என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமதாஸ்"

    • என் பெயரை அன்புமணி பயன்படுத்த கூடாது.
    • எங்கள் கட்சி பெயரை பயன்படுத்தி தவறு செய்கிறார்கள்.

    திண்டிவனம்:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது மகன் அன்புமணி தனி கட்சி ஆரம்பித்து கொள்ளட்டும். பா.ம.க. கட்சி பெயரையோ அல்லது எனது பெயரையோ பயன்படுத்தக்கூடாது. எனது இன்ஷியலை வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாம் என தொடர்ந்து பேசி வருகிறார்.

    இந்த நிலையில் இந்த மாதம் இறுதியில் சேலம் தலைவாசலில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் ராமதாஸ் தலைமையில் நடைபெறுகிறது. இதற்கு முன்னோட்டமாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ராமதாஸ் உட்பட 22 பேர் கொண்ட நிர்வாக குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் பா.ம.க.கவுரவ தலைவர் ஜி.கே. மணி, பா.ம.க.செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராமதாசின் மூத்த மகள் ஸ்ரீ காந்தி, அருள் எம்.எல்.ஏ., பொதுச் செயலாளர் முரளி சங்கர்,பொருளாளர் சையத் மன்சூர் அலி, முன்னாள் எம்.பி. துரை, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், மாநில நிர்வாகி பரந்தாமன் உள்ளிட்ட 22 நிர்வாகிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    என் பெயரை அன்புமணி பயன்படுத்த கூடாது. அவர் அன்புமணி ராமதாஸ் அல்ல. அன்புமணி மட்டுமே. எங்கள் கட்சி பெயரை பயன்படுத்தி தவறு செய்கிறார்கள். அன்புமணிக்கு கட்சியே இல்லை. அவர் உறுப்பினரும் இல்லை. பா.ம.க.வை கைப்பற்ற அவர் பம்மாத்து வேலை செய்து கொண்டிருக்கிறார். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

    அன்புமணி பா.ம.க. தலைவர் இல்லை என்பது வழக்கில் தெளிவுபடுத்தபட்டுள்ளது. பா.ம.க.வை நான் கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி ஆரம்பித்தேன். 46 ஆண்டுகள் கட்சிக்காக உழைத்தேன். அன்புமணிக்கு பல்வேறு பதவிகள் கொடுத்து அழகு பார்த்தேன். 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று ஆலமரம் போல் பா.ம.க.வை வளர்த்தேன். ஆலமரம் கிளையின் நுனியை வெட்ட நினைப்பவர்கள் கீழே விழுவார்கள். ஆயிரம் பொய் மூட்டைகளை அன்புமணி ஊடகங்களுக்கு தெரிவித்து வருகிறார். நான் வளர்த்த பூந்தோட்டத்தில் உள்ள செடிகளை பல குரங்குகள் நாசம் செய்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனை தொடர்ந்து நடைபெற்ற பா.ம.க. நிர்வாக குழு கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    ஒட்டு கேட்பு கருவியை வைத்து சொந்த தந்தைக்கு ஆப்பு வைக்க துணிந்தவர்கள் மீது புகார் கொடுத்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையை கண்டிப்பது.

    அன்புமணியின் ஆட்டம் பாட்டம், ஆதாயம் ஆகியவைகளுக்காக அசைந்து, வளைந்து நெளிந்து தேர்தல் ஆணையத்தில் பொய்யான ஆவணங்களை கொடுத்து ஆணைத்தையே ஏமாற்றியது குறித்து ஆய்வு செய்து அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நிலுவையில் உள்ள அன்புமணி மீதான ஊழல் வழக்கோடு, கட்சியின் சின்னம், தலைவர் சம்மந்தமான விஷயத்தில் அன்புமணி மற்றும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளையும் மோசடி வேலைகளையும் சேர்த்து சி.பி.ஐ. விரைந்து விசாரித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கவும், பேச்சுவார்த்தை நடத்தவும், வியூகம் அமைக்கவும் ராமதாசுக்கு முழுஅதிகாரம் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

    • இந்த மாதம் இறுதியில் சேலம் தலைவாசலில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெறுகிறது.
    • 22 நிர்வாகிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    திண்டிவனம்:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது மகன் அன்புமணி தனி கட்சி ஆரம்பித்து கொள்ளட்டும். பா.ம.க. கட்சி பெயரையோ அல்லது எனது பெயரையோ பயன்படுத்தக் கூடாது. எனது இன்ஷியலை வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாம் என தொடர்ந்து பேசி வருகிறார்.

