என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Donald Trump"

    • தென்கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா, தாய்லாந்து இடையே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது
    • இதில் இரு தரப்பிலும் சேர்ந்து 48 பேர் உயிரிழந்தனர்.

    தென்கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா, தாய்லாந்து இடையே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் இரு நாட்டு ராணுவங்கள் இடையே மோதல் ஏற்பட்டு போர் வெடித்தது. இதில் இரு தரப்பிலும் சேர்ந்து 48 பேர் உயிரிழந்தனர். அதன்பின் அமெரிக்க அதிபர் டிரம்பின் மத்தியஸ்த்தால் இரு நாடுகள் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதற்கிடையே கடந்த 8-தேதி தாய்லாந்து-கம்போடியா இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இருதரப்பும் எல்லையில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

    இந்த நிலையில் தாய்லாந்து-கம்போடியா இடையே மீண்டும் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக டிரம்ப் கூறியதாவது:-

    தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்-கம்போடியா பிரதமர் ஹன் மானெட் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். மோதல் தொடர்பாக மலேசியாவின் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் உதவியுடன் ஆலோசனை நடத்தினேன்.

    இதன் பயனாக தாய்லாந்து-கம்போடியா நாடுகள் மீண்டும் போர் நிறுத்தம் செய்ய சம்மதித்துள்ளன. இரு நாடுகளும் அமைதிக்குத் தயாராக உள்ளன. 2 நாடுகளுக்கு இடையே ஒரு பெரிய போராக உருவாகி இருக்கக்கூடியதைத் தீர்ப்பதில் பணியாற்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்த மரியாதை ஆகும் என்றார்.

    • 28 அம்ச சமாதான திட்ட முன்மொழிவு ஒன்றை டிரம்ப் வெளியிட்டார்.
    • போர் நிறுத்தம் தொடர்பாக இந்த வார இறுதியில் ஐரோப்பாவில் கூட்டம்.

    ரஷியா-உக்ரைன் இடையேயான 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.

    இதற்காக ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் 28 அம்ச சமாதான திட்ட முன்மொழிவு ஒன்றை டிரம்ப் வெளியிட்டார்.

    இந்த அமைதி ஒப்பந்தம் தொடர்பாக ரஷியா, உக்ரைனுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் இதுவரை எந்த உடன்பாடு ஏற்படவில்லை. சமீபத்தில் அமெரிக்க குழுவினர் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசினர்.

    அதேபோல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனும் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இரு தரப்பினரும் முரண்டு பிடிப்பதால் அமைதி ஒப்பந்தத்தில் இழுபறி நீடித்து வருகிறது.

    இதனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் விரக்தி அடைந்துள்ளனர். இதில் அவர் ரஷியா, உக்ரைன், ஐரோப்பிய நாடுகள் மீது அதிருப்தி அடைந்துள்ளார்.

    போர் நிறுத்தம் தொடர்பாக இந்த வார இறுதியில் ஐரோப்பாவில் நடக்கும் ஒரு கூட்டத்தில் நாங்கள் பங்கேற்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

    கூட்டத்தில் அவர்கள் என்ன ஆலோசிக்க போகிறார்கள் என்பதைப் பொறுத்து நாங்கள் ஒரு முடிவை எடுப்போம். நாங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றார்.

    இதற்கிடையே வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் முதன்மை மத்தியஸ்தராக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. ஆனால் எந்தவித முன்னேற்றமும் இல்லாத மற்றும் விரும்பிய முடிவுகள் கிடைக்காமல் வெறும் கூட்டங்கள் மட்டும் நடந்துள்ளதில் டிரம்ப் சோர்வடைந்து விட்டார்.

    இரு தரப்பிலும் நடந்து வரும் இந்த போரால் டிரம்ப் பெரிய அளவில் மனமுடைந்து போய் உள்ளார். ரஷியா மற்றும் உக்ரைன் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதில் காணப்படும் காலதாமதம் டிரம்ப்பை விரக்தியடைய செய்துவிட்டது.

    அவர் இனியும் இதுதொடர்பாக எதுவும் பேச விரும்பவில்லை. நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என விரும்புகிறார். இந்த போர் முடிவுக்கு வர வேண்டும் என அவர் விரும்புகிறார் என்றார். 

    • வெனிசுலாவை சுற்றி கடலில் அமெரிக்கா தனது படைகளை குவித்து உள்ளது.
    • ஹெலிகாப்டர் மூலம் கடலோர காவல்படையினர் எண்ணெய் கப்பலுக்குள் சென்றனர்.

    அமெரிக்கா-வெனிசுலா இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையே வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருட்கள் கடத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.

    இதையடுத்து போதை பொருள் கடத்துவதாக கரீபியன் கடல் மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் வெனிசுலா படகுகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும் வெனிசுலாவை சுற்றி கடலில் அமெரிக்கா தனது படைகளை குவித்து உள்ளது.

    இந்த நிலையில் வெனிசுலா கடற்கரையில் ஒரு எண்ணை கப்பலை அமெரிக்க ராணுவம் கைப்பற்றி உள்ளது. அமெரிக்காவின் யு.எஸ்.எஸ் ஜெரால்ட் ஆர் போர்ட் என்ற விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கடலோர காவல்படையினர் எண்ணெய் கப்பலுக்குள் சென்றனர்.

    பின்னர் அந்த கப்பலை கைப்பற்றி தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த எண்ணை கப்பல், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளை ஆதரிக்கும் வகையில் சட்டவிரோத செயல்பட்டதால் தடை செய்யப்பட் டுள்ளது என்று அமெரிக்கா தெரிவித்தது.

