இது புதுவை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க. தரப்பில் முதலமைச்சரை சமாதானப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது.
இந்த நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி இன்று காலை வழக்கம் போல கோரிமேட்டில் உள்ள அவரது வீட்டில் டென்னிஸ் விளையாடினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஆரோவில்லில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்றார்.
அங்கு அவரை துணை சபாநாயகர் ராஜவேலு, என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ், பாஸ்கர், லட்சுமி காந்தன் ஆகியோர் சந்தித்து பேசினர்.
அப்போது முதலமைச்சர் ரங்கசாமி, ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் நமது விருப்பப்பட்டதை செய்ய முடியாத நிலை உள்ளது. சிறிய பிரச்சனைகளில் கூட கவர்னர் மாளிகையின் தலையீடு உள்ளது என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அப்போது, நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுப்படுவோம், உறுதுணையாக இருப்போம் என்று எம்.எல்.ஏ.க்கள் உறுதியளித்தனர். தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் அங்கிருந்து புறப்பட்டு, அமைச்சர் லட்சுமி நாராயணனை அவரின் வீட்டில் சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பேசினர்.
அமைச்சர் திருமுருகன், காரைக்கால் நெடுங்காடு தொகுதி எம்.எல்.ஏ. சந்திரபிரியங்கா ஆகியோரும் புதுவைக்கு விரைந்துள்ளனர். அமைச்சர் தேனீஜெயக்குமார் உடல் நலக்குறைவால் ஓய்வெடுத்து வருகிறார். கட்சியில் எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்படுவதாக அவர் எம்.எல்.ஏ.க்களிடம் தெரிவித்துள்ளார்.
புதுவை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதால் ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் யாரும் சட்டசபைக்கு வரவில்லை.
- நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.
- முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக ரங்கசாமி உள்ளார். அவர் நிதி பொறுப்பையும் வகித்து வருகிறார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் இன்று காலை டெல்லியில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று டெல்லி சென்றார்.
இந்த கூட்டத்தில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
டெல்லி பயணம் குறித்து முதலமைச்சர் ரங்கசாமியிடம் நிருபர்கள் கேட்கும்போதெல்லாம், அப்புறம் சொல்கிறேன் என்ற ஒற்றை வார்த்தையை மட்டுமே கூறி வந்தார்.
ஆனால் நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொள்ளவில்லை.
அவர் டெல்லி செல்ல விமானத்தில் டிக்கெட் எதுவும் முன்பதிவு செய்யப்படவில்லை. நேற்று அவர் புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமி பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தது பா.ஜ.க. கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.