    இந்த நிலையில் இந்த மாதம் இறுதியில் சேலம் தலைவாசலில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெறுகிறது. இதற்கு முன்னோட்டமாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் ராமதாஸ் உட்பட 22 பேர் கலந்து கொண்ட நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் பா.ம.க.கவுரவ தலைவர் ஜி.கே. மணி, பா.ம.க.செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் ராமதாசின் மூத்த மகள் ஸ்ரீ காந்தி,அருள் எம்.எல்.ஏ.,பொதுச் செயலாளர் முரளி சங்கர்,பொருளாளர் சையத் மன்சூர் அலி, முன்னாள் எம்.பி. துரை, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், மாநில நிர்வாகி பரந்தாமன் உள்ளிட்ட 22 நிர்வாகிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அன்புமணி தொடர்ந்து பா.ம.க.பெயரையும், டாக்டர் ராமதாஸ் பெயரை பயன்படுத்தி வருவதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும், கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும், வருகிற தேர்தலில் தேசிய கட்சியுடன் கூட்டணி அமைக்கலாமா? அல்லது மாநில கட்சியுடன் கூட்டணி அமைக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் புதிய கட்சியுடன் கூட்டணி அமைக்கலாமா? என டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • முதலில் பரபரப்பை ஏற்படுத்தினாலும் நாளடைவில் சரியாகிவிடும் என்றுதான் நினைத்தார்கள் பலரும்.
    • ராமதாஸை சிலர் ஆட்டிவைப்பதாகவும் துரோகிகள் சிலர் உடன் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

    தமிழக அரசியலில் தந்தை, மகன் இணைந்து பணியாற்றுகிறார்கள். அது கட்சிகள் என்று தெரியுமா? என்று கேட்டால், அனைவரும் சொல்வது தி.மு.க., பா.ம.க. என்று... தந்தையின் சொல்படி கேட்டு கட்சியில் பணியாற்றி வருகிறார்கள் என்று கூறப்பட்டது. அதன்படி, மு.க.ஸ்டாலின், தி.மு.க.வில் இணைந்து தொண்டர், செயலாளர், இளைரஞரணி தலைவர், மேயர், துணை முதலமைச்சர் என பணியாற்றி தற்போது முதலமைச்சராக உள்ளார்.

    அன்புமணி ராமதாஸ், பா.ம.க.வில் இணைந்தவுடன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்று பின்னர் கட்சியின் தலைவராக பணியாற்றி வருகிறார்.

    இப்படி இருக்கும் நிலையில், தி.மு.க.வில் தந்தைக்கு பிறகு கட்சியை சிறப்பாக நடத்தி வருகிறார் மு.க.ஸ்டாலின். ஆனால் பா.ம.க.விலோ கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில் தந்தை- மகனுக்கும் ஏற்பட்ட கருத்து மோதல் முதலில் பரபரப்பை ஏற்படுத்தினாலும் நாளடைவில் சரியாகிவிடும் என்றுதான் நினைத்தார்கள் பலரும். ஆனால், அந்த மோதலோ ஓராண்டாக நீடித்து வருகிறது.

     

    ராமதாஸின் மகள் வழி பேரனான முகுந்தனை பா.ம.க. இளைஞரணி செயலாளராக நியமிப்பதில் தொடங்கிய அதிகாரப் போட்டி தற்போது கட்சி யாருக்கு சொந்தமானது? என்று வரை சென்றுள்ளது.

    மேலும் அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவதும், ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி நீக்குவதும் என போட்டாபோட்டியாக தொடங்கி தைலாபுரம், பனையூர் என மாற்றி மாற்றி அறிக்கைகள் வந்தன. இதனிடையே, இருதரப்பினரும் போட்டிபோட்டு பொதுக்குழுவை கூட்டினார்கள்.

