என் மலர்
நீங்கள் தேடியது "Donald Trump"
- 2012 முதல் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
- நாம் அவர்களுக்குப் பணம் கொடுக்க தேவையில்லை.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். சட்டவிரோத குடியேற்றம், வரி விதிப்பு உள்ளிட்டவற்றில் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இதற்கிடையே இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க 2012 முதல் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படும் 21 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.182 கோடி) நிதியை நிறுத்துவதாக டிரம்ப் நிர்வாகத்தில் எலான் மஸ்க் தலைமையிலான அரசாங்க திறன் துறை DODGE அறிவித்தது.
இந்தியாவிடம் நிறைய பணம் இருப்பதாகவும், தங்களின் வரிப்பணத்தை வீணடிக்க வேண்டியதில்லை என்றும் டிரம்ப் கூறியிருந்தார். இந்நிலையில் இந்தியாவுக்கு வழங்கி வந்த இந்த நிதி குறித்து முந்தைய ஜோ பைடன் அரசை டிரம்ப் சாடியுள்ளார்.
மியாமி நகரில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய டிரம்ப், " இந்திய தேர்தல்களுக்காகவும், வங்கதேசத்தில் அரசியல் சூழலை சீரமைப்பதற்காகவும் அமெரிக்க மக்களின் வரிப்பணம் நிதியாக வழங்கப்பட்டுள்ளது.
ஆசியா ஏற்கனவே நன்றாகச் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. நாம் அவர்களுக்குப் பணம் கொடுக்க தேவையில்லை.
இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க அரசு ஏன் ரூ.182 கோடி வழங்க வேண்டும். அங்கு வேறு யாரையோ வெற்றி பெற வைக்க பைடன் அரசு முயற்சி செய்துள்ளது. இது குறித்து இந்திய அரசாங்கத்திடம் பேச வேண்டும்" என்று சந்தேகம் கிளப்பியுள்ளார்.
- இந்தியாவில் 13 வகையான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை டெஸ்லா நிறுவனம் வெளியிட்டது.
- இதன்மூலம் இந்தியாவில் டெஸ்டா நிறுவனம் கால் பதிப்பது உறுதியாகிவிட்டது.
இந்தியாவில் நுழைய மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா சமீப காலமாக ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் வரி விகிதம் காரணமாக டெஸ்லா பின்வாங்கியது. சமீபத்தில் கார்கள் மீதான சுங்கவரியை 110 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது. மேலும் குறைந்த பட்சம் 500 மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் இந்தியாவில் முதலீடு மற்றும் தொழிற்சாலை அமைக்கும் மின்சார வாகன நிறுவனங்களுக்கு இறக்குமதி வரியை 15 சதவீதம் வரை குறைக்கப்படும் என இந்திய அரசு தெரிவித்திருந்தது.
இதற்கிடையில் 2 நாள் பயணமாக அதிபர் டிரம்பின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது பிரதமர் மோடி எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க்கை சந்தித்து பேசினார்.
இந்நிலையில் இந்தியாவில் 13 வகையான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை டெஸ்லா நிறுவனம் 'லிங்க்ட் இன்' தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் ஐந்து வகையான பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் டெல்லி மற்றும் மும்பையிலும், எஞ்சிய பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் மும்பையில் பணியாற்ற வேண்டும் என அந்த விளம்பரத்தில் கூறப்பட்டு உள்ளது.
இதன்மூலம் டெஸ்லா நிறுவனம் விரைவில் இந்தியாவில் வர்த்தகத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் டெஸ்லா அமெரிக்காவின் வரி விதிப்பை தவிர்க்க இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் திட்டம் இருந்தால் அது மிகவும் நியாயமற்றது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டொனால்டு டிரம்ப் கூறுகையில் "மின்சார வாகனம் தயாரிக்கும் டெஸ்லா, அமெரிக்காவின் வரி விதிப்பை தவிர்ப்பதற்காக இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறு திட்டம் இருந்தால் அது மிகவும் நியாயமற்றது" எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின்போது, கார்கள் மீதான இந்தியாவின் அதிக வரி தொடர்பாக வலியுறுத்தியதை நினைவு கூர்ந்த டொனால்டு டிரம்ப், விரைவில் முன்னதாக உள்ள வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கிச் செயல்படவும், வரிகள் தொடர்பான மோதலைத் தீர்க்கவும் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
- உக்ரைனில் கடந்த 2019-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் வென்று ஜெலன்ஸ்கி அதிபரானார்.