    இதுதொடர்பாக அதிபர் டிரம்ப் கூறும்போது, வெனிசுலா கடற்கரையில் ஒரு எண்ணை கப்பலை கைப்பற்றியுள்ளோம். இந்த கப்பல் இதுவரை கைப்பற்றப் பட்டவற்றில் மிகப்பெரியது. இது ஒரு மிக நல்ல காரணத்திற்காக கைப்பற்றப்பட்டது என்றார். கப்பல் கைப்பற்றப்பட்ட தற்கு வெனிசுலா அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. 

    • கனடாவின் இறக்குமதிப் பொருட்கள் மீது 25% வரிகளை விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்திய நேரம் அது.
    • இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்குத் தொடர்பு இருப்பதாக ட்ரூடோ கடந்த ஆண்டு பாராளுமன்றத்திலேயே பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

    கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    2013 முதல் லிபரல் கட்சியின் தலைவராகவும் 2015 முதல் கனடாவின் 23வது பிரதமராகவும் இருந்த ட்ரூடோவின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    உணவுப் பொருட்களின் விலையேற்றம், வீட்டுவசதி நெருக்கடி உள்ளிட்ட காரணிகளும் ட்ரூடோவின் செல்வாக்கு சரிய வழிவகுத்தது.

    எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியை விட லிபரல் கட்சி வெகு பின்தங்கியிருப்பதை கருத்துக்கணிப்புகள் காட்டின.

    அடுத்த தேர்தலில் கட்சியின் வெற்றி வாய்ப்புகள் ட்ரூடோவால் பாதிக்கப்படுவதாக லிபரல் கட்சி எம்பிக்கள் கருதினர். இதனால் பலர் ட்ரூடோ பதவி விலக வேண்டும் என்று பகிரங்கமாக வலியுறுத்தினர்.

    மேலும் கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக இணைக்கப் போகிறேன் என அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்து கனடாவின் இறக்குமதிப் பொருட்கள் மீது 25% வரிகளை விதிப்பதாக அச்சுறுத்திய நேரம் அது.

    டிரம்ப் அச்சறுத்தலுக்கு ட்ரூடோ போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி கனடா துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃபிரீலேண்ட் திடீரெனப் பதவியை ராஜினாமா செய்தார்.

    இதற்கு சில வாரங்களுக்கு பின் நாலாபுறமும் அழுத்தம் காரணமாக ஜனவரி 7 ட்ரூடோ தனது கட்சித் தலைவர் பதவியையும் அதன்மூலம் பிரதமர் பதவியையும் விட்டு விலகுவதாக அறிவித்தார்.

    மார்க் கார்னி வருகை 

    இதைத் தொடர்ந்து லிபரல் கட்சியின் அடுத்த தலைவராக தேர்வான மார்க் கார்னி கனடா நாட்டின் 24-வது பிரதமராகவும் மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    மார்க் கார்னி 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை கனடா வங்கியின் 8-வது ஆளுநராகவும். 2011 முதல் 2018-ம் ஆண்டு வரை நிதி நிலைத்தன்மை வாரிய தலைவராகவும் பணியாற்றியவர். எனவே டிரம்ப்பின் வர்த்தக போரை சமாளிக்க அவரால் முடியும் என லிபரல் எம்.பிக்கள் நம்பினர்.

    அதன்படி ஏகோபித்த ஆதரவுடன் கனடாவின் 24-வது பிரதமராக மார்க் கார்னி மார்ச் 14 அன்று பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற சில நாட்களிலேயே கார்னி தேர்தலை அறிவித்தார்.

    அதன்படி ஏப்ரல் மாதம் நடைபெற்ற பிரதமர் தேர்தலில் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி, பியரே பொய்லிவ்ரே தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சியைத் தோற்கடித்து நான்காவது முறையாக வெற்றி பெற்றது.

    மே மாதம் மார்க் கார்னி தனது புதிய அமைச்சரவையுடன் பதவியேற்றார். அதுமுதல் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடைய மிரட்டல்களுக்கு வரிவிதிப்புகளுக்கும் தீர்க்காமான பதிலடியை கார்னி கொடுத்து வருகிறார்.

    மேலும் ட்ருடோ ஆட்சியில் நெருக்கடியை சந்தித்த வீட்டு வசதியை மேம்படுத்த புதிய கட்டுமானங்களுக்கு தடையாக இருந்த சுற்றுச்சூழல் சட்டங்கள் மற்றும் பிற விதிமுறைகளை எளிதாக்கும் 'பில் சி-5' போன்ற சட்டங்களை மார்க் கார்னி இயற்றினார்.

    இந்தியாவுடனான உறவில் மாற்றம்:

    முந்தைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவுடன் மோதல் போக்கை கொண்டிருந்தார்.

    பஞ்சாபை தனி நாடாக பிரிக்கப் கோரும் காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கொல்லப்பட்டதில் இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்குத் தொடர்பு இருப்பதாக ட்ரூடோ கடந்த ஆண்டு பாராளுமன்றத்திலேயே பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை அதல பாதாளத்திற்குக் கொண்டு சென்றது.

    ட்ரூடோவின் இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்தது. தொடர்ந்து மோதல் முற்றவே, இரு நாடுகளும் தங்கள் தூதர்களை திரும்பபெற்றன. இந்த விவகாரம் அங்கு அதிகம் உள்ள இந்திய வம்சாவளியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், அரசியல் ஆதாயத்திற்காக ட்ரூடோ காலிஸ்தான் ஆதரவாளர்களை திருப்திபடுத்துவதாக இந்தியா குற்றம் சாட்டியது.

    இந்தத் தொடர் சர்ச்சைகள் ட்ரூடோவின் அரசியல் சரிவுக்கு மேலும் ஒரு காரணமாக அமைந்தது. இதன்பின் பிரதமரான மார்க் கார்னி, தேர்தல் பிரசாரத்தின்போதே இந்தியா உடனான உறவுகள் மீட்டெடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

    மேலும் தேர்தலில் வென்று பிரதமர் ஆன பின் அவரது புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 4 எம்.பிக்கள் இடம்பெற்றனர். 