    கட்சி நிர்வாகிகள் நியமனம், வேட்பாளர் தேர்வு, கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் போன்ற முக்கிய முடிவுகளில் இருவரின் அதிகாரப் போட்டியே இந்த மோதலின் அடிப்படை என்று கூறப்பட்டது. ஆனால் அன்புமணியோ, ராமதாஸை சிலர் ஆட்டிவைப்பதாகவும் துரோகிகள் சிலர் உடன் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். வேவு பார்க்க டெலிபோனில் ஓட்டுகேட்பு கருவி வைக்கப்பட்டது என்றும் அது அன்புமணியின் வேலை தான் என்று ராமதாஸ் குற்றம்சாட்டினார்.

     

    தந்தை, மகனுக்கான மோதலால் கட்சி நிர்வாகிகள் மட்டுமில்லாமல் அதிமுக போன்ற கூட்டணிக் கட்சிகள் பாமகவுடன் கூட்டணி அமைப்பதில் குழப்பத்தில் உள்ளன. யாரை அணுகுவது எனத் தெரியாமல் தவிக்கின்றன.

    இந்த மோதல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலுக்கு முன்பாக தீர்க்கப்படாவிட்டால், கட்சியின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றன. 

    • கட்சியில் இருந்த மூத்தவர்களை கடுமையாக அவமானப்படுத்தியவர் அன்புமணி.
    • துரோகிகள் என அன்புமணி கருதும் அனைவரும் கட்சியை விட்டு வெளியேற தயார்.

    சென்னை:

    துரோகிகள் இருக்கும் வரை ஒன்றிணைய முடியாது என அன்புமணி கூறியிருந்தார். இதற்கு, ராமதாசும், அன்புமணியும் ஒன்றாக இணைவார்கள் எனில் கட்சியை விட்டு வெளியேற தயார் என்று ஜி.கே. மணி கூறியுள்ளார்.

    செய்தியாளர்கள் சந்திப்பில் ஜி.கே.மணி கூறியிருப்பதாவது:-

    * பா.ம.க. நிறுவனர் ராமதாஸை கொல்லுங்கள் என பதிவிட்டவரை கூப்பிட்டு அன்புமணி பாராட்டினார்.

    * ராமதாசுடன் இருப்பவர்களை துரோகி என அன்புமணி அவமானப்படுத்துகிறார்.

    * கட்சியில் இருந்த மூத்தவர்களை கடுமையாக அவமானப்படுத்தியவர் அன்புமணி.

    * அ.தி.மு.க. பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமியைக் கூட மிக கடுமையாக அன்புமணி விமர்சித்தார்.

    * வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை கெடுத்தது நான்தான் என்றும் அன்புமணி அவதூறாக பேசினார்.

    * ஆட்சி மாற்றம் காரணமாக 10.5 சதவீத இடஒதுக்கீடு கிடைக்காமல் போனதற்கு நான் எப்படி காரணமானேன்.

    * ராமதாசும், அன்புமணியும் ஒன்றாக இணைவார்கள் எனில் கட்சியை விட்டு வெளியேறத் தயார். நானும் எனது குடும்பத்தினரும் கட்சியை விட்டு வெளியேற தயார்.

    * ராமதாஸ், அன்புமணி இணைவதற்காக பா.ம.க.விலிருந்து விலகுவதுடன் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்யவும் தயார்.

    * துரோகிகள் என அன்புமணி கருதும் அனைவரும் கட்சியை விட்டு வெளியேறத் தயார் என்று கூறினார். 

    • அன்புமணிக்கு நான் ஒரு போதும் துரோகம் செய்யவில்லை.
    • அன்புமணிக்கு தேர்தலில் சீட் அளிக்க வேண்டும் என பேசியது நான் தான்.

    சென்னை:

    பா.ம.க.வில் ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் அன்புமணி மட்டுமே என செய்தியாளர்கள் சந்திப்பில் ஜி.கே. மணி குற்றம்சாட்டினார். மேலும் அவர், அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    ஜி.கே.மணி கூறியதாவது:-

    * அன்புமணியை இளம் வயதில் மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தவர் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்.