- உக்ரைன் சட்டங்களின்படி நாட்டில் போர் நடக்கும் நேரத்தில் தேர்தல் நடத்தத் தேவையில்லை.
வாஷிங்டன்:
ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றுள்ள நிலையில், ரஷியா உடனான உறவை புதுப்பிக்க அவர் ஆர்வம் காட்டி வருகிறார்.
உக்ரைன் நாட்டில் கடந்த 2019-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் வென்று ஜெலன்ஸ்கி அதிபரானார். கடந்த ஆண்டுடன் அவரது பதவிக் காலம் முடிவடைந்தது. உக்ரைன் சட்டங்களின்படி நாட்டில் போர் நடக்கும் நேரத்தில் தேர்தல் நடத்தத் தேவையில்லை.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள செய்தி:
ஜெலன்ஸ்கி தேர்தலை நடத்தாமல் சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார். தேர்தலை நடத்துவதற்கு அவர் மறுத்து வருகிறார். இதனாலேயே, அமெரிக்க அதிபராக இருந்த ஜோ பைடனுடன் சேர்ந்து போர் நீடித்திருக்க அவர் நாடகமாடி வந்துள்ளார்.
அங்கு தேர்தல் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஜெலன்ஸ்கிக்கு ஏற்படும்.
விரைவில் ரஷிய அதிபர் புதினை சந்திக்க உள்ளேன். ரஷியா-உக்ரைன் இடையிலான போரை நிறுத்துவதற்கான முழு முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். அதில் வெற்றியும் பெறுவோம் என தெரிவித்துள்ளார்.
- இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் அமெரிக்க ராணுவ விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
- தங்கள் நாட்டவரை அவமதித்தாக பிரேசில் அமேரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்தது.
டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, அந்நாட்டில் ஆவணமின்றி சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை நாடு கடத்தி வருகிறது. கொலம்பியா, பிரேசில், மெக்சிகோ ஆகிய லத்தீன் அமெரிக்க மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்து நாடுகடத்தப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் 3 கட்டங்களாக ராணுவ விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களின் கைகளை விலங்கிட்டு, கால்களை சங்கிலியால் பிணைத்து அத்தியாவசிய தேவைகளுக்கு சிரமப்படும்படி அமெரிக்கா கீழ்த்தரமாக நடத்தி நாடுகடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தங்கள் நாட்டவரை அவமதித்தாக பிரேசில் அமேரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்தது. ஆனால் இந்தியா கண்டனம் தெரிவிக்காமல் மாறாக அமெரிக்காவோடு மேலும் நட்பு பாராட்டுவதைக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், இன்று குஜராத் சட்டப்பேரவைக்கு முன்பாக ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கைகளில் விலங்கிட்டுக்கொண்டு போராட்டம் நடத்தினர்.
அமெரிக்காவிலிருந்து விலங்கிடப்பட்டு நாடு கடத்தப்பட்டவர்கள் குறித்து மோடி அரசு மவுனம் காப்பதாக போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் குற்றம் சாட்டினர்.
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப், அரியானா, குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | Gujarat Congress MLAs chain themselves up and demonstrate outside the State Assembly in Gandhinagar, as a mark of protest against the deportation of illegal Indian immigrants from the US while being handcuffed and shackled. pic.twitter.com/zumqGnicOL
— ANI (@ANI) February 19, 2025
- "ASMR: சட்டவிரோத ஏலியன்கள் நாடுகடத்தல் விமானம்" என்ற தலைப்பில் வெள்ளை மாளிகை வீடியோ வெளியிட்டுள்ளது.