    ட்ரூடோ தனிப்பட்ட வாழ்க்கை:

    டிசம்பர் 25, 1971 பிறந்தவர் ட்ரூடோ. இவரது தந்தை பியர் ட்ரூடோவும் கனடாவின் பிரதமராக இருந்தவர். ஜஸ்டின் ட்ரூடோ 2008-ல் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2013-ல் லிபரல் கட்சியின் தலைவரானார்.

    அமெரிக்க அதிபர் நிக்சன், ட்ரூடோ பிறந்து சில மாதங்களிலேயே கனடாவின் எதிர்காலப் பிரதமராவார் என்று என்று கணித்ததாகக் கூறப்படுகிறது.

    2005 இல் சோபி கிரேகோர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ட்ரூடோ. இந்த தம்பதிக்கு 3 [பிள்ளைகள் உள்ளனர். 2023 இல் சோபியை ட்ரூடோ பிரிந்தார்.

    இதன் பின் இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரதமர் பதவியிலிருந்து விலகிய ட்ரூடோ, ஆண்டின் பிற்பகுதியில் தற்போது பிரபல அமெரிக்க பாப் பாடகி கேட்டி பெர்ரி உடன் டேட்டிங் செய்து வருகிறார். பொது இடங்களில் அவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

    • பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் குறித்து டிரம்ப் பேசினார்
    • டிரம்பின் இந்த பேச்சு இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் அடிக்கடி பெண்கள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்குவார். அண்மையில் இத்தாலி பிரதமர் மெலோனியிடம் நீங்கள் அழகாக உள்ளீர்கள் என்று சொன்னால் கோபப்பட மாட்டீர்கள்தானே? உண்மையில் நீங்கள் ஒரு அழகான பெண் என்று டிரம்ப் கூறியது சர்ச்சையானது.

    மேலும், இதையே நான் அமெரிக்காவில் பேசியிருந்தால், என்னுடைய அரசியல் வாழ்க்கையே முடிந்திருக்கும் எனவும் டிரம்ப் கிண்டலாக தெரிவித்தார். டிரம்பின் இந்த பேச்சு இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

    இந்நிலையில், தனது வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் குறித்து டிரம்ப் பேசிய கருத்துக்கள் மீண்டும் சர்ச்சையை கிளம்பியுள்ளன.

    பென்சில்வேனியாவில் நடந்த பேரணியில் தனது நிர்வாகத்தின் பொருளாதார வெற்றிகள் குறித்து பேசிய டிரம்ப், "இன்னைக்கு நம்ம சூப்பர் ஸ்டார் கரோலினைக் கூட கூட்டிட்டு வந்தோம். அவள் அந்த அழகான முகத்துடனும், ஒரு சிறிய இயந்திர துப்பாக்கியைப் போல நிற்காத உதடுகளுடனும் உள்ளார்" என்று பேசினார்.

    டிரம்பின் இந்த பேச்சு இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

    • மானிய விலையில் அரிசி இறக்குமதி செய்யப்படுவதால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கூறினர்.
    • இந்திய அரிசிகள் அதிகமாக இறக்குமதி செய்யப்படுவதால் அமெரிக்க விவசாயிகள் பாதிக்கப்படுவதாக டிரம்ப் குற்றச்சாட்டினார்.

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றத்தில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். எரிசக்தி பயன்பாடு, குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு, அமெரிக்க குடியேற்ற கொள்கையில் மாற்றம், உலகின் பல்வேறு நாடுகளில் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு பயிற்சி உள்ளிட்ட திட்டங்களுக்காக அமெரிக்கா அளித்து வந்த நிதி உதவி நிறுத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்தார்.

    மேலும், இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதிப்பால் இந்தியாவில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. மேலும், இந்தியாவுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை அதிபர் டிரம்ப் நிர்வாகம் முன்வைத்தது.

    இந்த நிலையில், இந்திய அரிசி, கனடா உரங்கள் மீது புதிய வரிகளை விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல்வெளியாகி உள்ளது.

    வெள்ளை மாளிகையில் விவசாய பிரதிநிதிகளுடன் அதிபர் டிரம்ப் ஆலோசனை நடத்தினார். அப்போது விவசாயிகள், மானிய விலையில் அரிசி இறக்குமதி செய்யப்படுவதால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறினர். இதற்கு டிரம்ப், இந்த பிரச்சனையை கவனித்துக்கொள்வதாக அவர்களுக்கு உறுதியளித்தார். அமெரிக்க சந்தைகளை பாதிக்கும் நாடுகள் குறித்து அடையாளம் காணுமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.

    மேலும், இந்திய அரிசிகள் அதிகமாக இறக்குமதி செய்யப்படுவதால் அமெரிக்க விவசாயிகள் பாதிக்கப்படுவதாக டிரம்ப் குற்றச்சாட்டினார். 

    • இரு நாட்டு படைகளும் மாறி மாறி தாக்கி கொண்டதில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிர் இழந்தனர்.
    • இந்த போரை முடிவுக்கு கொண்டு வர மலேசியா மத்தியஸ்தம் செய்தது.

    தென்கிழக்காசிய நாடுகளான கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையே எல்லைப் பிரச்சினை காரணமாக கடந்த மே மாதம் திடீர் மோதல் வெடித்தது.

    இரு நாட்டு படைகளும் மாறி மாறி தாக்கி கொண்டதில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிர் இழந்தனர்.

    எல்லைப்பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேறினார்கள். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர மலேசியா மத்தியஸ்தம் செய்து வந்தது.

