என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ambedkar Book Launch"

    • த.வெ.க. தலைவர் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
    • புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறும் நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    விழாவில் கலந்து கொள்ள முன்கூட்டியே அரங்கிற்கு வந்திருந்த த.வெ.க. தலைவர் விஜய், விழா அரங்கில் அமைக்கப்பட்டு இருந்த அம்பேத்கர் சிலையுடன் அமர்ந்து செல்பி எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    இதைத் தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டு இருந்த அம்பேத்கர் சிலைக்கு த.வெ.க. தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். 

    • எந்த சூழலில் அங்கு போய் படித்தார் என்பது தான் மிகப்பெரிய விஷயம்.
    • நம் நாட்டில் இருக்கும் எல்லாருக்கும் பெருமை தேடிக் கொடுத்தவர்.

    சென்னையில் நடைபெற்ற "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" நூல் வெளியீட்டு விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய் அத்தனை சக்திகளும் தடையாக இருந்த போது 100 ஆண்டுகளுக்கு முன்னரே நியூ யார்க் சென்று சாதித்தவர் அம்பேத்கர் என்று தெரிவித்தார். மேலும் எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன் என்று கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர், "இன்னைக்கும் நிறைய பேரிடம் உங்களுக்கு பிடித்த சுற்றுலா இடம் எது என்றால் நியூ யார்க் என்று தான் கூறுவார்கள். ஆனால் நூறு ஆண்டுக்கு முன்பே நியூ யார்க் சென்று உலக புகழ் பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்து டாக்டர் பட்டம் பெற்று சாதித்த அசாத்தியமானவர் இருந்தார். அவர் எந்த சூழலில் அங்கு போய் படித்தார் என்பது தான் மிகப்பெரிய விஷயம்."

    "அன்றைக்கு அந்த மாணவரிடம், நீ இந்த சாதியில் பிறந்திருக்கிறாய் உனக்கெல்லாம் படிக்க தகுதியில்ல, நீயெல்லாம் ஏன் பள்ளிக்கூடம் வருகிறாய் என்று அவர் பிறந்த சமூகமே அவரை தடுத்தது. அதைமீறி பள்ளிக்கூடம் சென்றாலும் சக மாணவர்களோடு உட்கார்ந்து படிக்க அவருக்கு அனுமதியில்லை. தாகம் எடுத்தால் குடிக்க தண்ணீர் கூட இல்லை. அப்படி அத்தனை சக்திகள் அவருக்கு எதிராக இருந்தது."

    "ஆனால் ஒரே சக்தி மட்டும் தான் நீ தொடர்ந்து படி என்று கூறிக் கொண்டே இருந்தது. அது தான் அந்த மாணவருக்குள் இருந்த வைராக்கியம். எப்படி அந்த சின்ன வயதில் அந்த மாணவருக்கு அந்த வைராக்கியம் வந்தது என்பதை நினைத்து பிரம்மிப்பாக இருந்தது. அந்த வைராக்கியம் தான் அந்த மாணவரை பிற்காலத்தில் இந்த நாட்டின் மிகப்பெரிய ஆளுமையாக மாறுவதற்கும் காரணமாக இருந்தது."

    "எனக்கு தெரிந்து உலக வரலாற்றில் யாரும் இப்படியொரு மாற்றத்தை கண்டிருக்க மாட்டார்கள். அந்த மாணவர் வேறு யாருமில்லை, நம்முடைய அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தான். வன்மத்தை மட்டுமே காட்டிய இந்த சமூகத்திற்கு திரும்பி அவர் என்ன செய்தார் என்பதை படித்து பார்க்கும் போது, அது என்னை மெய்சிலிர்க்க வைத்தது."

    "பிறப்பால் நாம் அனைவரும் சமம், நீ எந்த சாதியில் பிறந்து இருந்தாலும், எந்த மதத்தை நீ பின்பற்றினாலும், சட்டத்தின் முன் நாம் அனைவரும் சமம் என்ற உயரிய கோட்பாட்டை உறுதி செய்யும் நம் அரசியல் சாசனத்தை வழங்கி நம் நாட்டில் இருக்கும் எல்லாருக்கும் பெருமை தேடிக் கொடுத்தவர்."

    "இன்னைக்கு வெளியாகும் "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" என்ற இந்த புத்தகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள், நேர்காணல்கள் எல்லாமே இருக்கிறது. அதில் என்னை மிகவும் யோசிக்க வைத்தது அவர் எழுதிய சுயசரிதை தான். அதற்கு தலைப்பு "வெயிடிங் ஃபார் ஏ விசா" என்று வைத்திருந்தார். அதில் அவர் வாழ்க்கையில் எதிர்கொண்ட விஷயங்கள், அவரை பாதித்த விஷயங்கள் என ஆறு சம்பவங்களை குறிப்பிட்டு இருந்தார். அதில் இரு விஷயங்கள் என்னை பாதித்தது," என்று தெரிவித்தார்.

    • சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர்.
    • நூல் வெளியீட்டு விழாவில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14 ஆம் தேதியை ஜனநாயக உரிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது குறித்து பேசிய அவர், "ஒரு வேளை திரு. அம்பேத்கர் இன்று உயிருடன் நம்முடன் இருந்தால் அவர் என்ன நினைப்பார். இன்றைய நம் இந்தியாவை நினைத்து அவர் வெட்கப்படுவாரா, பெருமைப்படுவாரா. ஒருவேளை வருத்தப்பட்டால் எதை நினைத்து வருத்தப்படுவார். இன்று நம் நாடு முழு வளர்ச்சி அடைய வேண்டுமெனில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்றால் அரசியலமைப்பு சட்டம் காக்கப்பட வேண்டும்."