- எலான் மஸ்க் இந்த வீடியோவை பகிர்ந்து "ஹாஹா வாவ்" என்று பதிவிட்டுள்ளார்.
டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, அந்நாட்டில் ஆவணமின்றி சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டவரை நாடு கடத்தி வருகிறது. கொலம்பியா, பிரேசில், மெக்சிகோ ஆகிய லத்தீன் அமெரிக்க மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்து நாடுகடத்தப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கணக்கானோரும் மூன்று கட்டங்களாக ராணுவ விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களின் கைகளை விலங்கிட்டு, கால்களை சங்கிலியால் பிணைத்து அத்தியாவசிய தேவைகளுக்கு சிரமமப்படும்படி அமெரிக்கா கீழ்த்தரமாக நடத்தி நாடுகடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தங்கள் நாட்டவரை அவமதித்தாக பிரேசில் அமேரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்தது. ஆனால் இந்தியா கண்டனம் தெரிவிக்காமல் மாறாக அமெரிக்காவோடு மேலும் நட்பு பாராட்டுவதைக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில் அண்மையில் நாடு கடத்தப்பட்டவர்கள் எவ்வாறு சங்கிலி மற்றும் விலங்குகளால் பிணைக்கப்பட்டு விமானத்தில் ஏற்றப்படுகின்றனர் என்பதை விளக்கும் விதமாக அமெரிக்க வெள்ளை மாளிகை ASMR வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது.
"ASMR: சட்டவிரோத ஏலியன்கள் நாடுகடத்தல் விமானம்" என்ற தலைப்பில் 40 வினாடி வீடியோவை வெள்ளை மாளிகை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அறிக்கைப்படி சியாட்டில் நகரில் இருந்து புறப்படும் அந்த விமானத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
வீடியோவில், அதிகாரிகள், நாடுகடத்தப்படுபவர்களை சங்கிலியால் பிணைப்பது, அவர்கள் (கைதிகள்) காலில் பிணைந்த சங்கிலிகளுடன் விமானத்தில் ஏறுவது உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ASMR: Illegal Alien Deportation Flight ? pic.twitter.com/O6L1iYt9b4
— The White House (@WhiteHouse) February 18, 2025
அமெரிக்கா பிறநாட்டவரை கீழ்தரமாக நடத்தும் இந்த வீடியோ சர்வதேச அளவில் கண்டனங்களை குவித்து வருகிறது. இதற்கிடையே உலக பணக்காரரும், அதிபர் டிரம்பின் நெருங்கிய கூட்டாளியுமான எலான் மஸ்க், தனக்கு சொந்தமான எக்ஸ் தளத்தில், தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து "ஹாஹா வாவ்" என்று பதிவிட்டுள்ளார்.
- உலகில் அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
- இந்தியாவுக்கு நாம் ஏன் 21 மில்லியன் டாலர் கொடுக்க வேண்டும்?
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். சட்டவிரோத குடியேற்றம், வரி விதிப்பு உள்ளிட்டவற்றில் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இதற்கிடையே இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா வழங்கி வந்த 21 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.182 கோடி) நிதியை நிறுத்துவதாக டிரம்ப் நிர்வாகத்தில் எலான் மஸ்க் தலைமையிலான அரசாங்க திறன் துறை அறிவித்தது. இந்த நிலையில் இந்தியாவுக்கு நிதி உதவியை நிறுத்தியது குறித்து டிரம்ப் கூறியதாவது:-
இந்தியாவுக்கு நாம் ஏன் 21 மில்லியன் டாலர் கொடுக்க வேண்டும்? அவர்களிடம் நிறைய பணம் இருக்கிறது. வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் அதிக வரி விகிதங்களைக் கொண்ட இந்தியாவிற்கு அத்தகைய நிதி உதவி தேவையில்லை.