    * அன்புமணி மத்திய அமைச்சராக கூடாது என உறுதியாக இருந்தவர் ஜெ.குரு.

    * அன்புமணியின் செயல்பாடுகளால் கண்ணீர் வடித்தார் ராமதாஸ்.

    * ராமதாஸ் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அன்புமணி பேசியிருக்கிறார். அன்புமணி மனசாட்சியோடு பேச வேண்டும்.

    * அன்புமணியால் பா.ம.க.வுக்கு ஏற்பட்ட சோதனை, நெருக்கடி சொல்லி மாளாது.

    * என் அப்பாவுக்கு அடுத்ததாக உங்களை நினைக்கிறேன் என கூறியவர் அன்புமணி.

    * பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள பிளவிற்கு நான் காரணம் என பேசியிருக்கிறார் அன்புமணி.

    * பா.ம.க.வில் ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் அன்புமணி மட்டுமே.

    * மனதளவில் கூட துரோகம் நினைக்காத என்னை துரோகி என்று அன்புமணி பேசுகிறார். இது மிகவும் வருத்தமாக உள்ளது.

    * அன்புமணிக்கு நான் ஒரு போதும் துரோகம் செய்யவில்லை.

    * அன்புமணிக்கு தேர்தலில் சீட் அளிக்க வேண்டும் என பேசியது நான் தான்.

    * அன்புமணியை மத்திய அமைச்சராக வேண்டும் என ராமதாசிடம் பேசினேன்.

    * மாவட்டந்தோறும் அன்புமணியை அழைத்து சென்று அறிமுகப்படுத்தினேன்.

    * தந்தையையும், மகனையும் பிரித்து விட்டதாக மனசாட்சி இல்லாமல் அன்புமணி பேசுகிறார்.

    இவ்வாறு ஜி.கே.மணி பேசினார். 

    • ஏ.கே.மூர்த்தியின் இல்ல திருமண வரவேற்பு விழா இன்று நடைபெற்றது
    • தற்போது பாமக கட்சி ராமதாஸ் தரப்பு அன்புமணி தரப்பு என்று 2 கோஷ்டிகளாக உள்ளது.

    பாமகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தியின் இல்ல திருமண வரவேற்பு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

    பாமக தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி ஆகியோர் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    சென்னையில் ஏ.கே.மூர்த்தி இல்லத் திருமண விழாவில் நேருக்கு நேர் சந்தித்த அன்புமணி மற்றும் ஜி.கே.மணி ஆகியோர் வணக்கம் வைத்து கொண்டனர்.

    தற்போது பாமக கட்சி ராமதாஸ் தரப்பு அன்புமணி தரப்பு என்று 2 கோஷ்டிகளாக உள்ளது. என்னையும், ராமதாசையும் பிரித்தது ஜி.கே.மணிதான் தான் என்று அன்புமணி தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்பது தி.மு.க. அரசின் தேர்தல் கால வாக்குறுதி.
    • அதனை நிறைவேற்ற வேண்டும் என்பது ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நான்கரை ஆண்டு கால கோரிக்கை.

    பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும், இடையில் நிறுத்தப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை மீண்டும் வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 11 தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுநடவடிக்கை குழு (டிட்டோ-ஜாக்) கூட்டமைப்பு சார்பாக கடந்த 08.12.2025 முதல் சென்னை பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

    அதற்கான நடவடிக்கைகளில் சங்க நிர்வாகிகள் ஈடுபட்டிருந்த நிலையில் அதற்கு முதல் நாளான 07.12.2025 அன்று இரவிலிருந்தே போராட்டத்திற்கு புறப்படத் தயாரான நிர்வாகிகளை மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்த செயல் கண்டிக்கத்தக்கது.