    மேலும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் இதில் தலையிட்டு இரு நாட்டு தலைவர்களுடன் பேசி மோதலை முடிவுக்கு கொண்டு வந்தார்.

    இந்நிலையில் ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று

    இதனையடுத்து மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற 47வது ஆசியான் உச்சி மாநாட்டின் டிரம்ப் முன்னிலையில் தாய்லாந்து - கம்போடியா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இந்நிலையில், தாய்லாந்து - கம்போடியா நாடுகளுக்கு இடையே மீண்டும் தாக்குதல் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உபோன் ரட்சதானி மாகாணத்தில் கம்போடியா படைகள் தாய்லாந்து படைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இதற்கு தாய்லாந்து வீரர்கள் எதிர்த்தாக்குதல் நடத்தியதாக தாய்லாந்து தெரிவித்தது. ஆனால் தாய்லாந்து தான் முதலில் தாக்கியதாக கம்போடியா கூறியது. இந்த தாக்குதலில் ஒரு வீரர் உயிரிழந்ததாகவும் 4 பேர் காயமடைந்ததாகவும் தாய்லாந்து கூறியுள்ளது.

    பின்னர் போர் விமானங்களை பயன்படுத்தி கம்போடியா மீது தாய்லாந்து பதில் தாக்குதல் நடத்தியது. இதனால் கம்போடியா - தாய்லாந்து நாடுகளுக்கு இடையே மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    • இது சரிபட்டு வராது என வெள்ளை மாளிகையில் தனது ஓவல் அலுவலக இருக்கையை விட்டு குதித்தெழுந்தார் டிரம்ப்.
    • தனக்கு பிடிக்காத இடதுசாரி மதுரோ ஆட்சியில் இருப்பதால், அவரை எதிர்க்கும் தன்னைப் போன்ற தீவிர வலதுசாரி மரியாவுக்கு அந்த பரிசு வழங்கப்பட்டது டிரம்புக்கு ஆறுதலாக அமைந்தது.

    2017-21 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்க அதிபராக செயல்பட்ட டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த தேர்தலில் எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் வேட்பாளரான இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸை வீழ்த்தி மீண்டும் அதிபாராக தேர்வானார்.

    பிரசார கூட்டதில் கொலை முயற்சி உள்ளிட்டவற்றில் இருந்து உயிர்தப்பி, உலக பணக்காரர் எலான் மஸ்க் ஏகோபித்த ஆதரவுடன் அமெரிக்கா அமெரிக்கார்களுக்கே என்று முழங்கிய குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப், தூங்கி வழிந்த ஜோ பைடன் நிர்வாகத்துக்கு மாற்றாக ஒரு உறுதியான தலைமையாக இருக்கும் என்று கருதிய அமெரிக்கர்கள் அவரை வெற்றி அடைய செய்தனர்.

    அதன்படி இந்த ஆண்டு, 2025 தொடக்கத்தில் ஜனவரி 20 அன்று அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார்.

    அதன் பின் நிகழ்ந்தவை இன்னும் பல ஆண்டுகளுக்கு பேசப்படும் வரலாறாக மாறின. அது ஒரு தரப்புக்கு உறுதியான முடிவுகளாகவும், மற்றொரு தரப்பிற்கு கிறுக்குத் தனமான முடிவுகளாகவும் படலாம்.

    ஆனால் உலகின் மிகப்பெரிய வல்லரசின் தலைவராக டிரம்ப் செய்த காரியங்கள் மொத்த உலகத்திற்கும் எதிரொலித்தன. வெள்ளை மாளிகையின் ஒவ்வொரு அறிவிப்பும் உலகை ஒரு புயல் போலச் சுழற்றியடித்தது.

    அப்படி அவர் செய்த விஷயங்கள் என்ன என்பதை பார்ப்போம்.

    முதலாவதாக வர்த்தகம். உலகிலேயே பணக்கார நாடான அமெரிக்கா மீது மற்ற நாடுகள் அதிக வரி விதிப்பதாக தொடர்ந்து புலம்பிய டிரம்ப் எடுத்த அதிரடி நடவடிக்கை தான் பதில் "வரிவிதிப்பு". அதுவரை உயிர் பயத்தை காட்டும் உலகப் போரை மட்டுமே கேள்விப்பட்டிருந்த பலருக்கு 'வர்த்தக போர்' எப்படி இருக்கும் என்பதை காட்டியவர் டிரம்ப்.

    உலகளாவிய வர்த்தக முறையை தலைகீழாக மாற்றி, பங்குச்சந்தைகளை பல்லிளிக்க வைத்த டிரம்ப்பின் வரிவிதிப்புகள் பிரசித்தி பெற்றவை.

    ஏப்ரல் 2 ஆம் தேதி டிரம்ப் எடுத்த அஸ்திரம் தான் வரிவிதிப்பு. ஏப்ரல் 2-ஐ அமெரிக்காவின் 'விடுதலை தினம்' என வர்ணித்த டிரம்ப் உலக நாடுகள் மீது உயர்த்தப்பட்ட இறக்குமதி வரிகளை நிர்ணயம் செய்து அறிவித்தார். பெரும்பாலான நாடுகளின் பொருட்களுக்கு 10% அடிப்படை வரி அமலுக்கு வந்தது.

    இதுவே வர்த்தக போரின் தொடக்கமாக அமைந்தது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் செய்வதறியாது திகைத்தாலும் சீனா, கனடா உள்ளிட்ட நாடுகள் பதில் வரிகளை விதித்தன. இப்படி தொடர்ந்து மாறி மாறி வரி விதித்துக் கொண்டே பாதி வருடம் கழிந்தது. இதனால் உலக பங்குச்சந்தைகளும் பல முறை ஆட்டம் கண்டன. உலகளாவிய வர்த்தகத்தில் நிச்சயமின்மை ஏற்பட்டது.