எங்களைப் பொறுத்த வரை உலகில் அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். அவர்களின் கட்டணங்கள் மிக அதிகமாக இருப்பதால் நாங்கள் அங்கு தொழில் செய்ய முடியாது. இந்தியா மற்றும் பிரதமர் மோடி மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.
இந்தியர்கள் மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால் அவர்களுக்கு ஏன் நாம் பணம் கொடுக்க வேண்டும்? அங்கு வாக்குப்பதிவுக்கு 21 மில்லியன் டாலர்கள் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? இதற்கு அமெரிக்கர்களின் வரி பணத்தை செலவழிப்பதை விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்தில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ஆட்டோ மொபைல், செமிகண்டக்டர், மருந்து இறக்குமதிகளுக்கு சுமார் 25 சதவீத வரி விதிக்க வாய்ப்புள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
- எல் சால்வடோர், பனாமா, குவாத்தமாலா, ஆகிய மத்திய அமெரிக்க நாடுகள் அறிவித்துள்ளன.
- அமெரிக்க அரசாங்கம் முழுமையாக ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஆவணமில்லாமல் தங்கியிருக்கும் பிற நாட்டவர்களை வெளியேற்றும் பணியில் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். நாடு கடத்தல் உத்தரவை ஏற்க அடிபணியாத நாடுகள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதற்கிடையில் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படுபவர்கள் எந்த நாட்டவராக இருந்தாலும் தாங்கள் ஏற்றுக்கொள்வதாக லத்தீன் அமெரிக்க நாடான எல் சால்வடோர், பனாமா, குவாத்தமாலா, ஆகிய மத்திய அமெரிக்க நாடுகள் அறிவித்துள்ளன.
இதனைத் தொடர்ந்து மற்றொரு மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிகா, நாடு கடத்தப்படும் எந்த நாட்டை சேர்ந்தவர்களையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டு அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டவிரோதமாக குடியேறியவைகளை நாடு கடத்துவதில் அமெரிக்காவுடன் ஒத்துழைக்க கோஸ்டாரிகா அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
இவர்கள் மத்திய ஆசியா மற்றும் இந்தியாவிலிருந்து வருபவர்கள் நாடுகடத்தப்பட்டவர்களின் முதல் குழு புதன்கிழமை கோஸ்டாரிகாவில் ஒரு வணிக விமானத்தில் வந்து சேரும். அங்கு அவர்கள் பனாமா எல்லைக்கு அருகிலுள்ள ஒரு தற்காலிக புலம்பெயர்ந்தோர் பராமரிப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
பின்னர் புலம்பெயர்ந்தோர் தங்கள் சொந்த நாடுகளுக்கு நாங்கள் அனுப்பி வைப்போம். இந்த செயல்முறைக்கான செலவுகளை சர்வதேச புலம்பெயர்வு அமைப்பின் (IOM) மேற்பார்வையின் கீழ் அமெரிக்க அரசாங்கம் முழுமையாக ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உக்ரைன் தனது பங்கேற்பு இல்லாமல் செய்யப்படும் எந்த அமைதி ஒப்பந்தங்களையும் அங்கீகரிக்காது
- ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணைவது தொடர்பாக ரஷியாவிற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
உக்ரைன்-ரஷியா இடையே போர் தொடங்கி 3 ஆண்டுகளை தாண்டி விட்டது. ஆனாலும் இன்னும் இந்த சண்டை முடிவுக்கு வராமல் நீடித்து வருகிறது. போர் நிறுத்தத்தை ஏற்படுத்த டிரம்ப் தலைமையான அமெரிக்க அரசு முயற்சித்து வருகிறது.
அதன்படி ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் வெளியுறவு ஆலோசகர் யூரி உஷாகோவ் ஆகியோரும், டொனால்டு டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் ஆகியோரும் இன்று சவுதியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் இதில் உக்ரைன் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவில்லை. எனவே உக்ரைன் தனது பங்கேற்பு இல்லாமல் செய்யப்படும் எந்த அமைதி ஒப்பந்தங்களையும் அங்கீகரிக்காது என்று ஜெலென்ஸ்கி கூறியிருந்தார்.