    அதையும் மீறி பேருந்துகள், தொடர் வண்டிகள் மூலமாக சென்னை சென்ற ஆசிரியர்கள் நூற்றுக்கணக்கானோரை காவல்துறையினர் ஆங்காங்கே வழிமறித்து கைது செய்துள்ளனர். அத்தனை தடைகளையும் தாண்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் கூடிய ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் அங்கிருந்து நுங்கம்பாக்கத்திற்கு பேரணியாக புறப்பட்டபோது அங்கும் வந்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    அதன் பிறகு டிட்டோ-ஜாக் உயர்மட்டக் குழு நிர்வாகிகளுடன் பள்ளி கல்வித்துறை செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் தெரிவிப்பதாக கூறியுள்ளார். ஆனால் 3 நாட்களாக போராட்டக் குழுவிடம் அரசு சார்பில் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை, கோரிக்கைகள் குறித்து உத்திரவாதமும் அளிக்கப்படவில்லை. இதனால் நாளை (12.12.2025) அடையாள வேலை நிறுத்தமும், மாவட்டத் தலை நகரங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்த உள்ளனர். மேலும் ஜனவரி மாதம் 6-ம் தேதியிலிருந்து காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர்.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்பது தி.மு.க. அரசின் தேர்தல் கால வாக்குறுதி. அதனை நிறைவேற்ற வேண்டும் என்பது ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நான்கரை ஆண்டு கால கோரிக்கை. தற்போது ஆட்சி முடியும் தருவாயில் உள்ளதால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டங்களை கையில் எடுத்துள்ளனர்.

    அதுபோல் சம வேலைக்கு சம ஊதியம் என்கிற அடிப்படையில் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பதும், தகுதி உயர்த்துவதற்காக வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதியம் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டதை மீண்டும் வழங்க வேண்டும் என்பதும், வட்டார அளவிலான பதிவு மூப்பு பதவி உயர்வு என்று இருந்ததை மாநில அளவிலான பதவி உயர்வு பணி மாறுதல் என மாற்றியதால் அவர்களின் குடும்ப சூழல் பாதிக்கும் என்பதால் மீண்டும் வட்டார் அளவிலான பதவி உயர்வு பணி மாறுதல் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளாகும். மேலும் தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வியில் காலியாக உள்ள 30,000-த்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது அவர்களுக்கான கோரிக்கைகள் மட்டுமல்ல, நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலத்திற்குமானதாகும்.

    எனவே ஆசிரியர் பணியிடம் காலி ஆகாமல் இருக்க பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், தமிழக முதல்வரும் உடனடியாக தலையிட்டு ஆசிரியர்கள் சங்கங்களின் நிர்வாகிகளை அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

    • அருள், ஜி.கே.மணி போன்றோர் சொல்லும் பொய்களை பா.ம.க.வினர் நம்ப வேண்டாம்.
    • அய்யா ராமதாஸ் பெயரில் வரும் அறிக்கையில் என்ன இருக்கிறது என்று அவருக்கே தெரியாது.

    மாமல்லபுரம் பூஞ்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியதாவது:

    * என்னை தலைவராக்கிய அடுத்த நாளில் ஜி.கே.மணி சூழ்ச்சியை ஆரம்பித்து விட்டார்.

    * சூழ்ச்சி செய்து அப்பா-பிள்ளையை பிரித்தது ஜி.கே.மணிதான்.

    * ஜி.கே.மணி போன்றோர் மனிதர்களாக இருக்கவே தகுதி இல்லாத நபர்கள்.

    * டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவர்கள் தரப்பு தோற்றுவிட்டது, ஆனால் வெற்றி பெற்றதாக ராமதாசிடம் பொய் சொல்லி உள்ளனர்.

    * அருள், ஜி.கே.மணி போன்றோர் சொல்லும் பொய்களை பா.ம.க.வினர் நம்ப வேண்டாம்.

    * அய்யா ராமதாஸ் பெயரில் வரும் அறிக்கையில் என்ன இருக்கிறது என்று அவருக்கே தெரியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ம.க.வை களத்தில் நேரடியாக சந்திப்பதற்கான தைரியம் தி.மு.க.வுக்கு கிடையாது.
    • தைலாபுரம் தோட்டத்தை தி.மு.க. கட்டுப்பாட்டில் எடுத்து விட்டது.