    நிலைமை இப்படி இருக்க இந்தியாவை குறிவைத்து டிரம்ப் அம்பு எய்ய தொடங்கினார். ஏற்கனவே இந்தியா அமெரிக்கா மீது அதிக வரி விதிப்பதாக புலம்பி வந்த டிரம்ப், ரஷியா மீதான மேற்கு நாடுகளின் தடைகளை பயன்படுத்தி உக்ரைன் போருக்கு நிதியளிக்கும் வகையில் இந்தியா ரஷியாவிடம் இருந்து அதிகளவில் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதாக குற்றம்சாட்டி இந்தியாவுக்கு அபராதமாக இந்திய பொருட்களுக்கு 25 சதவீத இறக்குமதி வரியை விதித்தார் டிரம்ப்.

    இது ஏற்கனவே இருந்த 25 வரியுடன் சேர்த்து இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரிச்சுமையாக மாறியது. ஒரு புறம் பிரதமர் மோடியை தனது நண்பர் என்று புகழ்ந்தபடி மறுபுறம் இந்த பாரபட்சமான வரிகளை டிரம்ப் இந்தியா மீது விதித்தது கவனிக்கத்தக்கது. இதனால் தமிழ்நாட்டிலும் பல இறக்குமதி சார்ந்த தொழில்கள் பாதிக்கப்பட்டன.

    வரியை நிறுத்தி வைக்க எந்தவித கால நீட்டிப்பும் கிடையாது என்று அறிவித்த டிரம்ப், 90 நாட்கள் என்ற குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை எட்டும்படி சுமார் 200 நாடுகளை வலியுறுத்தியது அவரது வர்த்தக அடாவடி அணுகுமுறையை வெளிப்படுத்தியது.

    அடுத்ததாக குடியேற்றம். ஜனவரியில் பதவியேற்ற முதல் நாளிலேயே அமெரிக்க மண்ணில் பிறந்த அனைவருக்கும் குடியுரிமை வழங்கும் விதியை தூக்கி எறிய "பிறப்பால் குடியுரிமை" பெறுவதற்கு கட்டுப்பாடு விதித்து நிர்வாக உத்தரவு பிறப்பித்தார். இது பின்னர் நீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டு கீழ் நீதிமன்றங்கள் கடந்து உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

    இந்த ஷாக் ட்ரீட்மென்ட்க்கு பிறகு அமெரிக்காவின் சட்டவிரோத குடியேறிகளை நாடுகடத்துவதாக ஆரம்பித்த டிரம்ப் அரசின் நடவடிக்கை மனிதாபிமற்ற முறையில் மாறியது. டிரம்ப் அரசின் குடிவரவு துறை அதிகாரிகள் பாரிய சோதனைகளை நிகழ்த்தி பல குடும்பங்களை ராணுவ விமானத்தில் கை கால்களை சங்கிலியால் பிணைத்து அவர்களின் சொந்த நாடுகளுக்கு நாடுகடத்தியது. இந்த ஆண்டு 3,258 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அண்மையில் மக்களவையில் தெரிவித்திருந்தார்.

    அடுத்ததாக போர் நிறுத்தம். நீண்டகாலமாக நடைபெற்று வந்த உலகின் முக்கிய மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவதாக கங்கணம் கட்டிய டிரம்ப் அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார். காசா போரை தவிர்த்து இதற்கும் அவர் பயன்படுத்திய அஸ்திரம் வர்த்தகம் தான்.

    காசா மீது இஸ்ரேல் இரக்கமற்ற முறையில் நடத்திக்கொண்டிருந்த தாக்குதல்களில் இதுவரை 70,000 மக்கள் கொல்லப்பட்டனர். கடந்த மே முதல் ஆகஸ்ட் வரை டிரம்ப் முன்மொழிந்த போர் நிறுத்தம் அமலில் இருந்தது. ஆனால் அதன் பின் இஸ்ரேல் ரத்த வெறி அடங்காமல் மீண்டும் போரை தொடங்கியது.

    காசா முற்றிலுமாக சிதைக்கபட்டது. மக்களுக்கு செல்ல வேண்டிய அத்தியாவசிய பொருட்களை தடுத்து நிறுத்தி மனிதனால் உருவாக்கப்பட்ட பெரும் பஞ்சத்தை இஸ்ரேல் உருவாக்கியது. பட்டினியால் நூற்றுக்கணக்கானோர் குறிப்பாக குழந்தைகள் எலும்பும் தோலுமாக மாண்டனர்.

    சர்வதேச அழுத்தங்களுக்கு செவிமடுக்காத இஸ்ரேல், எஜமானர் ஸ்தானத்தில் உள்ள அமெரிக்காவுக்கு மட்டும் அஞ்சியது. அதே நேரம் இஸ்ரேலை செல்லப் பிள்ளையாக நடத்திய அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கி அரவணைத்தது. அதேநேரம் இது சரிபட்டு வராது என வெள்ளை மாளிகையில் தனது ஓவல் அலுவலக இருக்கையை விட்டு குதித்தெழுந்த டிரம்ப் தனது 20 அம்ச அமைதி திட்டத்தை முன்மொழிந்தார்.