இந்நிலையில் தேவைப்பட்டால் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் விளாடிமிர் புடின் தயாராக இருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது.
ரஷிய அதிபர் மாளிகையான கிரம்லின் செய்தித்தொடர்பாளர் இன்று டிமிட்ரி பெஸ்கோவ் ஊடகங்களுக்கு இன்று பேட்டியளித்தார். அவர் கூறியதாவது, தேவைப்பட்டால் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக புதினே கூறினார். இருப்பினும் ஜெலன்ஸ்கி வகிக்கும் அதிபர் பதவியின் சட்டப்பூர்வமான தன்மை கேள்விக்குறிதான்.

ஜெலன்ஸ்கியின் ஐந்தாண்டு ஜனாதிபதி பதவிக்காலம் கடந்த ஆண்டு முடிவடைந்தது. இருப்பினும், உக்ரைன் சட்டத்தின்படி, ராணுவச் சட்டம் அமலில் இருக்கும்போது ஜனாதிபதித் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய அவசியமில்லை. ரஷ்யா பல சந்தர்ப்பங்களில் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் ரஷியா அவரை ஒரு சட்டப்பூர்வமான ஜனாதிபதியாகக் கருதவில்லை.
உக்ரைன் நேட்டோவின் அங்கமாக மாறுவதைத் தொடர்ந்து எதிர்ப்போம். ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணைவது தொடர்பாக ரஷியாவிற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இது அந்த நாட்டின் இறையாண்மை உரிமை. யாரும் மற்றொரு நாட்டிற்கு ஆணையிட முடியாது. நாங்கள் அவ்வாறு செய்யத் திட்டமிடவில்லை. ஆனால் பாதுகாப்பு பிரச்சனைகள் மற்றும் ராணுவ கூட்டணி என்று வரும்போது நிலைமை மாறலாம் என்று தெரிவித்தார்.
- ‘அதிபர் நாளில் அரசர் வேண்டாம்’ என்ற பதாகைகளுடன் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.
- கோழைகளைப் போல டிரம்பிற்கு தலைவணங்க மாட்டோம்
அமெரிக்காவின் அதிபாராக 2 ஆவது முறையாக கடந்த ஜனவரி 20 ஆம் தேதி டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். தேர்தலில் அவருக்காக அதிக செலவுகளை செய்து ஆதரவு அளித்த உலக பணக்காரார் எலான் மஸ்க், அரசின் செயல்திறன் மேம்பாடு DODGE என்ற புதிய துறைக்கு தலைவரானார்.
இந்த துறைக்கு அமெரிக்க மக்களின் பாதுகாக்கப்பட்ட தகவல்களை அணுகுதல் உள்ளிட்ட ஏகபோக உரிமைகள் வழங்கப்பட்டன.
அரசின் வீண் செலவை குறைக்க ஆயிரக்கணக்காக அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்தல், மக்களுக்கான நிதியுதவிகளை நிறுத்துதல் என தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை எலான் மஸ்க் ஆலோசனையில் பேரில் டொனால்டு டிரம்ப் அதிரடி நடவைடிகைகளை மேற்கொண்டு வருகிறதார்.
மேலும் பிறப்பால் குடியுரிமை பெறுவதை ரத்து செய்தது, திருநங்கைகளுக்கான அங்கீகாரத்தை மறுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க்குக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் வெடித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மூன்றாம் திங்கள் அமெரிக்காவில் பிரசிடெண்ட்ஸ் டே கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தில் நாடு முழுவதும் விடுமுறை உண்டு. அமெரிக்க அதிபராக இருந்தவர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு மக்கள் நன்றி செலுத்துவர். ஆனால் இந்த வருட பிரசிடெண்ட்ஸ் டேவில் டிரம்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர்.
