search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cabinet portfolio"

    • சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதல்வர் பதவி ஏற்றார்.
    • பவன் கல்யான் துணை முதல்வராக பதவி ஏற்றார்.

    ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம்,ஜனசேனா, பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது.

    175 பேரவை தொகுதிகளில் 164 தொகுதிகளையும், 25 மக்களவை தொகுதிகளில் 21 தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் கூட்டணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதல்வர் பதவி ஏற்றார்.

    அந்த வகையில், ஆந்திரப் பிரதேசத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவையின் இலாக்கா அறிவிக்கப்டட்டுள்ளது.

    முதல்வர் சந்திரபாபு நாயுடு பொது நிர்வாகத் துறை, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட துறைகளை தன்வசம் வைத்துள்ளார்.

    அதன்படி, பவன் கல்யாண் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சித் துறை, ஊரக குடிநீர் விநியோகம், வனத்துறை, சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகள் பவன் கல்யானுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ், அமைச்சரவையில் 3வது இடத்தில் உள்ளார். அவருக்கு, மனிதவள மேம்பாடு, ஐ.டி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    அச்சன் நாயுடுவுக்கு விவசாயம், கூட்டுறவு உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு.

    உள்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் அனிதாவிற்கு ஒதுக்கீடு.

    சுகாதாரத்துறை அமைச்சர் சத்திய குமார் யாதவுக்கு ஒதுக்கீடு.

    ஆந்திரா நிதியமைச்சராக பையாலுவா கேசவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    டாக்டர் நிம்மலா ராம நாயுடுவுக்கு நீர்வளத்துறை ஒதுக்கீடு.

    ×