    மாமல்லபுரம் பூஞ்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியதாவது:

    * விரைவில் நாம் மிகப்பெரிய மெகா கூட்டணியை அமைக்க இருக்கிறோம்.

    * மெகா கூட்டணி முன்பு தி.மு.க. படுதோல்வியை சந்திக்கப் போவது உறுதி.

    * பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கும் தி.மு.க. தான் காரணம்.

    * அய்யா ராமதாசை சுற்றி தீய சக்திகளும், தி.மு.க.வின் கைக்கூலிகளும் இருக்கிறார்கள்.

    * பா.ம.க.வை களத்தில் நேரடியாக சந்திப்பதற்கான தைரியம் தி.மு.க.வுக்கு கிடையாது.

    * பா.ம.க.வில் குழப்பத்தை ஏற்படுத்தி குளிர்காய நினைக்கிறது தி.மு.க.

    * தி.மு.க.வினர் சூழ்ச்சி செய்து வன்னியர்களையும் பட்டியலின மக்களையும் ஒன்றுசேர விடாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.

    * தைலாபுரம் தோட்டத்தை தி.மு.க. கட்டுப்பாட்டில் எடுத்து விட்டது.

    * எவ்வளவோ அசிங்கங்களையும் அவமானங்களையும் தாங்கிக் கொண்டிருக்கிறேன்.

    * துரோகிகளை ஒருபோதும் நான் மன்னிக்கப்போவது கிடையாது.

    * ராமதாஸ் குழந்தை மாதிரி, அவருக்கு தன்னைச் சுற்றி நடப்பது எதுவும் தெரியாது. அவருக்கு 87 வயதாகி விட்டது.

    * டெல்லியில் 30 பேர் போராட்டம் நடத்திவிட்டு 3,000 பேர் கலந்து கொண்டதாக ராமதாசிடம் பொய் சொல்லி இருக்கிறார்கள்.

    * நான் நடத்தும் கூட்டங்களில் கூட்டம் குறைவாக இருப்பதாக ராமதாசிடம் தவறான தகவல்களை சொல்லி வருகிறார்கள்.

    * இன்னும் 3 மாதத்தில் யார் யார் சிறைக்கு செல்ல போகிறார்கள் என பார்த்துக்கொண்டிருங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கட்சிக்காக நான் உழைத்ததை எத்தனை முறை சொல்லி காட்ட வேண்டியுள்ளது.
    • தேர்தல் ஆணையத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்து உள்ளோம்.

    திண்டிவனம்:

    பா.ம.க.வில் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் கருத்து மோதல் நீடித்து வருகிறது. கட்சிக்கு சொந்தம் கொண்டாடி இருவரும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர். ஆனால் தேர்தல் ஆணையம் 2026 ஆகஸ்டு மாதம் வரை அன்புமணி தான் பா.ம.க. தலைவர் என கூறியது. தேர்தல் ஆணையத்தை கண்டித்து ராமதாஸ் தரப்பிரனர் டெல்லி தேர்தல் ஆணையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மேலும் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த நிலையில் திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவன தலைவர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கட்சிக்காக நான் உழைத்ததை எத்தனை முறை சொல்லி காட்ட வேண்டியுள்ளது. தேர்தல் ஆணையத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்து உள்ளோம். இதில் சம்பந்தமே இல்லாமல் பொய்மூட்டைகளுடன் அன்புமணி தரப்பு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளது.

    கட்சி எங்களுக்கே என்று சொல்ல எனக்கு வெட்கமாக உள்ளது. கட்சி எங்களுக்கு இல்லை சொல்ல எனக்கு ஒரு பிள்ளை. தேவையென்றால் அன்புமணி தனிக்கட்சி தொடங்கி கொள்ளட்டும். இனி என் பெயரையோ, படத்தையோ அன்புமணி பயன்படுத்த கூடாது. அதற்கு அவருக்கு உரிமை இல்லை. என் வீட்டில் ஒட்டு கேட்பு கருவி வைத்தது தொடர்பாக புகார் அளித்து எந்த வித நடவடிக்கையும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தல் ஆணையம் அறிவித்தது செல்லாது என்பது உறுதியாகிவிட்டது.
    • வரும் தேர்தலில் கட்சியின் அங்கீகாரத்தை மீட்டெடுத்து மக்களுக்கு உரிமைகளை பெற்று தருவதே என்னுடைய பணியாக ஏற்று மக்கள் பணி ஆற்றுவேன்.

    பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நான் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் 04.12.2025 அன்று நடந்த விசாரணையில் நேற்று 06.12.2025 தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் நான் தொடர்ந்த வழக்கில் எனக்கு வெற்றி கிடைத்துள்ளது. மருத்துவர் அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது செல்லாது. அதன்படி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி என்று சொல்லுவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு சட்ட அதிகாரம் இல்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே அன்புமணி கட்சியின் தலைவர் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

    பாட்டாளி மக்கள் கட்சிக்கு அங்கீகாரம் இல்லாததால், தேவை ஏற்படின் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 28.05.2022 முதல் 28.05.2025 வரை மூன்றாண்டு காலம் தலைவர் பதவி என்பதற்கு மாறாக, ஒரு போலி ஆவணத்தை (கடிதம்) தயாரித்து 2023 முதல் 2026 வரை என்று தேர்தல் ஆணையத்திற்கு அன்புமணி கொடுத்த போலி கடிதத்தை ஏற்று தேர்தல் ஆணையம் அன்புமணி தலைவர் என்று அறிவித்தது. தேர்தல் ஆணையம் அறிவித்தது செல்லாது என்பது உறுதியாகிவிட்டது.

    எனவே நான் 46 ஆண்டு காலம் உழைத்து 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று இயக்கத்தை வளர்த்து மருத்துவர் அன்புமணியை மத்திய அமைச்சராக மேலும் பலரை மத்திய அமைச்சர்களாக, பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக, உள்ளாட்சி பிரதிநிதிகளாக வெற்றி பெற செய்த என்னிடமிருந்து கட்சியை பறிப்பதற்கு செய்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் என்னிடமிருந்து கட்சியையும், கட்சி தொண்டர்களையும், நாட்டு மக்களையும் பிரிக்க முடியாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் தேர்தலில் கட்சியின் அங்கீகாரத்தை மீட்டெடுத்து மக்களுக்கு உரிமைகளை பெற்று தருவதே என்னுடைய பணியாக ஏற்று மக்கள் பணி ஆற்றுவேன்.

    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மீண்டும் வெல்லும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. நீதி வென்றுள்ளது. 

    • பாமகவை அன்புமணி அபகரித்ததாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு
    • பாமக தலைவர் யார் என்பதில் பிரச்சனை இருக்கிறது என்றால் உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம்.

    வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்டு 1ம் தேதி வரை அன்புமணி தான் பாமகவின் தலைவர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    அன்புமணி தான் பாமகவின் தலைவர் என தேர்தல் ஆணையம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்புக்கு கடிதம் எழுதியுள்ளது.

    இதுதொடர்பாக கூறியுள்ள தேர்தல் ஆணையம்," பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் அன்புமணியை தான் தலைவராக தேர்வு செய்துள்ளனர். தரவுகள் உள்ளது" என குறிப்பிட்டுள்ளது.

    மேலும், கட்சித் தலைவர் பதவி குறித்த தனது முரண்பாடுகளை தீர்க்க நீதிமன்றத்தை அணுக ராமதாசுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.

    இந்நிலையில், பாமகவை அன்புமணி அபகரித்ததாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.

    அப்போது, "தற்போதைய ஆவணங்களின் அடிப்படையில்தான் அன்புமணியை பாமக தலைவராக ஏற்கிறோம். பாமக தலைவர் யார் என்பதில் பிரச்சனை இருக்கிறது என்றால் உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம். இரு தரப்பும் பிரச்சனைக்குரியதாக இருந்தால் தேர்தல் ஆணையம் படிவம் A மற்றும் படிவம் B-யில் இரு தரப்பு கையெழுத்து போடுவதை ஏற்காமல், சின்னமும் முடக்கி வைக்கப்படும்" என்று தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டது.

    இதனையடுத்து ராமதாஸ் தரப்பு இது தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறி இந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது. 

    ×