‼️‼️ Thousands of Americans are rallying outside the Capitol to protest Elon Musk and Donald Trump's destruction of the US government.We need more of this.(video per @PenguinSix) pic.twitter.com/zHcvkcGbzY
— Morgan J. Freeman (@mjfree) February 17, 2025
50501 என்ற இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், 'அதிபர் நாளில் அரசர் வேண்டாம்' என்ற பதாகைகளுடன் நாடு முழுவதும் நேற்று போராட்டம் நடத்தினர். இந்த இயக்கத்துக்கு 50 ஆர்ப்பாட்டங்கள், 50 மாநிலங்கள், 1 இயக்கம் என்று பொருள்.

கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் டிரம்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். ஃப்ளோரிடா மற்றும் கலிஃபோர்னியா மாகாணங்களிலும் பெரிய அளவிலான போராட்டம் நடைபெற்றது.
டிரம்ப் மற்றும் அவரது கூட்டாளி எலான் மஸ்க் ஆகியோர் அதிகாரத்தைக் கைப்பற்றி, நாட்டில் கூட்டாட்சி அமைப்பையும் அரசாங்கத்தையும் அழிக்க முயற்சிப்பதாக போராட்டக்காரர்கள் கூறினர்.

டிரம்பை அகற்று, மஸ்க்கை அகற்று போன்ற கோஷங்களை போராட்டக்காரர்கள் எழுப்பினர். டிரம்பை ஒரு சர்வாதிகாரி என்றும் கோழைகளைப் போல டிரம்பிற்கு தலைவணங்க மாட்டோம் என்றும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
- அமெரிக்காவும், ரஷியாவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது.
- நேரம் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.
வாஷிங்டன்:
உக்ரைன்-ரஷியா இடையே போர் தொடங்கி 3 ஆண்டுகளை தாண்டி விட்டது. ஆனாலும் இன்னும் இந்த சண்டை முடிவுக்கு வராமல் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பிறகு உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு டிரம்ப் தொலைபேசியில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதனுடன் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பேசினார். அப்போது அவர்கள் உக்ரைன் போரில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிர் இழந்து வருவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதன் தொடர்ச்சியாக ரஷிய அதிபர் புதினை விரைவில் சந்தித்து பேச இருப்பதாக டிரம்ப் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
உக்ரைனில் சண்டையை நிறுத்த உண்மையிலேயே புதின் விரும்புகிறார் என நான் நம்புகிறேன். இதை விரைவாக முடிக்க விரும்புகிறார்கள். புதினை விரைவில் சந்திக்க இருக்கிறேன். இதற்கான நேரம் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. அது விரைவில் நடக்கலாம்.
இது தொடர்பாக ரஷிய அதிகாரிகளுடன் அமெரிக்க குழுவினர் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியும் போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறார். இந்த சந்திப்பில் அவரும் கலந்து கொள்வார் என நம்புகிறேன்.
இவ்வாறு டிரம்ப் கூறினார்.
இந்த சூழ்நிலையில் ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சவூதி அரேபியாவில் அமெரிக்காவும், ரஷியாவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது. இதனால் போர் விரைவில் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தேவையற்ற செலவை குறைக்க எலான் மஸ்க் தலைமையில் அவர் உருவாக்கிய DODGE ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
- வங்கதேசத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட வழங்கி வந்த 21 மில்லியன் டாலர் நிறுத்தப்பட்டது.
இந்தியாவில் தேர்தல் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக வழங்கி வந்த நிதியை எலான் மஸ்க் தலைமையிலான அமெரிக்க செயல்திறன் துறை DODGE நிறுத்தியுள்ளது.
கடந்த மாதம் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறதார். அரசின் தேவையற்ற செலவை குறைக்க எலான் மஸ்க் தலைமையில் அவர் உருவாக்கிய DODGE ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
பின்தங்கிய நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் USAID அமைப்புக்கான நிதி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து தற்போது இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்பட்டுவந்த நிதியை நிறுத்துவதாக DODGE அறிவித்துள்ளது.