    அதன்படி அக்டோபர் 9 முதல் போர் நிறுத்தம் பெயரளவில் அமலுக்கு உள்ளது. ஒப்பந்தப்படி ஹமாஸ், எஞ்சிய இஸ்ரேல் பணய கைதிகளை ஒப்படைத்தது. ஆனால் போர் நிறுத்தத்தை மீறி அக்டோபர் 9 க்கு பிறகும் இஸ்ரேல் காசா மீது நடத்தி வரும் தாக்குதல்களில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

    இதற்கிடையே டிரம்ப் காசா மக்களை வேறு நாடுகளுக்கு அனுப்பி விட்டு அந்நகரை பணக்காரர்களுக்கான ரிசார்ட் நகரமாக மாற்றும் தனது தொலைநோக்கு திட்டத்தையும் முன்வைத்து விமர்சனத்துக்கு உள்ளார். காசாவை சர்வதேச படைகள் கட்டுப்பாட்டில் எடுப்பது என ஏறக்குறைய டிரம்ப் உடைய 20 அம்ச அமைதி திட்டமும் அதற்கான கூறுகளையே அதிகம் கொண்டுள்ளது.

    இதற்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக மே 7 இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மேற்கொண்டது.இதைத்த்தொடர்ந்து இரு நாடுகளுக்கும் வெடித்த மோதல் 3 நாட்களில் அதாவது மே 9 ஆம் தேதி மாலை அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.

    மோதலை தொடர்ந்தால் வர்த்தகம் செய்யமாட்டேன் என பிரதமர் மோடியையும், பாக் பிரதமர் ஷெரீபையும் மிரட்டி தானே இந்த போரை நிறுத்தியதாக டிரம்ப் இதுவரை 60 முறைக்கும் மேல் கூறிவிட்டார். அதேநேரம் இந்தியா பாகிஸ்தானுடன், தாய்லாந்து - கம்போடீயா, தாய்லாந்து ருவாண்டா உள்ளிட்ட 8 போர்களை 6 மாதத்தில் தான் நிறுத்தியதாக தம்பட்டம் தட்டிய டிரம்ப் தனது அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என அடம் பிடித்தார். ஆனால் அது வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியாவுக்கு கொடுக்கப்பட்டது.

    வெனிசுலாவில் தனக்கு பிடிக்காத இடதுசாரி மதுரோ ஆட்சியில் இருப்பதால், அவரை எதிர்க்கும் தன்னைப் போன்ற தீவிர வலதுசாரி மரியாவுக்கு அந்த பரிசு வழங்கப்பட்டது டிரம்ப்புக்கு ஆறுதலாக அமைந்தது. அதேநேரம் அண்மையில் உலக கால்பந்து சம்மேளனம் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கி அவரின் வட்டத்தை போக்கியது. சொல் பேச்சு கேட்டும் மற்ற நாடுகளின் போரை நிறுத்தியது போல் உக்ரைன் மீதான ரஷியா போரை நிறுத்த டிரம்ப் அவ்வளவு சுலபமாக நிறுத்த முடியவில்லை.  

    ரஷிய அதிபர் புதினை, ரஷியாவை ஒட்டிய அமெரிக்க பிரதேசமாக அலாஸ்காவில் நேரில் சந்தித்து டிரம்ப் பேசிப் பார்த்தார். பேரம் படியவில்லை.தொடர்ந்து அமைதியை நிலைநாட்டியே தீருவேன் என டிரம்ப் உறுதியுடன் இருக்கிறார்.

    ஆனால் கடந்த ஜூன் 22 ஆம் தேதி ஈரானுக்கு அமேரிக்காவில் இருந்து போர் விமானங்களை அனுப்பி தாக்குதல் நடத்தச் செய்த டிரம்ப், அந்நாட்டின் அணு ஆயுத கிடங்குகளை அழித்ததாக அறிவித்தார். ஆனால் ஈரான் இதை மறுத்து வருகிறது. அந்த சமயத்தில் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே

    இதுதவிர பிந்தங்கிய நாடுகளுக்கு வல்லரசு என்ற முறையில் UNAID திட்டம் மூலம் அமெரிக்கா அளித்து வந்த நிதியுதவிகளை மானாவாரியாக நிறுத்திய டிரம்ப், அமெரிக்கர்களையும் விட்டுவைக்கவில்லை. சிக்கனம் பிடிக்கிறேன் பேர்வலி என்ற பெயரில் அரசுத்துறைகளில் ஆயிரக்கணக்கில் பணி நீக்கங்கங்களை மேற்கொண்டார்.

    இருப்பினும் காண்டில் இருந்த அமெரிக்கர்களை பிக் பியுட்டிபுல் பில் என்ற வரிக்குறைப்பு மசோதா மூலம் சற்று தாஜா செய்தார் டிரம்ப். இருப்பினும் ஜனநாயக விழுமியங்களை நசுக்கும் விதமாக தனது பேச்சை கேட்காத பல்கலைக்கழகங்களுக்கு நிதியை நிறுத்தியது, ஊடகங்கள் மீதான கட்டுப்பாடு என ஒரு சர்வாதிகார தலைவருக்கு ஏற்ற சர்வ லட்சணங்களோடு டிரம்ப் செயல்பட்டு வருகிறார்.

    இதற்கிடையே வெவ்வேறு துறைகளுக்கு நிதி வழங்குவதில் எதிர்கட்சியுடன் ஏற்பட்ட முரண்பட்டால் அமெரிக்காவில் பொதுமுடக்கம் ஏற்பட்டது. இதனால் பல அரசு துறைகள் ஊதியமின்மை, ஊழியர்கள் பற்றாக்குறை ஆகியவற்றால் செயல்பட முடியாமல் ஸ்தம்பித்தது.

    இந்த முடக்கம் 43 நாட்கள் தொடர்ந்து கடந்த நவம்பரில் எதிர்கட்சிகளுடன் தற்காலிக உடன்பாடு ஏற்பட்டு முடிவுக்கு வந்தது. இதற்கிடையே தற்போது போதைப்பொருட்களை தடுக்கிறேன் என கூறி களமிறங்கி உள்ள டிரம்ப் தனது பரம எதிரி வெனிசுலா அதிபர் மதுரோ மீது தனது முழு கவனத்தையும் திரும்பியுள்ளார். வெனிசுலா அமைந்துள்ள கரீபியன் கடற்பரப்பில் அமெரிக்க படைகளை நிலைநிறுத்துவது, மதுரோ தலைக்கு விலை வைப்பது என படு பிஸியாக டிரம்ப் இயங்கி வருகிறார்.