    "அதற்கான பொறுப்பு, கடமை நம் அனைவரிடமும் இருக்க வேண்டும் என்று தோன்றியது. அந்த பொறுப்போடும், கடமையோடும் தான் இதை கூறிக் கொள்கிறேன். ஜனநாயகத்தின் ஆனி வேர் சுதந்திரமான, நியாயமான தேர்தல். தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்று நான் கூறவில்லை. ஆனால் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் தான் நடக்கிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நம் ஒவ்வொரு இந்தியனுக்கும் இருக்க வேண்டும் என்று தோன்றியது."

    "அது அமைய தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்து அடிப்படையில் மட்டும் தான் நியமிக்கப்பட வேண்டும் என்பதே என் வலிமையான கோரிக்கை. ஏப்ரல் 14, அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள். அன்று தான் நம் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் உரிமைகள் பிறந்த தினம். இதனால் அந்த தேதியை இந்தியர்களின் ஜனநாயக உரிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும் என்று தாழ்மையான வேண்டுகோள். இதை இந்திய ஒன்றிய அரசிடம் நான் முன்வைக்கிறேன்," என்று தெரிவித்தார்.

    • எதையும் கண்டுக் கொள்ளாமல் ஒரு அரசு மேலிருந்து நம்மை ஆட்சி செய்கிறது.
    • அம்பேத்கர் அவர்கள் பார்த்தால் வெட்கப்பட்டு தலைகுனிந்து போவார்.

    சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய த.வெ.க. தலைவர் விஜய், சம்பிரதாயத்திற்காக மழைநீரில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்தார்.

    இது குறித்து பேசிய அவர், "இன்று மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவை எதையும் கண்டுக் கொள்ளாமல் ஒரு அரசு மேலிருந்து நம்மை ஆட்சி செய்கிறது. அங்கு தான் அரசு அப்படி இருக்கிறது என்றால், இங்கு இருக்கும் அரசு எப்படி இருக்கிறது?"

    "இங்க நம் வேங்கைவயல் என்ற ஊரில் என்ன நடந்தது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். சமூகநீதி பேசும் இங்குள்ள அரசு அதற்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இத்தனை வருடங்கள் கழித்தும் ஒரு துரும்பையும் கிள்ளி போடவில்லையே. இதையெல்லாம் இன்று அம்பேத்கர் அவர்கள் பார்த்தால் வெட்கப்பட்டு தலைகுனிந்து போவார்."

    "இன்று நடக்கும் பிரச்சினைகள், கொடுமைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும். ஆனால் நடக்கும் பிரச்சினைகள் ஒன்றா, இரண்டா? பெண் குழந்தைகளுக்கு எதிராக, பெண்களுக்கு எதிராக, ஏன் மனித உயிர்களுக்கு எதிராக. இதையெல்லாம் நாம் படிக்கிறோம், பார்த்து, மற்றவர்களிடம் இருந்து கேட்டு தெரிந்து கொள்கிறோம்."

    "இவை எல்லாவற்றுக்குமான தீர்வு என்ன தெரியுமா? நம் தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பாதுகாப்புடன், முறையாக, முழுமையாக அளிக்கும், மக்களை உண்மையாகவே நேசிக்கும் ஒரு நல்ல அரசு. இது அமைந்தாலே போதும், இதைத் தான் மிகவும் எளிமை என்று கூறினேன்."

    "இங்கு தினந்தோரும் நடக்கும் பிரச்சினைகளுக்கு சம்பிரதாயத்திற்காக ட்வீட் போடுவதும், சம்பிரதாயத்திற்காக அறிக்கை விடுவதும், சம்பிரதாயத்திற்காக நானும் மக்களோடு மக்களாக இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வதும், சம்பிரதாயத்திற்காக மழை நீரில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதும் என்று எனக்கு அதில் கொஞ்சமும் உடன்பாடு இல்லை. ஆனால், நாமும் சில சமயங்களில் சம்பிரதாயத்திற்காக இதையெல்லாம் சில நேரங்களில் செய்ய வேண்டியதாகி விடுகிறது."

    "மக்கள் உரிமைகளுக்காகவும், அவர்களோடு உணர்வுப்பூர்வமாக இருக்க வேண்டும். என்னை அவர்களின் குடும்பத்தில் ஒருத்தராக நினைக்கும் ஒவ்வொருத்தருக்கும், தமிழ்நாட்டில் அவர்களுக்கு எங்கு, என்ன பிரச்சினை நடந்தாலும் அவர்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் உணர்வுப்பூர்வமாக இருப்பேன்," என்று தெரிவித்தார்.

    • என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை.
    • எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடியும்.

    சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய த.வெ.க. தலைவர் விஜய், கூட்டணி கணக்குகளை 2026 ஆம் ஆண்டு மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள் என்று தெரிவித்தார்.

    இது குறித்து பேசிய அவர், "மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத, மக்களுக்கு அடிப்படை சமூகநீதியான பாதுகாப்பை கூட உறுதி செய்ய இயலாத கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி இறுமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை. நீங்க உங்கள் சுயநலத்திற்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் கூட்டணி கணக்குகள் அனைத்தும் 2026-ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்."

    "கடைசியாக ஒரு விஷயம். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அவர்களால் இன்று வரமுடியாமல் ஆகிவிட்டது. அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவுக்கு கூட அவரால் கலந்துகொள்ள முடியாத அளவுக்கு அவருக்கு கூட்டணி கட்சிகள் சார்ந்து எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தாலும், நான் இப்போ சொல்கிறேன். அவரின் மனம் முழுமையாக இன்று நம்மோடு தான் இருக்கும்," என்று தெரிவித்தார். 

    ×