அதன்படி, இந்தியாவில் தேர்தல் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக வழங்கப்பட்டு வந்த 21 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 182 கோடி ரூபாய்) நிதியை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் வங்கதேசத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட வழங்கி வந்த 21 மில்லியன் டாலர், நேபாளத்திற்கு நிதி கூட்டாட்சிக்கு வழங்கப்பட்டு வந்த 20 மில்லியன் டாலர், பல்லுயிர் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டு வந்த 19 மில்லியன் டாலர் நிறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர்த்து கம்போடியாவில், பராகுவே, செர்பியா,தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த பல்வேறு வகையான நிதியுதவிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
US taxpayer dollars were going to be spent on the following items, all which have been cancelled: - $10M for "Mozambique voluntary medical male circumcision"- $9.7M for UC Berkeley to develop "a cohort of Cambodian youth with enterprise driven skills"- $2.3M for "strengthening…
— Department of Government Efficiency (@DOGE) February 15, 2025
- கைது செய்யப்பட்ட இருவரும் உறவினர்கள் என்றும், சந்தீப் மற்றும் பிரதீப் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
- இன்று மற்றொரு விமானம் மூலம் மேலும் 157 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு அழைத்து வரப்படுகின்றனர்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆவணங்களின்றி தங்கி இருந்தவர்களை அதிகாரிகள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் 104 இந்தியர்களை பிப்ரவரி முதல் வாரத்தில் அமெரிக்கா, அதனுடைய ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தியது. அவர்கள் பிப்ரவரி 5-ம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.
அவர்களை கைவிலங்கிட்டு அழைத்து வந்ததை இந்திய எதிர்க்கட்சிகள் கண்டித்தன. கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் டிரம்பை சந்தித்த பிரதமர் மோடி இந்திய சட்டவிரோத குடியேறிகளை திரும்ப பெற முழு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துவிட்டு வந்தார்.
இந்நிலையில், இரண்டாவது கட்டமாக மேலும் 116 இந்தியர்களை நாடு கடத்தியுள்ளது. இவர்கள் நேற்று நள்ளிரவு அமிர்தசரஸ் வந்தடைந்தனர். இவர்களும் கால்களில் சங்கிலி இடப்பட்டு, கைவிலங்கு பூட்டி அழைத்து வரப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் உள்ள குராலா கலான் கிராமத்தைச் தல்ஜித் சிங் என்பவர் நாடுகடத்தப்பட்ட 116 பேரில் ஒருவர். தங்களை சங்கிலியிட்டு அழைத்துவந்ததை இவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் அமெரிக்காவுக்கு நேரடி விமானம் மூலம் அனுப்பி வைப்பதாக கூறி தன்னை, சட்டவிரோதமாக டாங்கி ரூட் வழியாக ஒரு முகவர் ஏமாற்றி அழைத்துச் சென்றதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதற்கிடையே, நாடுகடத்தப்பட்ட 116 பேரில், பாட்டியாலா மாவட்டத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இரண்டு பேரும் அடங்குவர். அவர்கள் வருவதை அறிந்து பாட்டியாலா போலீஸ் விமான நிலையத்தில் காத்திருந்தது. ஸ்ரீ குரு ராம்தாஸ் விமான நிலையத்தில் வந்திறங்கியதும் அங்கு வைத்தே அவர்களை போலீஸ் கைது செய்தது.

கைது செய்யப்பட்ட இருவரும் உறவினர்கள் என்றும், சந்தீப் மற்றும் பிரதீப் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டு பாட்டியாலாவில் நடந்த ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தேடப்பட்டு வந்த இவர்கள், சட்டவிரோதமாக எல்லை கடந்து தப்பித்தனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே இன்று மற்றொரு விமானம் மூலம் மேலும் 157 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு அழைத்து வரப்படுகின்றனர்.