    வயதானதால் டிரம்ப் என்ன செய்கிறார், என்ன பேசுகிறார் என அவருக்கே தெரியவில்லை என்று சிலர் கருதினாலும், அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற அவரின் கொள்கையில் அவர் உறுதியாக இருப்பது கண்கூடு.

    வெளிநாட்டு பணியாளர்களுக்கான H1B விசா கட்டுப்பாடுகள், வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டுப்பாடுகள், மூன்றாம் உலக நாட்டவர் அமெரிக்காவுக்குள் நுழைய தடை உள்ளிட்ட அவரது முடிவுகள் இதற்கு வலு சேர்கின்றன.

    மொத்தத்தில் தனது முதல் பதவிக்காலத்தை விட மிக தீவிரமாக செயல்பட்டு வரும் டிரம்ப் ஒவ்வொரு நாளும் உலகை ஆச்சர்யத்திலோ அல்லது அதிர்ச்சியிலோ ஆழ்த்தி வருவது தொடர்கிறது. இனியும் தொடரும்.                                                                     

    • அமெரிக்காவிற்குள் 400 டன் கோகைன் கடத்த உதவியதற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது
    • அமெரிக்க சிறைச்சாலைத் துறையும் ஜுவான் ஆர்லாண்டோ விடுவிக்கப்படும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது

    அமெரிக்காவிற்குள் 400 டன் கோகைன் கடத்த உதவியதற்காக கடந்த வருடன் 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஹோண்டுராஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஜுவான் ஆர்லாண்டோ ஹெர்னாண்டஸ்க்கு டொனால்டு டிரம்ப் தனது அதிபர் பதவியை பயன்படுத்தி மன்னிப்பு வழங்கி உள்ளார்.

    இதன்மூலம், அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியாவில் உள்ள சிறையில் இருந்து ஜுவான் ஆர்லாண்டோ விடுவிக்கப்பட்டு, மீண்டும் ஒரு சுதந்திர மனிதராகிவிட்டதாக அவரது மனைவி சமூக ஊடகங்களில் அறிவித்தார்.

    இதற்கிடையில், அமெரிக்க சிறைச்சாலைத் துறையும் நேற்று, ஜுவான் ஆர்லாண்டோ விடுவிக்கப்படும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

    ஹோண்டுராஸில் நடக்க உள்ள தேர்தலில் டிரம்ப், ஜுவான் ஆர்லாண்டோவின் கட்சியை ஆதரிக்கிறார். எனவே இந்த மன்னிப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    வெனிசுலா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளில் செயல்படும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுக்கு எதிராக டிரம்ப் கடுமையாக எதிர்வினை ஆற்றி வரும் நிலையில் ஆர்லாண்டோவுக்கு மன்னிப்பு வழங்கி உள்ளது பேசுபொருளாகி உள்ளது. 

    • ஆப்கானிஸ்தான் குடிமக்களின் விசா பரிசீலனையை அமெரிக்கா உடனடியாக நிறுத்தியது.
    • அமெரிக்கர் அல்லாதோருக்கு கிடைத்து வரும் அரசு சலுகைகளையும் தான் நிறுத்தப்போவதாக டிரம்ப் உறுதிபட தெரிவித்தார்.

    அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே உள்ள மெட்ரோ நிலையத்தில் ஆப்கானிஸ்தான் இளைஞர் நேற்று முன் தினம் நடத்திய துபாஷிச்சூட்டில் 2 காவல்படை வீரர்கள் படுகாயமடைந்தனர். அதில் இரு பெண் வீராங்கனை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த சம்பவத்தில் தாக்குதல் நடத்திய மிருகம் பெரிய விலையை கொடுக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.

    மேலும் ஆப்கானிஸ்தான் குடிமக்களின் விசா பரிசீலனையை அமெரிக்கா உடனடியாக நிறுத்தியது.

    தாக்குதல் நடத்திய இளைஞர் கடந்த ஜோ பைடன் ஆட்சியில் 2021 இல் சரியான பரிசோதனை இல்லாமல் அமெரிக்காவுக்குள் நுழைந்தவர் என டிரம்ப் குற்றம்சாட்டினார்.

    இந்நிலையில் அமெரிக்காவுக்கு மூன்றாம் உலக நாடுகளில் இருந்து இடம்பெயர்வை முழுமையாக தனது நிர்வாகம் நிறுத்த உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இதன் மூலம் அமெரிக்கா மீண்டும் தனது பழைய நிலைக்கு திரும்ப அவகாசம் கிடைக்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

    அவரின் சமூக வலைதள பதிவில், முந்தைய ஜோ பைடன் நிர்வாகம் மில்லியன் கணக்கானோரை அமெரிக்காவுக்குள் அனுமதித்ததை தான் ரிவர்ஸ் செய்ய போவதாக தெரிவித்த டிரம்ப், அமெரிக்காவுக்கு பயன்படாதோரும், அமெரிக்காவை நேசிக்க முடியாத அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என சூளுரைத்துள்ளார். அதுமட்டுமின்றி அமெரிக்கர் அல்லாதோருக்கு கிடைத்து வரும் அரசு சலுகைகளையும் தான் நிறுத்தப்போவதாக டிரம்ப் உறுதிபட தெரிவித்தார்.

    அமெரிக்கா, அதன் நட்பு நாடுகள், தொழில்வளர்ச்சி பெற்ற ஜனநாயகங்கள் முதல் உலக நாடுகள், சோவியத் யூனியன்(ரஷியா), சீனாவை சார்ந்த நாடுகள் இரண்டாம் உலக நாடுகள், இந்த இரண்டு அணியிலும் இல்லாத, வளர்ந்து வரும் அல்லது பின்தங்கிய ஆபிரிக்க, ஆசிய, லத்தீன் அமெரிக்க நாடுகள் மூன்றாம் உலக நாடுகள் என அழைக்கப்டுகின்றன.

    தற்போதைய மூன்றாம் உலக நாடுகள் பட்டியலில், ஆப்கானிஸ்தான், ஈரான், மியான்மர், காங்கோ, கியூபா, எரித்திரியா, ஹெய்டி, வெனிசுலா, சோமாலியா, சூடான் உள்ளிட்ட சில நாடுகள் இடம்பெற்றுள்ளன. 

    • போலீசார் சுட்டதில் ரஹ்மானுல்லாவுக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தாலும் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை
    • அவர் புளோரிடாவில் உள்ள தனது மார்-ஏ-லாகோ பண்ணை வீட்டில் இருந்தார்.

    அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே வாலிபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கிசூடு நடத்தினார்.

    இந்த தாக்குதல் வெள்ளை மாளிகையின் வடமேற்கே உள்ள ஒரு மெட்ரோ நிலையம் அருகே நடந்தது. இதில் மேற்கு வர்ஜீனியாவை சேர்ந்த தேசிய காவல்படையின் 2 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

    முதலில் பெண் காவலர் மீது துப்பாக்கிசூடு நடத்திய அந்த வாலிபர் பின்னர் மற்றொரு காவலரையும் சுட்டுள்ளார். உடனே மற்ற பாதுகாப்பு படை வீரர்கள், தாக்குதல் நடத்திய நபர் மீது துப்பாக்கியால் சுட்டு அவரை மடக்கி பிடித்தனர்.

    படுகாயம் அடைந்த 2 பாதுகாப்பு படை வீரர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 29 வயதான ரஹ்மானுல்லா லகன்வால் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

    போலீசார் சுட்டதில் ரஹ்மானுல்லாவுக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தாலும் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் நிலவிய குழப்பமான சூழலின்போது அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தவர் என்றும் அப்போதைய அதிபர் ஜோபைடன் நிர்வாகத்தின் திட்டமான ஆபரேஷன் அல்லீசஸ் வெல்கம் மூலம் அமெரிக்காவிற்குள் நுழைந்தார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் துப்பாக்கிசூடு நடத்திய காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    துப்பாக்கிச்சூடு நடந்த போது வெள்ளை மாளிகை யில் அதிபர் டிரம்ப் இல்லை. அவர் புளோரிடாவில் உள்ள தனது மார்-ஏ-லாகோ பண்ணை வீட்டில் இருந்தார். இச்சம்பவத்துக்கு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறும்போது, துப்பாக்கி சூடு சம்பவம் நமது சிறந்த தேசிய காவல்படை வீரர்கள் மீதான கொடூரமான தாக்குதல் ஆகும். தாக்குதல் நடத்திய நபர் ஒரு மிருகம். அவர் காயமடைந்திருந்தாலும் அந்த மிருகம் மிகப் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும். இது ஒரு தீய, வெறுப்பு மற்றும் பயங்கரவாத செயல். முந்தைய ஜோபைடன் நிர்வாகம் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்தவர்களை சரியாக ஆய்வு செய்யவில்லை என்றார்.

    இதற்கிடையே வாஷிங்டன் நகரத்துக்கு மேலும் 500 தேசிய பாதுகாப்புப் படை வீரர்களை அனுப்புமாறு பாதுகாப்புச் செயலாளருக்கு டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார். 

    • முதலில் பெண் காவலர் மீது துப்பாக்கிசூடு நடத்திய அந்த வாலிபர் பின்னர் மற்றொரு காவலரையும் சுட்டுள்ளார்.
    • ஆபரேஷன் அல்லீசஸ் வெல்கம் மூலம் அமெரிக்காவிற்குள் நுழைந்தார்

    அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே வாலிபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கிசூடு நடத்தினார்.

    இந்த தாக்குதல் வெள்ளை மாளிகையின் வடமேற்கே உள்ள ஒரு மெட்ரோ நிலையம் அருகே நடந்தது. இதில் மேற்கு வர்ஜீனியாவை சேர்ந்த தேசிய காவல்படையின் 2 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

    முதலில் பெண் காவலர் மீது துப்பாக்கிசூடு நடத்திய அந்த வாலிபர் பின்னர் மற்றொரு காவலரையும் சுட்டுள்ளார். உடனே மற்ற பாதுகாப்பு படை வீரர்கள், தாக்குதல் நடத்திய நபர் மீது துப்பாக்கியால் சுட்டு அவரை மடக்கி பிடித்தனர்.

    படுகாயம் அடைந்த 2 பாதுகாப்பு படை வீரர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 29 வயதான ரஹ்மானுல்லா லகன்வால் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

    போலீசார் சுட்டதில் ரஹ்மானுல்லாவுக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தாலும் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் நிலவிய குழப்பமான சூழலின்போது அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தவர் என்றும் அப்போதைய அதிபர் ஜோபைடன் நிர்வாகத்தின் திட்டமான ஆபரேஷன் அல்லீசஸ் வெல்கம் மூலம் அமெரிக்காவிற்குள் நுழைந்தார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் துப்பாக்கிசூடு நடத்திய காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    துப்பாக்கிச்சூடு நடந்த போது வெள்ளை மாளிகை யில் அதிபர் டிரம்ப் இல்லை. அவர் புளோரிடாவில் உள்ள தனது மார்-ஏ-லாகோ பண்ணை வீட்டில் இருந்தார். இச்சம்பவத்துக்கு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ×